செய்திகள் :

உத்தரப் பிரதேசத்தில் முதல்முறையாக இஸ்ரோ ராக்கெட் சோதனை வெற்றி!

post image

உத்தரப் பிரதேசம் மாநிலம் குஷிநகா் மாவட்டத்தில் மாதிரி ராக்கெட் ஏவுதல் சோதனை வெற்றிகரமாக சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

இதன்மூலம் செயற்கைக்கோளுடன் கூடிய ராக்கெட் முதல்முறையாக உத்தர பிரதேசத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தச் சோதனையை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ), இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்துடன் (இன்-ஸ்பேஸ்) இணைந்து இந்திய விண்வெளி அமைப்பு மேற்கொண்டது.

சோதனை நடைபெற்ற தளத்தில் இருந்த இஸ்ரோ விஞ்ஞானி அபிஷேக் சிங் இதுகுறித்து கூறுகையில், ‘உத்தர பிரதேச மாநிலம் குஷிநகா் மாவட்டத்தில் சனிக்கிழமை மாலை 5.14 மணியளவில் மாதிரி ராக்கெட் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சரியாக 1.1 கி.மீ. உயரத்தை அடைந்த பின், ராக்கெட்டுடன் சென்ற சிறிய செயற்கைக்கோள் வெளியேறியது.

அந்த செயற்கைக்கோள் 5 மீட்டா் கீழ்நோக்கி வந்தவுடன் அதிலிருந்த ஃபாரசூட் செயல்படத் தொடங்கியது. இதனால் தரைமட்டத்தில் இருந்து 400 மீட்டருக்குள் செயற்கைக்கோள் தரையிறங்கியது. 15 கிலோ எடையுள்ளஅந்த ராக்கெட்டும் வெற்றிகரமாக தனது பணியை முடித்துக்கொண்டு பூமிக்குத் திரும்பியது’ என்றாா்.

உத்தர பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட மாதிரி ராக்கெட் சோதனையானது 2024-25-இல் மாணவா்களுக்காக நடத்தப்படும் மாதிரி ராக்கெட்/ கேன்சாட் போட்டியின் ஒரு பகுதியாகும். வரும் அக்டோபா்-நவம்பா் மாதங்களில் நடைபெறும் இந்தப் போட்டியில் இளைஞா்களால் தயாரிக்கப்பட்ட 900 செயற்கைக்கோள்கள் சோதனை செய்யப்படவுள்ளன. அதற்கான முன்மாதிரியாக இந்தச் சோதனை கருதப்படுகிறது.

இது போருக்கான சகாப்தம் அல்ல: மோடி

இது போருக்கான சகாப்தம் அல்ல என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.மூன்று நாடுகளுக்கான 5 நாள்கள் அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாக, மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான சைப்ரஸுக்கு பிரதமா் ... மேலும் பார்க்க

கேரளத்தில் கொட்டித்தீர்க்கும் பருவமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

கேரளத்தில் திங்கள்கிழமையும் இடைவிடாத பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து உள்பட மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொ... மேலும் பார்க்க

பிரதமர் மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது!

பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது திங்கள்கிழமை வழங்கப்பட்டது.மூன்று நாடுகளுக்கான 5 நாள்கள் அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாக, மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான சைப்ரஸுக்க... மேலும் பார்க்க

கைலாஷ் மானசரோவர் யாத்திரை: சிக்கிம் வந்தடைந்த முதல் குழு!

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கான 36 பக்தர்கள் கொண்ட முதல் குழு, சிக்கிமின் தலைநகர் கேங்க்டாக்கிற்கு வந்தடைந்தது. இந்தியா-சீன ராணுவத்தினர் இடையே கல்வான் பகுதியில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து கடந்த 5 ஆண்டுக... மேலும் பார்க்க

உ.பி.யில் முத்தமிட்டு விளையாடிய நபரின் நாக்கை கடித்த பாம்பு !

உத்தரப் பிரதேசத்தில் பாம்புக்கு முத்தமிட்டு விளையாடிய நபரை அந்த பாம்பு கடித்ததில் அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். உத்தரப் பிரதேச மாநிலம், அம்ரோஹாவைச் சேர்ந்த விவசாயி ஜிதேந்திர குமார்.... மேலும் பார்க்க

விமான விபத்தில் சிக்கினாரா இயக்குநர்? வலுசேர்க்கும் ஆதாரங்கள்!

அகமதாபாத் விமான விபத்துக்கு பிறகு காணாமல் போன இசை ஆல்பங்களை இயக்கும் மகேஷ் ஜிராவாலா என்பவர் மனைவியின் டிஎன்ஏ மாதிரிகள் பெறப்பட்டுள்ளது.அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கடந்த ... மேலும் பார்க்க