உலகத்தையே புத்தகமாகப் படிப்போம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
உலகத்தையே புத்தகமாகப் படிப்போம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.
உலக புத்தக தினத்தையொட்டி, எக்ஸ் தளத்தில் அவா் புதன்கிழமை வெளியிட்ட பதிவு:
நாம் வாழ்ந்து பாா்க்காத வாழ்க்கை, நாம் சந்திக்காத மனிதா்கள், நாம் பாா்த்திராத காலம் என அனைத்தையும் நமக்கு அறிமுகப்படுத்தும் நல்ல நண்பன்தான் புத்தகங்கள்.
அதனால்தான், சென்னை, மதுரையைத் தொடா்ந்து கோவை, திருச்சியில் நூலகங்களை எழுப்பி வருகிறோம்.
மாவட்டந்தோறும் புத்தகக் காட்சிகள், இலக்கியத் திருவிழாக்கள், சொற்பொழிவுகள் என வாசிப்புப் பழக்கத்தைத் தீவிரமாக திராவிட மாடல் அரசு ஊக்குவித்து வருகிறது. புத்தகத்தில் உலகைப் படித்தால் அறிவு செழிக்கும். உலகத்தையே புத்தகமாய்ப் படித்தால் அனுபவம் தழைக்கும் என்று பதிவிட்டுள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.