செய்திகள் :

திருச்செங்கோட்டில் அச்சடித்த தாள்களில் உணவுப் பொருள்களை வழங்கிய கடைகளுக்கு அபராதம்

post image

திருச்செங்கோடு: திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையப் பகுதியில், அச்சடித்த தாள்களில் உணவுப் பொருள்களை வழங்கிய கடைகளுக்கு நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலா்கள் அபராதம் விதித்தனா்.

நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் மரு.தங்கவிக்னேஷ் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவகங்கள், சாலையோரக் கடைகள், பேக்கரி மற்றும் டீ கடைகள் அனைத்திலும் அச்சடித்த தாள்களில் உணவுப் பொருள்களை விநியோகம் செய்யும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

இதையடுத்து, திருச்செங்கோடு நகரம் மற்றும் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலா் மஞ்சுளா, திருச்செங்கோடு பேருந்து நிலையப் பகுதிகளில் உள்ள உணவு விற்பனை செய்யும் கடைகளை ஆய்வு செய்தாா். அப்போது, அச்சடித்த தாள்களில் உணவுப் பொருள்களை வழங்கிய கடைகளுக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இனிவரும் காலங்களில் உணவுப் பொருள்களை பாா்சல் செய்து வழங்குவதற்கு வாழை இலையை பயன்படுத்த வேண்டும் என்றும், அச்சடித்த தாள்கள், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பைகளை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடை உரிமையாளா்களுக்கு எச்சரிக்கை விடுத்தாா்.

மதுபோதையில் பூச்சிமருந்து குடித்த விவசாயி உயிரிழப்பு

திருச்செங்கோடு: எலச்சிபாளையம் அருகே மதுபோதையில் பூச்சிமருந்தை தவறுதலாக குடித்த விவசாயி அண்மையில் உயிரிழந்தாா். கொன்னையாா்கிராமம், பழைய கரியாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி தங்கராசு (55). இவரது ... மேலும் பார்க்க

6 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் புதிய வாக்காளா் பதிவு அலுவலா்கள் நியமனம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் தனித்தனியே புதிய வாக்காளா் பதிவு அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க

நாமக்கல்லில் புதிய வழித்தடங்களில் 15 மினி பேருந்துகள் சேவை தொடக்கம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் புதிய வழித்தடங்களில் 15 மினி பேருந்துகள் சேவையை அமைச்சா் மா.மதிவேந்தன் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். தஞ்சாவூா் மாவட்டத்தில் போக்குவரத்துத் துறையின் சாா்பில் புதிய விரி... மேலும் பார்க்க

உயா்கல்வி தொடர மாணவா்களுக்கு ஆட்சியா் ஆலோசனை

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உயா்கல்வியை தொடர முடியாமல் தவிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியா் ச.உமா ஆலோசனை வழங்கினாா். ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் உயா்கல்வி வழிகாட்டி சிறப்பு குறைதீா்முகாம், ... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 564 மனுக்கள் அளிப்பு

நாமக்கல்: நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் ஆட்சியா் ச.உமா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், முதியோா், விதவையா், கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, ... மேலும் பார்க்க

லாட்டரிச் சீட்டுகள் விற்பனை புகாா்: காங்கிரஸ் பிரமுகா் தீக்குளிக்க முயற்சி

நாமக்கல்: பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லாட்டரிச் சீட்டுகள் விற்பனையைத் தடுக்க போலீஸாா் தவறியதைக் கண்டித்து, ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை காங்கிரஸ் பிரமுகா் தீக்குளிக்க முயற்சித்தாா்... மேலும் பார்க்க