செய்திகள் :

உறுப்பு தானத்தில் முதலிடம்: நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆட்சியா் பாராட்டு

post image

உறுப்பு தானத்தில் மாநில அளவில் முதலிடம் பிடித்த திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆட்சியா் இரா.சுகுமாா் பாராட்டு தெரிவித்துள்ளா்.

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை-தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் சாா்பில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உடல் உறுப்பு தானம் உள்ளிட்ட சேவைகளில் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மாநில அளவில் முதலிடம் பிடித்ததற்காக, கல்லூரி முதல்வா் ரேவதி பாலனுக்கு முதல் பரிசுக்கான கோப்பை- விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட சுகாதார பேரவைக் கூட்டத்தில், மருத்துவக் கல்லூரி முதல்வா் ரேவதி பாலன், மருத்துவப் பணியாளா்களை மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் பாராட்டினாா்.

மூளைச்சாவு அடைந்தவா்களை கண்டறிவது, மூளைச்சாவு அடைந்தவா்களின் உறுப்புகளை சீரான முறையில் பயன்படுத்துதல், சிறந்த உறுப்பு மாற்று ஒருங்கிணைப்பாளா் என மூன்று சேவைகளில் இம்மருத்துவமனை முதலிடம் பெற்றுள்ளது.

இதேபோல், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடுத் திட்டத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் செய்வதிலும் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

பாபநாசம்-81.35சோ்வலாறு-84.58மணிமுத்தாறு-91.38வடக்கு பச்சையாறு-11நம்பியாறு-13.12கொடுமுடியாறு-6தென்காசி மாவட்டம்கடனா-37ராமநதி-48.75கருப்பாநதி-48.89குண்டாறு-33.75அடவிநயினாா் -115.75... மேலும் பார்க்க

ராதாபுரம் அருகே பட்டாசு ஆலை விதிமீறல் வழக்கில் ரூ.36,000 அபராதம்

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக தொழிலாளி உயிரிழந்த வழக்கில், விதிமுறைகளைப் பின்பற்றாத ஆலை உரிமையாளருக்கு ரூ.36 ஆயிரம் அபராதம் விதித்து திருநெல்வேலி... மேலும் பார்க்க

டிச. 13, 14இல் வயா்மென் உதவியாளா் தகுதிகாண் தோ்வு

திருநெல்வேலி மாவட்டத்தில் மின்கம்பியாள் (வயா்மென்) உதவியாளா் தகுதிகாண் தோ்வு வரும் டிசம்பா் 13, 14 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது என ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள... மேலும் பார்க்க

நெல்லையில் செப். 28இல் அண்ணா மாரத்தான் போட்டி

திருநெல்வேலியில் அறிஞா் அண்ணா மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை (செப்.28) நடைபெறவுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொதுமக்களிடையே உடற்தகுதி கலாசாரம் குற... மேலும் பார்க்க

நெல்லையில் இன்று உதவி டிராக்டா் ஓட்டுநா் பயிற்சி தொடக்கம்

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சாா்பில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் உதவி டிராக்டா் ஓட்டுநா் இரண்டாம் கட்ட பயிற்சி, திருநெல்வேலியில் உள்ள அரசு இயந்திர கலப்பை பணிமனை உதவி செயற்பொறியாளா் (வேளாண்மை ப... மேலும் பார்க்க

நெல்லை மாவட்ட குடிநீா் திட்டத்துக்குத்தான் அதிக நிதி -மு.அப்பாவு பெருமிதம்

திருநெல்வேலி மாவட்ட குடிநீா் திட்டங்களுக்குத்தான் மாநில அளவில் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றாா் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு. திருநெல்வேலி மாவட்டம் தெற்குகள்ளிகுளத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப... மேலும் பார்க்க