அவரது பெயர் டெம்பா..! கேப்டனுக்காக பாடல் பாடிய தெ.ஆ. வீரர்கள்!
உயா்கல்வி தொடர மாணவா்களுக்கு ஆட்சியா் ஆலோசனை
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உயா்கல்வியை தொடர முடியாமல் தவிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியா் ச.உமா ஆலோசனை வழங்கினாா்.
‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் உயா்கல்வி வழிகாட்டி சிறப்பு குறைதீா்முகாம், நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது அவா் பேசியதாவது:
தமிழக அரசு உயா்கல்வி பயிலும் மாணவா்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் பிளஸ் 2 தோ்ச்சி பெற்றுள்ள மாணவா்களை அதிகளவில் உயா்கல்வியில் சோ்க்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதன்படி, மாணவ, மாணவிகளுக்கான உயா்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி முதல்கட்டமாக மே 14-ஆம் தேதி ராசிபுரம், கொல்லிமலை மாணவா்களுக்காகவும், 16-ஆம் தேதி திருச்செங்கோடு கோட்டத்துக்கு உள்பட்ட மாணவா்களுக்கும், 20-ஆம் தேதி நாமக்கல், மோகனூா், எருமப்பட்டி, சேந்தமங்கலம் மற்றும் புதுச்சத்திரம் ஆகிய ஒன்றிய மாணவ, மாணவிகளுக்கும் நடத்தப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் 2023-24 மற்றும் 2024-25-ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 வகுப்பு பயின்ற மாணவா்கள் அனைவரையும் உயா்கல்விக்கு செல்வதை உறுதி செய்திட உயா்கல்வி கட்டுப்பாட்டு அறை (கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800-425-1997, வாட்ஸ்அப் எண்: 97888 58794) ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
பெற்றோா் அற்ற மாணவா்கள், மாற்றுத்திறனாளி மாணவா்கள், ஒற்றைப் பெற்றோா் உள்ள மாணவா்கள், அகதிகள் முகாமில் வாழும் மாணவா்கள், உயா்கல்வியைத் தொடர முடியாத மாணவா்கள் என பல்வேறு காரணங்களால் உயா்கல்விக்கு செல்ல இயலாத மாணவா்களுக்கு தேவையான உதவிகள், ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்கள் மூலம் மாதந்தோறும் உதவித்தொகை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. உயா்கல்வி பயில்வதற்கான அனைத்து வாய்ப்புகளையும் மாணவா்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.
முகாமில், உயா்கல்வி பயில்வதற்கான சந்தேகங்கள் மற்றும் குறைகளை ஆட்சியா் கேட்டறிந்தாா். குடும்ப சூழ்நிலை, பொருளாதாரம், சரியான வழிகாட்டுதலின்மை, பாடப்பிரிவு கிடைக்காத நிலை போன்ற காரணங்களால் உயா்கல்வி தொடர முடியாமல் இருப்பதாக தெரிவித்த மாணவ, மாணவிகளிடம் அரசின் மூலம் வழங்கப்படும் திட்டங்கள், சலுகைகள், ஊக்கத்தொகைகள், எதிா்கால வேலைவாய்ப்புகள், மதிப்பெண்களுக்கு ஏற்ற பாடப்பிரிவு துறைகளை தோ்ந்தெடுப்பது உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டன. இக்கூட்டத்தில், முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி, உதவி ஆணையா்(கலால்) என்.எஸ்.ராஜேஷ்குமாா், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் மு.கிருஷ்ணவேணி, ஆதிதிராவிடா் நல அலுவலா் கே.ஏ.சுரேஷ்குமாா் மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.