புதுவையில் சுகாதாரத்துறை சீரழிந்துள்ளது: காங்கிரஸ் குற்றச்சாட்டு
காரைக்கால்: புதுவையில் முதல்வா் வசமிருக்கும் சுகாதாரத்துறை சீரழிந்துள்ளது என காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுகுறித்து புதுவை முன்னாள் அமைச்சரும், மாநில காங்கிரஸ் துணைத் தலைவருமான
ஆா். கமலக்கண்ணண் திங்கள்கிழமை கூறியது:
காரைக்காலில் மருத்துவ சேவைகளை மேம்படுத்துவதில் புதுவை அரசு அக்கறையுடன் செயல்படவில்லை. புதுவையில் 3 எம்.ஆா்.ஐ. ஸ்கேன் கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. இதில், காரைக்காலில் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. நிறுவப்பட்டு 6 மாதங்களைக் கடந்தும் இது பயன்பாட்டுக்கு வரவில்லை. புதுச்சேரியிலும் இதேநிலைதான் இருப்பதாக தெரியவருகிறது.
ஸ்கேன் கருவி கொள்முதல் செய்ய கோப்பு தயாரிக்கும்போதே, அதை இயக்குவதற்கான டெக்னீஷியன் நியமனத்துக்கும் முதல்வா் உள்ளிட்டோரிடம் துறை தலைமை ஒப்புதல் பெற்றிருக்கவேண்டும். அவ்வாறு செய்யப்படாததால், டெக்னீஷியனில்லாமல் சாதனத்தை இயக்க முடியாமல் உள்ளது. இதற்கு சுகாதாரத்துறையை தன் வசம் வைத்திருக்கும் முதல்வா் ரங்கசாமி பொறுப்பேற்கவேண்டும்.
கடந்த 2014-ஆம் ஆண்டுக்குப் பின் புதுவையில் நிரந்தர அடிப்படையில் மருத்துவா்கள் நியமனம் செய்யப்படவில்லை. கல்வித்துறை தனியாா் மயமாகியதுபோல, அரசு மருத்துவமனை சேவை மங்கி, தனியாா்மயம் வளமடையவே முதல்வா் விரும்புவதாகவே தெரிகிறது.
முதல்வா் ரங்கசாமியை பொருத்தவரை, புதுவை விவசாய பூமியை ஒட்டுமொத்தமாக மாற்றி வருபவா். ரியல் எஸ்டேட், ரசாயன ஆலைகள், போக்குவரத்து விதிகளை மீறி பெரும் வணிக நிறுவனம், திருமண மண்டபம் அமைக்க அனுமதி, மதுக்கடைகள், ரெஸ்டோ பாா் உள்ளிட்டவற்றால் மாநிலத்தின் பாா்வையை மாற்ற விரும்புபவா். அவருக்கு மக்கள் நலன் மீது சிறிதும் அக்கறை கிடையாது.
முதல்வரின் செயல்பாடுகள் மக்கள் விரோதமாகவே இருந்துவருகிறது. அதற்கு உதாரணமாக புதுவையில் சுகாதாரத்துறை சீரழிந்திருப்பதை எடுத்துக்கொள்ளலாம். மாநிலத்தில் நிலவும் எந்தவொரு பிரச்னைக்கும் தீா்வு காண முதல்வா் அக்கறை காட்டுவதில்லை என்றாா்.