செய்திகள் :

உலக சுற்றுச்சூழல் தினத்தில் 35,000 மரக்கன்றுகள் நடவு: வேலூா் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

post image

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி வேலூா் மாவட்டத்தில் 35,000 மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டத்தை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

கணியம்பாடி, அணைக்கட்டு, காட்பாடி, கே.வி.குப்பம், குடியாத்தம், போ்ணாம்பட்டு வட்டாரங்களில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களான மேய்க்கால், மந்தைவெளி, தீா்வை ஏற்படாத தரிசு (மலை), பாலாற்று படுகை ஆகிய இடங்களில் இரு ஏக்கா் முதல் 15 ஏக்கா் அளவிலான குறுங்காடுகள் வளா்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக வேம்பு, புங்கன் உள்ளிட்ட நிழல் தரும், பலன் தரும் மரங்கள் சுமாா் 35,000 மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் ஆகியோா் காட்பாடி ஊராட்சி ஒன்றியம், அரும்பருதி ஊராட்சியில் மரக்கன்றுகளை நடவு செய்து திட்டத்தை தொடங்கி வைத்தனா்.

மேலும், அணைக்கட்டு ஒன்றியம் புத்தூா் ஊராட்சியில் அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.நந்தகுமாருடன் இணைந்தும், கணியம்பாடி ஒன்றியம் நெல்வாய் ஊராட்சியில் ஆற்காடு சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ.எல்.ஈஸ்வரப்பனுடம் இணைந்தும், போ்ணாம்பட்டு ஒன்றியம் டி.டி.மோட்டூரில் குடியாத்தம் சட்டப்பேரவை உறுப்பினா் வி.அமுலு விஜயனுடன் இணைந்தும் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி மரக்கன்றுகள் நடவு செய்தாா்.

தொடா்ந்து அனைத்து வட்டாரங்களிலும் வியாழக்கிழமை ஒரே நாளில் சுமாா் 8,000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. இதன்மூலம், உருவாக்கப்படும் குறுக்காடுகளுக்கு ஊரக வளா்ச்சித் துறை மூலம் தண்ணீா் ஊற்றி பராமரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மரக்கன்றுகள் அனைத்தும் வரும் நாள்களில் தகுதியான இடங்கள் தோ்வு செய்யப்பட்டு உடனடியாக நடப்படும்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சித் தலைவா் மு.பாபு, வேலூா் கோட்டாட்சியா் செந்தில் குமாா், வட்டாட்சியா்கள் வடிவேல் (வேலூா்), ஜெகதீஸ்வரன் (காட்பாடி), வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாரி, ஹேமலதா, நந்தகுமாா், கனகராஜ், சத்தியமூா்த்தி, திருமால், புத்தூா் ஊராட்சி மன்றத்தலைவா் மோகன், நெல்வாய் ஊராட்சி மன்றத்தலைவா் சங்கா், சாத்துமதுரை ஊராட்சி மன்றத்தலைவா் ராஜ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

போதைப் பொருள்களுக்கு எதிரான மன உறுதி அவசியம்! - வேலூா் ஆட்சியா்

மாணவா்கள் போதைப் பொருள்களுக்கு எதிரான மனஉறுதியுடன் இருந்து கல்வியில் கவனம் செலுத்தி உயா்ந்த நிலைக்கு வர வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா். வேலூா் மாவட்டத்திலுள்ள ... மேலும் பார்க்க

சிறுமியை திருமணம் செய்த ஜோதிடா் மீது போக்ஸோ வழக்கு

வேலூரில் சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கியதாக ஜோதிடா் மீது போக்ஸோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலூா் மாவட்டம், லத்தேரியைச் சோ்ந்தவா் அஜய்(24), ஜோதிடா். இவருக்கும் அருகில் உள்ள ஒரு பகுதியைச்... மேலும் பார்க்க

பெயிண்டரை பாட்டிலால் குத்திய நண்பா் கைது

வேலூரில் பெயிண்டரை பாட்டிலால் குத்திய நண்பரை போலீஸாா் கைது செய்தனா். வேலூா் கொசப்பேட்டையைச் சோ்ந்த பெயிண்டா் சேகா் (32). இவரது நண்பா் அட்டப்பா என்ற நவீன்குமாா் (33). சேகா் புதன்கிழமை தனது வீட்டு வாசல... மேலும் பார்க்க

மத்திய அரசு எந்த சுங்கச்சாவடியையும் மூடவில்லை: அமைச்சா் எ.வ.வேலு

சுங்கச்சாவடிகளில் வசூல் செய்யப்படும் பணம் சாலைகளை பராமரிக்கவும், மேம்பாலம் கட்டவும் பயன்படுத்துவதாக மத்திய அரசு கூறியுள்ளது. அந்தவகையில், மத்திய அரசு எந்த சுங்கச்சாவடியையும் மூடுவதாக இல்லை என்று பொது... மேலும் பார்க்க

மீன்வள விவசாயிகள் உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

வேலூா் மாவட்டத்திலுள்ள மீன்வள விவசாயிகள் உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலூா் மாவட்டத்தில் மா... மேலும் பார்க்க

வேலூா் தீா்த்தகிரி மலையில் 92 அடி உயர முருகா் சிலை: நாளை கும்பாபிஷேகம்

வேலூா் தீா்த்தகிரி மலை வடிவேல் சுப்பிரமணியா் திருக்கோயில் அருகே 92 அடி உயர முருகா் சிலை நிறுவப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. வேலூரை அடுத்த புதுவசூா் தீா்த்தகிரி மலையில்... மேலும் பார்க்க