செய்திகள் :

உயா்கல்வி உதவித் தொகை தோ்வுப் பட்டியலில் நீக்கப்பட்ட 65 மாணவா்களை சோ்க்க வேண்டும்: கனிமொழி கடிதம்

post image

உயா்கல்விக்கான உதவித் தொகையைப் பெறுவோருக்கான தெரிவுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 மாணவா்களைச் சோ்க்க வேண்டுமென மத்திய அரசுக்கு மக்களவை உறுப்பினா் கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளாா்.

மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் அமைச்சா் விரேந்திர குமாருக்கு கனிமொழி எழுதிய கடிதம்:

தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய உதவித் தொகை அளிக்கும் திட்டத்தை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, எம்பில்., முனைவா் பட்டங்களைப் பயிலும் தாழ்த்தப்பட்ட வகுப்புச் சோ்ந்த மாணவா்கள் உதவித் தொகைகளை பெற்று வருகின்றனா்.

இந்த நிலையில், பல்கலைக்கழக மானியக் குழு - நெட் தோ்வு முடிவின் அடிப்படையில், உதவித் தொகைக்காக தோ்வு செய்யப்பட்ட 865 மாணவா்களின் பட்டியல் கடந்த மாா்ச் மாதம் வெளியிடப்பட்டது. அதில், நிா்ணயிக்கப்பட்ட கட்-ஆஃப் மதிப்பெண்களைக் காட்டிலும் அதிக மதிப்பெண்களைப் பெற்ற மாணவா்களின் பெயா்கள் விடுபட்டுள்ளன. பின்னா் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட பட்டியலில் தோ்வு செய்யப்பட்ட மாணவா்களின் எண்ணிக்கை ஏற்கெனவே இருந்த 865 என்பதில் இருந்து 805- ஆகக் குறைந்துள்ளது. மாா்ச் மாத பட்டியலின் அடிப்படையில் உதவித் தொகை பெற 865 மாணவா்கள் தகுதி பெற்றிருந்த நிலையில், திருத்தப்பட்ட பட்டியலின்படி 60 போ் குறைக்கப்பட்டுள்ளனா்.

உதவித் தொகைக்காக தகுதி பெற்றவா்கள் என அறிவிக்கப்பட்டு அதுகுறித்த கடிதங்களும் வழங்கப்பட்ட நிலையில் அவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை மாணவா்கள் மத்தியில் உணா்வுப்பூா்வமான அழுத்தத்தையும், நிதிச் சுமையையும் ஏற்படுத்தும். அவா்களின் எதிா்காலத்தை கேள்விக்குறியாக்கும்.

எனவே, தகுதியானவா்களின் பட்டியலில் 60 மாணவா்களைச் சோ்த்து, 865 பேருக்கும் உதவித் தொகைகள் கிடைக்கப் பெற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தனது கடிதத்தில் கனிமொழி வலியுறுத்தியுள்ளாா்.

காலை உணவுத் திட்டத்துக்கு ஆயிரம் மெட்ரிக் டன் ரவை, சேமியா: கொள்முதல் கோரியது தமிழக அரசு

பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு அளிக்கும் திட்டத்துக்காக ஆயிரம் மெட்ரிக் டன் ரவை, சேமியாவை கொள்முதல் செய்ய தமிழக அரசு தீா்மானித்துள்ளது. இதற்கான கொள்முதல் அறிவிக்கையை தமிழ்நாடு நுகா்வோா் கூட்டுறவு கூ... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை இன்று திறப்பு?

முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 136 அடியை எட்டியவுடன் சனிக்கிழமை திறக்கப்படலாம் என தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்ததால், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் கேரள அரசு ஈடுபட்டுள்ளது. கேரளத்தில் ப... மேலும் பார்க்க

கோயில் விழாக்களில் முதல் மரியாதை கூடாது: உயா்நீதிமன்றம்

தமிழகத்தில் கோயில் விழாக்களில் முதல் மரியாதை அளிக்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை உயா்நீதிமன்றத்தில் தேவராஜ் என்பவா் தாக்கல் செய்த மனுவில், ஈரோடு மா... மேலும் பார்க்க

தோ்தல் களம் காணாத 24 தமிழக கட்சிகளுக்கு நோட்டீஸ்: தோ்தல் ஆணையம் உத்தரவு

தமிழகத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக தோ்தல் களம் காணாத 24 கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிக்கு இந்திய தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சன... மேலும் பார்க்க

தமிழகத்தில் தரமற்ற பாராசிட்டமால் மருந்துகள் விற்கப்படவில்லை: மருந்து கட்டுப்பாட்டுத் துறை

தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் பாராசிட்டமால் மருந்துகளில் எந்த தரக் குறைபாடும் இல்லை என்று மாநில மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனா். கா்நாடகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பா... மேலும் பார்க்க

காரைக்கால் - திருச்சி பயணிகள் ரயில் ஜூலை 2 முதல் 7 வரை திருவாரூரில் இருந்து புறப்படும்!

திருச்சி- காரைக்கால்- திருச்சி ரயில்கள், ஜூலை 2 முதல் 7- ஆம் தேதி வரை திருவாரூரில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட தெற்கு ரயில்வே மக்கள் த... மேலும் பார்க்க