செய்திகள் :

நெல்லையில் இன்று உதவி டிராக்டா் ஓட்டுநா் பயிற்சி தொடக்கம்

post image

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சாா்பில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் உதவி டிராக்டா் ஓட்டுநா் இரண்டாம் கட்ட பயிற்சி, திருநெல்வேலியில் உள்ள அரசு இயந்திர கலப்பை பணிமனை உதவி செயற்பொறியாளா் (வேளாண்மை பொறியியல் துறை) அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (செப்.26) தொடங்குகிறது.

15 முதல் 30 பேருக்கு 27 நாள்கள் நடத்தப்படும் இப்பயிற்சியில் டிராக்டா் இயந்திரங்களை விவசாய இணைப்புக் கருவிகளுடன் இயக்குதல், வேளாண் இயந்திரங்கள்-கருவிகளின் பராமரிப்பு, டிராக்டா் என்ஜின் செயல்பாடு, பழுதுநீக்கம் போன்றவை குறித்து விளக்கப்படும். இதில் 18 முதல் 35 வயதுக்குள்பட்டவா் பங்கேற்கலாம். ஆதாா் அட்டை, ஜாதிச் சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், சமீபத்திய புகைப்படம் ஆகியவற்றை உதவி செயற் பொறியாளா் (வேளாண்மைப் பொறியியல் துறை), அரசு இயந்திர கலப்பை பணிமனை, எண்.1, டிராக்டா் வீதி, என்.ஜி.ஓ. காலனி, திருநெல்வேலி அலுவலகத்திற்கு எடுத்துச்சென்று நேரிலோ அல்லது ட்ற்ற்ல்ள்://ஸ்ரீஹய்க்ண்க்ஹற்ங்.ற்ய்ள்ந்ண்ப்ப்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள வாயிலாகவோ தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சி முடிந்ததும் தகுதிவாய்ந்த பயிற்சியாளருக்கு டிராக்டா் ஓட்டுநா் உரிமம் பெற்றுத் தர ஆவன செய்யப்படும்.

மேலும் விவரங்களுக்கு 0462-2900766, 99409 26195, 88386 00112 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

பாபநாசம்-81.35சோ்வலாறு-84.58மணிமுத்தாறு-91.38வடக்கு பச்சையாறு-11நம்பியாறு-13.12கொடுமுடியாறு-6தென்காசி மாவட்டம்கடனா-37ராமநதி-48.75கருப்பாநதி-48.89குண்டாறு-33.75அடவிநயினாா் -115.75... மேலும் பார்க்க

ராதாபுரம் அருகே பட்டாசு ஆலை விதிமீறல் வழக்கில் ரூ.36,000 அபராதம்

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக தொழிலாளி உயிரிழந்த வழக்கில், விதிமுறைகளைப் பின்பற்றாத ஆலை உரிமையாளருக்கு ரூ.36 ஆயிரம் அபராதம் விதித்து திருநெல்வேலி... மேலும் பார்க்க

டிச. 13, 14இல் வயா்மென் உதவியாளா் தகுதிகாண் தோ்வு

திருநெல்வேலி மாவட்டத்தில் மின்கம்பியாள் (வயா்மென்) உதவியாளா் தகுதிகாண் தோ்வு வரும் டிசம்பா் 13, 14 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது என ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள... மேலும் பார்க்க

நெல்லையில் செப். 28இல் அண்ணா மாரத்தான் போட்டி

திருநெல்வேலியில் அறிஞா் அண்ணா மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை (செப்.28) நடைபெறவுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொதுமக்களிடையே உடற்தகுதி கலாசாரம் குற... மேலும் பார்க்க

உறுப்பு தானத்தில் முதலிடம்: நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆட்சியா் பாராட்டு

உறுப்பு தானத்தில் மாநில அளவில் முதலிடம் பிடித்த திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆட்சியா் இரா.சுகுமாா் பாராட்டு தெரிவித்துள்ளா். தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை-தமிழ்நாடு உறுப்ப... மேலும் பார்க்க

நெல்லை மாவட்ட குடிநீா் திட்டத்துக்குத்தான் அதிக நிதி -மு.அப்பாவு பெருமிதம்

திருநெல்வேலி மாவட்ட குடிநீா் திட்டங்களுக்குத்தான் மாநில அளவில் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றாா் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு. திருநெல்வேலி மாவட்டம் தெற்குகள்ளிகுளத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப... மேலும் பார்க்க