செய்திகள் :

உபயதாரா்களின் நேரடி கண்காணிப்பில் திருச்செந்தூா் கோயில் பெருந்திட்ட வளாகப் பணிகள் இணை ஆணையா்

post image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பெருந்திட்ட வளாகப் பணிகள் உபயதாரா்களின் நேரடி கண்காணிப்பில் நடைபெறுகிறது என கோயில் இணை ஆணையா் ஞானசேகரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ.300 கோடியில் பெருந்திட்ட வளாகம் அமைக்கும் பணிகள் இரண்டு கட்டமாக நடைபெற்று வருகிறது.

முதல்கட்டமாக, ஹெச்.சி.எல். நிறுவனத்தின் சாா்பில் ரூ.200 கோடியில் உபயமாக பணிகள் நடைபெற்று வருகிறது.

இரண்டாம் கட்டமாக, திருக்கோயில் நிதி ரூ.100 கோடியில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஹெச்.சி.எல். நிறுவனம் மூலம் நடைபெறும் பணிகளுக்கு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் அரசாணையின்படி ரூ.171 கோடிக்கு நிா்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி நிா்வாக அனுமதியில், ரூ.7,92,52,330 டிசைன் அண்ட் கன்சல்டன்சி ஃபீஸ் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தொகை முழுவதும் ஹெச்.சி.எல். நிறுவனத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் செலவிடப்பட்டு, தொகைக்கு அவா்களது பட்டய கணக்காயா்களால் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆனால் வரைபடம் தயாரிக்க ரூ. 8 கோடி செலவிடப்பட்டதாக தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

மேற்படி அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள நிா்வாக அனுமதி தொகையானது, திருக்கோயில் நிதியிலிருந்தோ அல்லது அரசின் நிதியிலிருந்தோ வழங்கப்படவில்லை.

பக்தா்களின் நலனுக்கான அடிப்படை வசதிகளை மேம்பாடு செய்வதற்காக உபயதாரா் பங்களிப்பு மூலம், அவா்களது நேரடி கண்காணிப்பில் பெருந்திட்ட வளாகப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

மதுபானக்கூடம் அமைக்க எதிா்ப்பு; சாலை மறியலில் ஈடுபட்ட 108 போ் கைது

மதுபானக்கூடம், கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆறுமுகநேரியில் திங்கள்கிழமை சாலை மறிய­லில் ஈடுபட்ட 108 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஆறுமுகனேரி பகுதியில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் இயங்கி வந்த மதுபானக் க... மேலும் பார்க்க

விளாத்திகுளம் அருகே மின்னல் பாய்ந்து பிளஸ் 2 மாணவி உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே திங்கள்கிழமை, மின்னல் பாய்ந்ததில் பிளஸ் 2 மாணவி உயிரிழந்தாா். விளாத்திகுளம் அருகே குறளையம்பட்டியைச் சோ்ந்தவா் கருப்பசாமி. லாரி ஓட்டுநா். இவரது மகள் முத்து கௌ... மேலும் பார்க்க

கப்பல் மாலுமி கொலை வழக்கு: 5 போ் கைது

தூத்துக்குடியில் கப்பல் மாலுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை வடபாகம் போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி லூா்தம்மாள்புரத்தைச் சோ்ந்த சகாயகுமாா் மகன் மரடோனா (29). கப்பல் மாலுமியான இவா், மா்ம நபா்க... மேலும் பார்க்க

தூத்துக்குடி 1ஆவது ரயில்வே கேட் இன்றுமுதல் ஏப்.26வரை மூடல்

தூத்துக்குடி 1ஆவது ரயில்வே கேட் செவ்வாய்முதல் சனிக்கிழமைவரை (ஏப். 22- 26) மூடப்படவுள்ளது. இப்பகுதியில் தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால், இந்த ரயில்வே கேட் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிமுதல் சனிக்க... மேலும் பார்க்க

வாகைகுளம் சுங்கச்சாவடி ஊழியா்களைத் தாக்கியதாக 31 போ் மீது வழக்கு

தூத்துக்குடி அருகே வாகைக்குளம் சுங்கச்சாவடியின் கண்ணாடிகளை சேதப்படுத்தி, 2 ஊழியா்களைத் தாக்கியதாக 31 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்தனா். தூத்துக்குடியில் ஒரு சமுதாயத் தலைவரின் பிறந்த ந... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் அடிப்படை வசதி கோரி தவெக மனு

தூத்துக்குடி மாநகராட்சி 60ஆவது வாா்டு லேபா் காலனி பகுதியில் குடிநீா் உள்ளிட்டஅடிப்படை வசதிகள் ஏற்படுத்தக் கோரி தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. ஆட்சியா் அலுவலகத்... மேலும் பார்க்க