செய்திகள் :

உத்தரகண்ட் பனிச் சரிவு: மேலும் 14 பேர் மீட்பு! 8 பேரை தேடும் பணி தீவிரம்!

post image

உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச் சரிவில் 55 பேர் சிக்கிய நிலையில், 47 பேரை இந்திய ராணுவம் மீட்டுள்ளது. மீதமுள்ள 8 பேரை 4 ஹெலிகாப்டர்கள் மூலம் தேடும் பணி நடைபெற்று வருகின்றது.

உத்தரகண்டில் இந்திய-திபெத் எல்லையையொட்டி 3,200 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள கடைக்கோடி கிராமம் மனா. பத்ரிநாத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள இப்பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.

மனா மற்றும் பத்ரிநாத் இடையே வெள்ளிக்கிழமை காலை 7.15 மணியளவில் ஏற்பட்ட பனிச்சரிவில் அங்குள்ள பிஆா்ஓ முகாம் புதைந்தது. இந்த முகாமில் 8 கண்டெய்னா்கள் மற்றும் கூடாரத்தில் இருந்த 55 தொழிலாளா்களும் பனிச்சரிவில் சிக்கினா். இத்தொழிலாளா்கள் அனைவரும் திபெத் எல்லையை நோக்கிய ராணுவப் போக்குவரத்துக்காக சாலையில் பனியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தவா்களாவா்.

பனிச்சரிவைத் தொடா்ந்து, ராணுவம், இந்திய-திபெத் எல்லைக் காவல் படை (ஐடிபிபி) மற்றும் பிற துறைகளின் தரப்பில் மீட்புப் பணி உடனடியாகத் தொடங்கப்பட்டது. உயரமான பகுதிகளில் மீட்புப் பணியில் ஈடுபட பயிற்சி பெற்ற ராணுவத்தின் ‘ஐபெக்ஸ்’ படைப் பிரிவினா் களமிறக்கப்பட்டனா்.

இதையும் படிக்க: தமிழகத்துக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா மீண்டும் வருகை?

இந்த நிலையில், பனிச் சரிவில் சிக்கிய 55 பேரில் 47 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு, ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 33 பேர் மீட்கப்பட்ட நிலையில் இன்று(மார்ச். 1) 14 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

மத்திய மாநில அரசுகளின் உதவியுடன் எஞ்சியுள்ள 8 பேரை மீட்பதற்காக 4 ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக சமோலி மாவட்ட நீதிபதி தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ”மனாவில் சிக்கிய 55 பேரில் 47 பேர் மீட்கப்பட்டுள்ளனர். தற்போது ஜோஷிமத் மருத்துவமனைக்கு 7 பேரை அழைத்து வந்துள்ளோம். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, அவர்களின் உடல்நிலை சீராகவுள்ளது. அவர்கள் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளனர். பனிச் சரிவில் சிக்கிய மீதமுள்ளவர்களும் விரைவில் மீட்கப்படுவார்கள்.

நேற்று மீட்கப்பட்ட 33 பேரில் 3 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்ட நிலையில், படுகாயமடைந்த 3 பேர் மனா ராணுவ மருத்துவமனையில் இருந்து ஜோஷிமத்தியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.” என்றார்.

உத்தரகண்ட் பனிச்சரிவில் சிக்கிய 50 பேர் மீட்பு: 4 பேர் பலி!

உத்தரகண்ட் பனிச் சரிவில் சிக்கிய 55 பேரில் 50 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 4 பேர் பலியானதாக இந்திய - திபெத் எல்லை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.பனிச் சரிவில் சிக்கிய 55 பேரில் 50 பேர் காய... மேலும் பார்க்க

வாட்ஸ்ஆப்பில் கைத்தவறி அழைப்பு செல்வதைத் தடுக்கும் வசதி

செல்போனில் அரட்டை அடிக்க, பேச என பல வசதிகள் ஏற்படுத்திக்கொண்டே செல்லும் செயலிகளில் முதலிடம் வாட்ஸ்ஆப்-க்குத்தான்.வாட்ஸ்ஆப்பில் பயனர்கள் சந்திக்கும் சிக்கல்கள், பிரச்னைகள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்... மேலும் பார்க்க

இந்தியா: மொபைல் போன் ஏற்றுமதி 40% அதிகரிக்க வாய்ப்பு

இந்தியாவில் மொபைல் போன்களின் ஏற்றுமதி அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.உலகளவில் அதிக மக்கள்தொகையில் முதலிடம் கொண்டுள்ள இந்தியாவில் மொபைல் போன்களின் தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அத... மேலும் பார்க்க

இலங்கை முன்னாள் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு

இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவை தலைநகர் தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற என்எக்ஸ்டி மாநாட்டில் பிரதமர் மோடி சந்தித்தார்.இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது, "என்எக்ஸ... மேலும் பார்க்க

ஹிமாசலில் கனமழை, பனிப்பொழிவு: 538 சாலைகள் மூடல்!

ஹிமாசல் பிரதேசத்தில் மழை மற்றும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக 538 சாலைகள் மூடப்பட்டதால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.ஹிமாசல் பிரதேசத்தில் மழை, பனிப்பொழிவு காரணமாக பல மாவட்டங்கள் பாதிக்கப்பட... மேலும் பார்க்க

மணிப்பூரில் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதை உறுதி செய்ய வேண்டும்: அமித் ஷா!

மணிப்பூரில் உள்ள அனைத்து சாலைகளிலும் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதை உறுதி செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவிட்டுள்ளார். கடந்த 2023 மே முதல் இன கலவரத்தால் பாதிக... மேலும் பார்க்க