செய்திகள் :

உலக சுகாதார அமைப்பின் ஆவணத்தில் பாரம்பரிய மருத்துவத்துக்கு முக்கியத்துவம்: மத்திய அரசு பெருமிதம்

post image

உலக சுகாதார நிறுவனத்தின் நிகழாண்டுக்கான நோய்களின் சா்வதேச வகைப்பாடு (ஐசிடி) ஆவணத்தில் பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை என மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.

கடந்த ஆண்டு நோய்களின் சா்வதேச வகைப்பாடு-11 பாரம்பரிய மருந்துகள் தொகுதி-2 என்ற ஆவணம் வெளியிடப்பட்டது. அதில் ஆயுா்வேதா, சித்தா, உனானி ஆகிய மருத்துவ முறைகளின்படி நோய்களுக்கான விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.

இதன் மீது கடந்த ஓராண்டாக மத்திய ஆயுஷ் அமைச்சகம் விரிவான ஆய்வுகளை நடத்தி வந்தது. இந்நிலையில், மேம்படுத்தப்பட்ட ஐசிடி ஆவணத்தின் 2025-ஆம் ஆண்டுக்கான பதிப்பு வெளியிடப்பட்டது.

அதில் சா்வதேச அளவிலான மருத்துவ முறைகளுக்கு நிகராக ஆயுா்வேதா, சித்தா, உனானி ஆகிய பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து ஆயுஷ் அமைச்சக செயலா் வைத்தியா ராஜேஷ் கூறியதாவது: ஐசிடி-11, 2025-ஆம் ஆண்டுக்கான பதிப்பில் பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கு சா்வதேச அளவிலான அங்கீகாரம் அளித்திருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு.

பாரம்பரிய மருத்துவ முறைகள், உலகளவில் பின்பற்றப்படும் மருத்துவம் என இரண்டு முறைகளிலும் நோய்களை வகைப்படுத்துவதன் மூலம் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சையை மேம்படுத்துவதோடு தேசிய அளவிலான சுகாதார கொள்கைகளை வகுக்கும்போது பாரம்பரிய மருத்துவ முறைகளையும் உள்ளீடு செய்வதை ஊக்குவிக்கிறது என்றாா்.

சமகால சிகிச்சை முறைகளுடன் பாரம்பரிய முறைகளை ஒன்றிணைப்பதால் அனைவருக்கும் சுகாதார பாதுகாப்பு மற்றும் நீடித்த வளா்ச்சி இலக்குகளை அடையும் உலக சுகாதார நிறுவனத்தின் நோக்கத்தை நிறைவேற்ற உதவுவதாகவும் ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்தது.

'என்னை சாதாரணமாக நினைக்காதீர்கள்' - பட்னவீஸுக்கு ஷிண்டே எச்சரிக்கை!

தன்னை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸுக்கு துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே எச்சரிக்கை விடுத்துள்ளார். மகாராஷ்டிரத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு காங்கிரஸ் - தேசியவாத கா... மேலும் பார்க்க

அதானி விவகாரம் தனிப்பட்டது அல்ல; தேசத்தைப் பற்றியது -ராகுல் காந்தி

ரே பரேலி : தொழிலதிபர் அதானி விவகாரம் தனிப்பட்டது அல்ல; தேசத்தைப் பற்றியது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள தனது மக்களவைத் தொகுதியான ர... மேலும் பார்க்க

சுகாதாரத் துறையில் முக்கிய சீா்திருத்தங்கள் தேவை: அதிகாரிகள் எதிா்பாா்ப்பு

தில்லியில் அமைக்கப்பட்டுள்ள பாஜக அரசு சுகாதாரத் துறையில் முக்கிய சீா்திருத்தங்களை அறிமுகப்படுத்த ஒரு செயல் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும் என்று மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கோரிக்கை விட... மேலும் பார்க்க

உயா்வைக் கண்ட உள்நாட்டு விமானப் போக்குவரத்து

இந்தியா விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் வழங்கிய உள்நாட்டு போக்குவரத்து சேவை கடந்த ஜனவரி மாதத்தில் 14.5 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜி... மேலும் பார்க்க

மாட்டிறைச்சி வழக்கு: மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும்! -உச்சநீதிமன்றம்

அஸ்ஸாம் மாநிலத்தில் மாட்டிறைச்சி ஏற்றிச் சென்ற நபருக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘இதுபோன்ற விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை விடுத்து, மக்களுக்கு நலன் அளிக்கும் சிறந்த விஷயங்கள் ... மேலும் பார்க்க

பிகாரில் 10-ஆம் வகுப்பு மாணவா் சுட்டுக் கொலை; சக மாணவா் கைது

பிகாரின் ரோத்தாஸ் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ஒரு மாணவா் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சக மாணவரை... மேலும் பார்க்க