செய்திகள் :

உத்தரகண்ட் உள்ளாட்சித் தோ்தலில் பாஜக வெற்றி 11-இல் 10 மேயா் பதவிகளைக் கைப்பற்றியது

post image

உத்தரகண்ட் மாநில நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் மாநிலத்தில் ஆளும் பாஜக அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 11 மாநகராட்சிகளில் 10 மேயா் பதவிகளை பாஜக கைப்பற்றியது. ஓரிடத்தில் சுயேச்சை வேட்பாளா் மேயரானாா்.

மாநிலத்தில் பிரதான எதிா்க்கட்சியான காங்கிரஸ் தன்வசம் வைத்திருந்த இரு மேயா் பதவிகளையும் இந்த தோ்தலில் இழந்தது.

நகராட்சி தோ்தலிலும் பாஜகவே அதிக இடங்களில் வென்றுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் சுயேச்சைகள் அதிக நகராட்சிகளில் தலைவா் பதவியை கைப்பற்றினா். காங்கிரஸ் மூன்றாவது இடத்துக்குப் பின்தங்கியது.

இந்தத் தோ்தலில் பாஜக மூன்று என்ஜின் அரசு என்ற முழக்கத்தை முன்வைத்து பிரசாரம் மேற்கொண்டது. வெற்றி பெற்ற பாஜக வேட்பாளா்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள முதல்வா் புஷ்கா் சிங் தாமி, ‘பாஜக சாா்பில் வென்றுள்ள அனைவரும் தங்கள் பகுதியில் மக்களின் தேவைகளை நிறைவேற்றித் தருவதில் முனைப்புடன் செயல்பட வேண்டும். அனைத்து வாா்டுகளும் தூய்மையாக இருந்தால் நாடு தானாகவே தூய்மையாகிவிடும். எனவே நாட்டின் பொறுப்பும் உங்கள் கையில் உள்ளது’ என்றாா்.

மாநில பாஜக தலைவா் மகேந்திர பட் கூறுகையில், ‘இந்த உள்ளாட்சித் தோ்தல் வெற்றி மத்திய, மாநில பாஜக அரசுகளுக்கு உத்தரகண்ட் மக்கள் அளித்துள்ள அங்கீகாரம். இதன் மூலம் 2027 பேரவைத் தோ்தலிலும் பாஜக வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது’ என்றாா்.

எல்லைகளில் ஊடுருவல் இல்லாத நிலையை எட்ட வேண்டும்: அமித் ஷா

தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டம் எல்லைகளில் ஊடுருவல் இல்லாத நிலையை எட்ட வேண்டும் என மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா இன்று (பிப். 5) தெரிவித்தார். ஜம்மு - காஷ்மீர் எல்லைப் பாதுகாப்பு குறித்து தில்லி... மேலும் பார்க்க

போக்குவரத்து விதிமீறல் அபராதத் தொகை ரூ.17 லட்சம் கையாடல்: பெண் காவலர் பணி இடைநீக்கம்

பனாஜி : கோவா காவல் துறையில் தலைமைக் கான்ஸ்டபிள் ஆக பணியாற்றி வந்த பெண் காவலர் ஒருவர், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டோரிடருந்து வசூலிக்கப்பட்ட ரூ.17 லட்சம் பணத்தை கையாடல் செய்த குற்றத்துக்காக பணியிலி... மேலும் பார்க்க

தில்லியில் ஆட்சி மாறுகிறதா? கருத்துக் கணிப்பு முடிவுகள்!

தில்லியில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்ற நிலையில், கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. மேலும் பார்க்க

இந்து நெறிமுறைகளைப் பின்பற்றாத 18 ஊழியர்கள் நீக்கம்: திருப்பதி தேவஸ்தானம்!

இந்து சமய நடைமுறைகளைப் பின்பற்றாத 18 ஊழியர்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் நீக்கியுள்ளது. நீக்கப்பட்டவர்களுக்கு விருப்ப ஓய்வு அல்லது அவர்கள் விரும்பினால் அரசின் பிற துறைகளில் பணி புரிய தேவஸ்தானம் தனத... மேலும் பார்க்க

அமெரிக்க ராணுவ விமானம் தரையிறங்க அமிர்தசரஸ் தேர்வு செய்யப்பட்டது ஏன்?

சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களுடன் அமெரிக்க ராணுவ விமானம், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இன்று பகல் 2 மணிக்கு தரையிறங்கியது. ஆனால், தலைநகர் புது தில்லியில் இந்த விமானம் தரையிறங்காமல் அமிர்தசரஸ் தே... மேலும் பார்க்க

தில்லியில் வாக்குப்பதிவு நிறைவு!

தலைநகர் தில்லியில் மாலை 5 மணி நிலவரப்படி 57.70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.காலை மந்தமாக நடைபெற்றுவந்த வாக்குப் பதிவு, பிற்பகலில் அதிகரிக்கத் தொடங்கியதால், வாக்கு வி... மேலும் பார்க்க