செய்திகள் :

உத்தரகாசியில் மேக வெடி: தொழிலாளர்கள் 9 பேர் மாயம்

post image

உத்தரகாசியில் ஏற்பட்ட மேக வெடிப்பில் தொழிலாளர்கள் 9 பேர் மாயமானார்கள்.

உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் யமுனோத்ரி கோயிலுக்குச் செல்லும் வழியில் பர்கோட் பகுதியில் சிலாய் வளைவு அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கனமழை மற்றும் மேக வெடிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தின்போது சாலை கட்டுமானத் தொழிலாளர்கள் 9 பேர் மாயமானதாக பேரிடர் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. யமுனோத்ரி நெடுஞ்சாலையில் மேக வெடிப்பு பற்றிய தகவல் நள்ளிரவில் கிடைத்ததாக பர்கோட் காவல் நிலைய பொறுப்பாளர் தீபக் கூறினார்.

உடனே சம்பவ இடத்திற்கு ஒரு குழு அனுப்பப்பட்டது. சாலை கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் அங்கு கூடாரம் அமைத்து வசித்து வந்ததைக் அவர்கள் கண்டறிந்தனர். கனமழையால் அவர்கள் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை எட்டு முதல் ஒன்பது பேர் மாயமானதாக கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் நேபாள வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மாவட்டத்தில் உள்ள குத்னூர் கிராமத்தில் கனமழையால் விவசாய நிலங்கள் சேதமடைந்ததாகவும் தகவல் தெரிய வந்துள்ளது. மேலும் ஓஜ்ரி அருகே உள்ள சாலையும் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. விவசாய நிலங்கள் குப்பைகளால் நிரம்பியுள்ளன. சயனசட்டியில் உள்ள குப்தா குன்ஷாலா திரிகிலி மோட்டார் பாலமும் ஆபத்தில் உள்ளது. கனமழையைத் தொடர்ந்து யமுனையின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.

Summary

The labourers went missing following heavy rainfall and cloudburst near Silai Bend in Barkot area on way to the Yamunotri temple in Uttarkashi district.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு!

மஞ்சள் வாரியத்துக்கான புதிய தலைமையகம் திறப்பு! - எங்கே?

தேசிய மஞ்சள் வாரியத்துக்கான புதிய தலைமையகம் திறக்கப்பட்டுள்ளது. மஞ்சள் வாரிய தலைமையகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று(ஜூன் 29) திறந்து வைத்தார்.தெலங்கானாவிலுள்ள நிஸாமாபாத் நகரில் மஞ்சள் வாரி... மேலும் பார்க்க

புதுப்பொலிவுடன் பஹல்காம்! சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

பஹல்காமில் பயங்கரவாத தாக்குதலின் வடு மறைந்து வருகிறது. சுற்றுலா பயணிகள் வருகையால் பஹல்காம் புதுப்பொலிவு பெற்றுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரான பஹல்காம் அருகேயுள்ள பைசாரன் பள்ளத்தாக்கு பகுத... மேலும் பார்க்க

கொல்கத்தாவில் மாணவி பாலியல் வன்கொடுமை: ‘தனியாகச் சென்ற மாணவி மீதே தவறு’ - ஆளுங்கட்சி எம்எல்ஏ மீது நடவடிக்கை!

கொல்கத்தா: கொல்கத்தாவில் கல்லூரி வளாகத்தில் மாணவி ஒருவரை 3 மாணவா்கள் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்ட மாணவி கல்லூரிக்கு தனியாகச் சென்றது தவறு என்று மேற்கு வங்கத்தில் ஆளும... மேலும் பார்க்க

ராஜஸ்தானில் மண் சரிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் பலி

ராஜஸ்தானில் குழாய் பதிக்க மண் தோண்டியபோது அது சரிந்து விழுந்ததில் 4 பேர் பலியாகினர். ராஜஸ்தானின் பரத்பூரில் ஞாயிற்றுக்கிழமை காலை குழாய் பதிக்க தோண்டும் பணியில் ஈடுபட்டபோது மண் திடீரென சரிந்து விழுந்தத... மேலும் பார்க்க

2015-ல் 25 கோடி பேர்; தற்போது 95 கோடி பேருக்கு பயன்! பிரதமர் மோடி பெருமிதம்!

இந்தியாவில் 95 கோடி பேர் சமூகப் பாதுகாப்பு சலுகையைப் பயன்படுத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி வாயிலாக ... மேலும் பார்க்க

ராஜஸ்தானில் இந்திய-பாகிஸ்தான் எல்லை அருகே இரு உடல்கள் மீட்பு

ராஜஸ்தானில் இந்திய-பாகிஸ்தான் எல்லை அருகே சிதைந்த நிலையில் இரு உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே மைனர் பெ... மேலும் பார்க்க