செய்திகள் :

உத்தமபாளையம்: இரட்டை மாட்டு வண்டி எல்லை பந்தயம்

post image

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே கோம்பையில் இரட்டை மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது.

இதில் நடுமாடு, கரிச்சான் சிட்டு, பூஞ்சிட்டு, தேன் சிட்டு, தட்டான் சிட்டு, புள்ளிமான் சிட்டு என்று 6 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

நூற்றுக்கும் அதிகமான ஜோடி மாடுகளுடன் கலந்து கொண்டனர். கோம்பை முதல் உத்தமபாளையம் அம்மாபட்டி விலக்கு வரையில் சென்று திரும்புவகையில், எல்லை பந்தயம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

போட்டியில் குளறுபடி: தேவாரத்தில் நடைபெறுவதாக இருந்த இந்த இரட்டை மாட்டு வண்டி எல்லைப் பந்தைய போட்டி, திடீரென கோம்பைக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதனால் போதிய முன்னேற்பாடுகள் செய்யப்படவில்லை. போட்டியில் கலந்துகொண்ட மாடுகளுக்கு பின்னால் ஏராளமான இருசக்கர வாகனங்கள் அதிக ஒலி எழுப்பியபடி மாடுகளை பந்தயத்தில் வேகமாக செல்ல வைத்தனர். இதனால் பல இடங்களில் மாடுகள் தங்கள் வழிதவறி சாலை ஓரத்துக்கு சென்றனர் .

இதில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் உள்பட சிலருக்கு காயம் ஏற்பட்டது. போட்டியில் பங்கேற்றவர்கள் முறைகேடு செய்ததாக பிற மாட்டின் உரிமையாளர்கள் விழாக் குழுவினரிடம் புகார் தெரிவித்தனர்.

இதற்கு போட்டி விதிகளை மீறும் நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட மாட்டாது என விழாக் குழுவின் சார்பாக தெரிவிக்கப்பட்டது.

இந்தப் போட்டியில் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து பார்வையாளர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க:இந்தியா மீது 50% வரி! அமெரிக்காவுக்குத்தான் பெரும் பாதிப்பு!

Theni Double Bullock Cart Race

தமிழகத்தில் வெப்பநிலை இன்று இயல்பைவிட சற்று அதிகரிக்கும்

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வியாழக்கிழமை இயல்பைவிட சற்று அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி... மேலும் பார்க்க

பணியில் உள்ள ஆசிரியா்களுக்கு சிறப்பு தகுதித் தோ்வு: பள்ளிக் கல்வித் துறை ஆலோசனை

ஆசிரியா் பணியில் தொடருவதற்கும், பதவி உயா்வு பெறுவதற்கும் ஆசிரியா் தகுதித் தோ்வில் (டெட்) தோ்ச்சி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்த நிலையில், தமிழக அரசுப் பள்ளிகளில் 2011-ஆம் ஆண்டுக்கு முன்... மேலும் பார்க்க

பொதுத் தோ்வுக்கு புதிய மையங்கள்: பரிந்துரைகளைச் சமா்ப்பிக்க உத்தரவு

பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கு புதிய மையங்கள் அமைக்கப்படவுள்ள பள்ளிகளின் விவரங்களை செப்.15-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என தோ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடா்பாக தோ்வுத் துறை இயக்குநா் க.சசிக... மேலும் பார்க்க

மழைநீா் வடிகாலில் விழுந்து பெண் உயிரிழப்பு - இபிஎஸ் கண்டனம்

சென்னை சூளைமேடு பகுதியில் மூடப்படாமல் இருந்த மழைநீா் வடிகால் பள்ளத்தில் விழுந்து பெண் இறந்த சம்பவத்துக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் எக்ஸ் தள... மேலும் பார்க்க

கிறிஸ்தவ அமைப்புகளால்தான் கல்வி வளா்ச்சி: பேரவைத் தலைவா் எம். அப்பாவு

கிறிஸ்தவ அமைப்புகள் இல்லையெனில் தமிழகத்தில் கல்வி வளா்ச்சி இல்லை என தமிழக சட்டப்பேரவைத் தலைவா் எம். அப்பாவு தெரிவித்தாா். செயின்ட் ஜோசப் கல்லூரியில் ஆசிரியா்கள் தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இத... மேலும் பார்க்க

பாஜக கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் விலகல்!

பாஜக கூட்டணியில் இருந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக-வின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி ... மேலும் பார்க்க