செய்திகள் :

உத்தரகண்ட்: 15 புதிய சிறைக் கைதிகளுக்கு எச்.ஐ.வி. தொற்று!

post image

உத்தரகண்ட் மாநிலத்தின் சிறையில் 15 புதிய சிறைக் கைதிகளுக்கு எச்.ஐ.வி. தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ஹரிதுவார் மாவட்ட சிறையில் அடைக்கப்பட அழைத்து வரப்பட்ட புதிய சிறைக் கைதிகளுக்கு கடந்த ஏப்.7 அன்று மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அந்தச் சோதனைகளின் ஒரு பகுதியாக எச்.ஐ.வி. சோதனையும் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

இந்நிலையில், அவ்வாறு புதியதாக அழைத்து வரப்பட்ட கைதிகளில் 15 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உறுதிச் செய்யப்பட்டுள்ளாதாக அந்த சிறையின் தலைமைக் காவலர் மனோஜ் குமார் ஆர்யா இன்று (ஏப்.9) தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், சிறைக்கு புதியதாக ஒரு கைதி அழைத்து வரப்பட்டால் அவருக்கு எச்.ஐ.வி. உள்பட அனைத்து விதமான மருத்துவச் சோதனைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் தற்போது அந்தத் தொற்றுக் கண்டறியப்பட்ட 15 கைதிகளுக்கு முறையான மருத்துவச் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, கடந்த 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் கண்டறியப்பட்ட எச்.ஐ.வி. தொற்றுக்களின் எண்ணிக்கையானது 2010-ல் பதிவான எண்ணிக்கையை விட 44 சதவிகிதம் குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:குடியரசுத் தலைவருக்கு ஸ்லோவாக்கியா அளித்த பரிசு!

மதிமுகவிலும் மோதல்? முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகல்

மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினர் துரை வைகோ சனிக்கிழமை அறிவித்துள்ளார். மேலும் பார்க்க

தூத்துக்குடி: நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் விலை உயர்வு

தூத்துக்குடி: கடலில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியதை அடுத்து தூத்துக்குடி நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் விலை அதிகரித்து காணப்பட்டது. அதிகபட்சமாக சீலா ஒரு கிலோ ரூ.1,300-க்கு விற்பனை செய்ய... மேலும் பார்க்க

மேல்பாதி திரௌபதியம்மன் கோயில்: 3 ஆவது நாளாக தரிசனம் செய்ய வராத மக்கள்!

விழுப்புரம்: மேல்பாதி அருள்மிகு திரௌபதியம்மன் திருக்கோயில் வழிபாட்டுக்காக மூன்றாவது நாளாக சனிக்கிழமை காலை திறக்கப்பட்டது. ஆனால், மக்கள் யாரும் தரிசனம் செய்ய வரவில்லை.மேல்பாதி கிராமத்திலுள்ள அருள்மிகு ... மேலும் பார்க்க

ஜகதீப் தன்கருடன் ஆர்.என். ரவி சந்திப்பு

புதுதில்லி: குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கரை தில்லியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி சந்தித்து பேசினார். மேலும் பார்க்க

மதுவிலக்கு: வனப்பகுதியில் சிறப்பு சோதனை

நெய்வேலி: கடலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கத்துறையினர் மதுவிலக்கு சம்பந்தமாக சிறுபாக்கம் காவல் சரகப் பகுதியில் உள்ள வனப்பகுதியில் சனிக்கிழமை சிறப்பு சோதனை நடத்தினர். காட்டுப்பகுதிகளில் கள்ளத்தனமாக சாரா... மேலும் பார்க்க

அதிமுக கூட்டணியிலிருந்து எஸ்டிபிஐ கட்சி விலகல்

அதிமுகவுடனான கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள எஸ்டிபிஐ கட்சி, பாஜக கட்சியுடன் கூட்டணி வைத்த எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எஸ்டிபிஐ பெ... மேலும் பார்க்க