செய்திகள் :

உப்பை உண்டு, புனித நூல்கள் மீது சத்திய பிரமாணம்! - எல்லைகளைப் பாதுகாக்க கிளம்பும் 500 அக்னி வீரர்கள்

post image

நூற்றாண்டு பழைமை வாய்ந்த ராணுவ பயிற்சி முகாம்களில் ஒன்றாக விளங்கி வருகிறது நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி மையம். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்து மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்ட்டர் என்ற பெயரில் செயல்பட்டு வரும் இந்த பயிற்சி மையம், இந்திய காலாட்படையில் முக்கியத்துவம் வாய்ந்த ரெஜிமென்ட் சென்ட்டராக விளங்கி வருகிறது.

அக்னி வீரர்கள்

குறிப்பாக எல்லை பாதுகாப்பு தொடர்பாக சிறப்பு பயிற்சிகளை அளித்து வருகின்றனர். இந்த மையத்தில் தற்போது பயிற்சியை நிறைவு செய்திருக்கும் 551 அக்னி வீரர்களும் பாரம்பர்ய‌ முறையில் உப்பை உண்டு புனித நூல்களான பகவத் கீதை, குரான், பைபிள் மீது கை வைத்து சத்தியப் பிரமாணம் ஏற்றுக்கொண்டு எல்லைப் பாதுகாப்பு பணிக்கு கிளம்பி வருகின்றனர்.

அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு அக்னி வீரர்களிடம் உரை நிகழ்த்திய கர்நாடகா, கேரளா ராணுவ கமாண்டிங் அலுவலர் மேஜர் ஜெனரல் வி.டி.‌மேத்யூ , " மிகவும் பழைமையான‌ மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர், அதன் கடுமையான பயிற்சி‌ மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றால் சிறந்த படைப்பிரிவாக பங்காற்றி வருகிறது. இங்கு பயற்சிபெறும் அக்னி வீரர்கள் தேசத்தை பாதுகாக்கவும்,

அக்னி வீரர்கள்

படைப்பிரிவு நெறிமுறைகளின் மதிப்புகளை நிலைநிறுத்தவும் பெரிய பொறுப்புகளை ஏற்றுள்ளனர். படைப்பிரிவின் வளமான பாரம்பர்யத்தை முன்னெடுத்துச் செல்லவும், அசைக்க முடியாத விசுவாசம், துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்புடன் சேவையாற்ற வேண்டும். நாட்டு இளைஞர்களின் வலிமையில் தேசத்தைக் கட்டி எழுப்புவதில் அக்னிபத் திட்டம் முக்கியத்துவம் பெற்று, அவர்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க மைல் கல்லை எட்டியிருக்கிறது " என்றார் .

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Chenab Bridge: ஈஃபிள் டவரை விட உயரம்; 359 அடி உயரத்தில்... காஷ்மீரில் இன்று திறப்பு -| Top Facts

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பிறகு, இன்று பிரதமர் மோடி ஜம்மு & காஷ்மீர் செல்கிறார். எதற்காக? ஜம்மு & காஷ்மீரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில் வளைவு பாலம் 'செனாப் பாலம்'... மேலும் பார்க்க

ஜூன் 6 பொது விடுமுறையா? பரவும் பொய் தகவல்கள்; உண்மையில் பக்ரீத் விடுமுறை எப்போது?

வெள்ளிக் கிழமை, ஜூன் 6 அரசு விடுமுறையா? இணையத்தில் பலர் நாளை விடுமுறை என்றும், நாடுமுழுவதும் அரசு நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் பள்ளிகள் கூட மூடப்படும் என்றும் பகிர்ந்துள்ளனர். இந்த பதிவுகளால் பலரும் ... மேலும் பார்க்க

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்; கட்டுமானப் பணிகள் தீவிரம்!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவுக்கு ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ’சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய’த்தில் மட்டுமே ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ளது. அங்குதான் இந்தியாவின் செயற்கைக்கோள்கள்... மேலும் பார்க்க

RCB: "கொண்டாட்டங்களை ஞாயிறுக்கு தள்ளி வையுங்கள்" - எச்சரித்த காவல்துறை; அணி நிர்வாகம் சொன்ன காரணம்?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 18 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் ஐபிஎல் கோப்பை வென்றதை, ரசிகர்களுடன் இணைந்து கொண்டாட விரும்பிய முயற்சி பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சின்னசாமி மைதானத்துக்கு வெளியி... மேலும் பார்க்க

Tatkal: இனி தட்கல் டிக்கெட் எளிதாக கிடைக்கும்; IRCTC-ல் ஆதார் இணைப்பு வருகிறது!

ரயில் டிக்கெட் புக்கிங் நடைமுறைகளை கொஞ்சம் கொஞ்சமாக கடுமையாக்கி வருகிறது ரயில்வே துறை.கடந்த சில நாள்களாகவே, தட்கல் டிக்கெட்டையொட்டி, ஏஜென்டுகளின் கையில் தான் தட்கல் டிக்கெட் புக்கிங் உள்ளது… மக்களால் ... மேலும் பார்க்க

`2027-ல் நடக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பு' தரவுகள் எப்படி எடுக்கப்படும்?

இந்தியாவில் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுப்பது வழக்கம். கடைசியாக, 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்டது. அடுத்ததாக கணக்கெடுப்பு எடுக்கப்பட வேண்டிய 2021-ம் ஆண்டு கொரோனா பேரிடர் காலத்தின... மேலும் பார்க்க