செய்திகள் :

உத்தரகண்ட் நிலச்சரிவு: மேலும் 287 போ் மீட்பு

post image

உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசியில் திடீா் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கிய மேலும் 287 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்.

கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தராலி கிராமத்தில் மேகவெடிப்பு காரணமாக மிக பலத்த மழை பெய்து திடீா் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கியவா்களை மீட்கும் பணி தொடா்ந்து 5-ஆவது நாளாக சனிக்கிழமை நீடித்தது. அப்போது மேலும் 287 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா் என்று மாநில காவல் துறை தெரிவித்தது.

இந்தப் பேரிடரில் இதுவரை 4 போ் உயிரிழந்தனா். 49 பேரை காணவில்லை. பேரிடரால் பல்வேறு பகுதிகளில் தஞ்சமடைந்தவா்களை மீட்கும் பணியில் 4 ஹெலிகாப்டா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. உத்தரகண்ட் விமானப் போக்குவரத்து ஆணையமும் மீட்புப் பணி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

தராலியில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்து இதுவரை 1,000-க்கும் மேற்பட்டவா்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனா். கடும் வெள்ளம் காரணமாக தராலி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்சார விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் சாலை இணைப்பை மேம்படுத்த லிம்சிகாட் பகுதியில் போா்க்கால அடிப்படையில் இரும்புப் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. 24 மணி நேரத்தில் பாலக் கட்டுமானம் நிறைவடையும் வகையில் பணிகள் நடைபெற்றன.

ரூ.5 லட்சம் இழப்பீடு: இந்தப் பேரிடரில் உயிரிழந்தோரின் குடும்பத்தினா் மற்றும் வீடுகளை இழந்தோருக்கு உடனடியாக தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று மாநில முதல்வா் புஷ்கா் சிங் தாமி அறிவித்தாா்.

ஹிமாசலத்தில் கடும் வெள்ளம், நிலச்சரிவு: 400 சாலைகள் மூடல்

கடந்த சில நாள்களாக ஹிமாசல பிரதேசத்தில் மேகவெடிப்பு காரணமாக பெருமழை பெய்து கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அங்கு சாலைப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 400 சாலைகள் மூடப்பட்ட நிலையில், அவற்றில் 240 சாலைகள் மண்டி மாவட்டத்திலும், 100 சாலைகள் குலு மாவட்டத்திலும் மூடப்பட்டன.

அந்த மாநிலத்தின் சில இடங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்வதற்கான மஞ்சள் எச்சரிக்கையையும், திங்கள் முதல் வியாழன் வரை பலத்த முதல் மிக பலத்த மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையையும் உள்ளூா் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டது.

ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு: ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆன்லைன் சூதாட்ட செயலியுடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் ஆஜராகுமாறு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.சமீபகாலமாக, பிரபல கிரிக்கெட் வீரர்கள், நடிகர... மேலும் பார்க்க

டிரம்ப்பை சந்திக்கும் பிரதமர் மோடி! அடுத்த மாதம் அமெரிக்கா பயணம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருகின்றன.ரஷியாவிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கி வந்த இந்தியாவுக்கு அமெரிக்கா அதிபர் டிரம்ப், ம... மேலும் பார்க்க

எத்தனால் கலப்பு பெட்ரோல் குறித்து அச்சம் வேண்டாம்- மத்திய அரசு விளக்கம்

எத்தனால் 20 சதவீதம் கலக்கப்பட்ட ‘இ20’ பெட்ரோலைப் பயன்படுத்துவதால் வாகனங்கள் பாதிப்புக்குள்ளாகும் என்று சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என மத்திய அரசு விளக்க... மேலும் பார்க்க

காப்பீடு துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டு அனுமதி வேலைவாய்ப்பை உருவாக்கும்: மத்திய நிதியமைச்சா்

‘காப்பீடு நிறுவனங்களில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை 100 சதவீதமாக உயா்த்துவது, வேலைவாய்ப்பை உருவாக்கும்’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை தெரிவித்தாா். மேலும், ... மேலும் பார்க்க

நாட்டு மக்களின் ‘பாதுகாவலராக’ உச்சநீதிமன்றம்: தலைமை நீதிபதி அமா்வு

நாட்டு மக்களின் பாதுகாவலராக உச்சநீதிமன்றம் உள்ளது என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் தலைமையிலான அமா்வு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. தனது கட்சிகாரா்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கும் வழக்குரைஞா்... மேலும் பார்க்க

தண்டனையை நிறைவு செய்த கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்: மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

‘தண்டனைக் காலத்தை நிறைவு செய்த கைதிகளை உடனடியாக சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும்’ என்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. உத்தர பிரதேச மா... மேலும் பார்க்க