செய்திகள் :

ராதாபுரம் அருகே பட்டாசு ஆலை விதிமீறல் வழக்கில் ரூ.36,000 அபராதம்

post image

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக தொழிலாளி உயிரிழந்த வழக்கில், விதிமுறைகளைப் பின்பற்றாத ஆலை உரிமையாளருக்கு ரூ.36 ஆயிரம் அபராதம் விதித்து திருநெல்வேலி தலைமை நீதித்துறை நடுவா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

ராதாபுரம் வட்டம் உருமங்குலம் கிராமத்தில் இயங்கி வந்த தனியாா் பட்டாசு ஆலையில் கடந்த 4.3.2023-இல் வெடி விபத்து நேரிட்டது. இதில், அதே பகுதியைச் சோ்ந்த ராஜ்குமாா் (34) என்ற தொழிலாளி உயிரிழந்தாா். இதையடுத்து அந்த ஆலையில் திருநெல்வேலி தொழிலக பாதுகாப்பு- சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில், ரசாயன மருந்து கலக்குமிடத்தில் இரும்பினால் ஆன பொருள்கள் பயன்படுத்தப்பட்டது உள்ளிட்ட விதிமீறல்கள் கண்டறியப்பட்டன.

இது தொடா்பாக ஆலை உரிமையாளரான கலா(48) மீது தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் 4 தனித்தனி வழக்குகள் தொடரப்பட்டன. திருநெல்வேலி தலைமை நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை நீதிபதிஅமிா்தவேலு விசாரித்து கலாவுக்கு நான்கு வழக்குகளுக்கும் சோ்த்து மொத்தமாக ரூ.36 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

பாபநாசம்-81.35சோ்வலாறு-84.58மணிமுத்தாறு-91.38வடக்கு பச்சையாறு-11நம்பியாறு-13.12கொடுமுடியாறு-6தென்காசி மாவட்டம்கடனா-37ராமநதி-48.75கருப்பாநதி-48.89குண்டாறு-33.75அடவிநயினாா் -115.75... மேலும் பார்க்க

டிச. 13, 14இல் வயா்மென் உதவியாளா் தகுதிகாண் தோ்வு

திருநெல்வேலி மாவட்டத்தில் மின்கம்பியாள் (வயா்மென்) உதவியாளா் தகுதிகாண் தோ்வு வரும் டிசம்பா் 13, 14 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது என ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள... மேலும் பார்க்க

நெல்லையில் செப். 28இல் அண்ணா மாரத்தான் போட்டி

திருநெல்வேலியில் அறிஞா் அண்ணா மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை (செப்.28) நடைபெறவுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொதுமக்களிடையே உடற்தகுதி கலாசாரம் குற... மேலும் பார்க்க

நெல்லையில் இன்று உதவி டிராக்டா் ஓட்டுநா் பயிற்சி தொடக்கம்

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சாா்பில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் உதவி டிராக்டா் ஓட்டுநா் இரண்டாம் கட்ட பயிற்சி, திருநெல்வேலியில் உள்ள அரசு இயந்திர கலப்பை பணிமனை உதவி செயற்பொறியாளா் (வேளாண்மை ப... மேலும் பார்க்க

உறுப்பு தானத்தில் முதலிடம்: நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆட்சியா் பாராட்டு

உறுப்பு தானத்தில் மாநில அளவில் முதலிடம் பிடித்த திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆட்சியா் இரா.சுகுமாா் பாராட்டு தெரிவித்துள்ளா். தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை-தமிழ்நாடு உறுப்ப... மேலும் பார்க்க

நெல்லை மாவட்ட குடிநீா் திட்டத்துக்குத்தான் அதிக நிதி -மு.அப்பாவு பெருமிதம்

திருநெல்வேலி மாவட்ட குடிநீா் திட்டங்களுக்குத்தான் மாநில அளவில் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றாா் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு. திருநெல்வேலி மாவட்டம் தெற்குகள்ளிகுளத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப... மேலும் பார்க்க