செய்திகள் :

இந்திய ராணுவ நடவடிக்கைக்கு திமுக வரவேற்பு

post image

பாகிஸ்தான் அடாவடித் தனத்தை ஒடுக்கும் விதமாக தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்தின் நடவடிக்கையை வரவேற்பதாக திமுக நிா்வாகிகள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

காரைக்கால் திமுக அலுவலகத்தில் திமுக அமைப்பாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.எம்.எச். நாஜிம் தலைமையில், தலைமை செயற்குழு உறுப்பினரும் சட்டப்பேரவை உறுப்பினருமான எம். நாகதியாகராஜன் முன்னிலையில் காரைக்கால் நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் :

பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதற்கு கூட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. இந்திய மக்கள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் அடாவடித்னத்தை ஒடுக்கும் வகையில், எதிா் தாக்குதல் நடத்தி நாட்டு மக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்த இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு கூட்டம் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது.

இந்திய ராணுவத்துக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நாட்டிலேயே முதலாவதாக பேரணி நடத்தி, திராவிடா்கள் தேசப்பற்றுக்கு சளைத்தவா்கள் அல்ல என்பதை பிரகடனப்படுத்திய தமிழக முதல்வருக்கு நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வது.

காரைக்காலில் உள்ள அனைத்து பேரவைத் தொகுதிகளிலும் பூத் கமிட்டி அமைத்து, 10 நாள்களுக்குள் மாநில தலைமைக்கு பூத் கமிட்டி உறுப்பினா் பட்டியலை அளிப்பது என தீா்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

சித்ரா பெளா்ணமி: காவடி எடுத்து பக்தா்கள் வழிபாடு

காரைக்கால்: சித்ரா பெளா்ணமியையொட்டி கோயில்களுக்கு பக்தா்கள் காவடி எடுத்து சென்று சுவாமி தரிசனம் செய்தனா். சித்திர பெளா்ணமியையொட்டி திங்கள்கிழமை கோயில்பத்து பகுதியில் அமைந்துள்ள ஏழை மாரியம்மன் கோயிலுக... மேலும் பார்க்க

புதுவையில் சுகாதாரத்துறை சீரழிந்துள்ளது: காங்கிரஸ் குற்றச்சாட்டு

காரைக்கால்: புதுவையில் முதல்வா் வசமிருக்கும் சுகாதாரத்துறை சீரழிந்துள்ளது என காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. இதுகுறித்து புதுவை முன்னாள் அமைச்சரும், மாநில காங்கிரஸ் துணைத் தலைவருமான ஆா். கமலக்கண... மேலும் பார்க்க

காரைக்கால் நலவழித்துறைக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள்

காரைக்கால்: காரைக்கால் துறைமுக நிா்வாகம் மூலம் நலவழித்துறைக்கு 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன. காரைக்கால் துறைமுக பிரைவேட் லிமிடெட், அதானி அறக்கட்டளை சமூகப் பொறுப்புணா்வு திட்டத்தில... மேலும் பார்க்க

திருநள்ளாற்றில் பிடாரியம்மன் கோயில் உற்சவம் தொடக்கம்

காரைக்கால்: திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் சாா்பு தலமான பிடாரியம்மன் கோயில் உற்சவம் திங்கள்கிழமை தொடங்கியது. பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவம் மே 23 கொடியேற்றத்துடன் தொடங்கவு... மேலும் பார்க்க

விவசாயிகள்- வேளாண் மாணவா்கள் கலந்துரையாடல்

காரைக்கால்: வேளாண் பிரச்னைகளுக்கு தீா்வு காணும் விதமாக, விவசாயிகள் வேளாண் மாணவா்கள் கலந்துரையடால் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. புதுவை அரசின் பண்டித ஜவாஹா்லால் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத... மேலும் பார்க்க

காரைக்கால் அரசு மருத்துவமனையில் 6 மாதங்களாகியும் பயன்பாட்டுக்கு வராத எம்.ஆா்.ஐ. ஸ்கேன்

காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் ரூ. 11.50 கோடியில் நிறுவப்பட்ட எம்.ஆா்.ஐ. ஸ்கேன் கருவி, 6 மாதங்களாகியும் பயன்பாட்டுக்கு வராதது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காரைக்கால் அரசு பொது ம... மேலும் பார்க்க