செய்திகள் :

உலக பாரம்பரிய சின்னமாக செஞ்சி கோட்டை! முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி!

post image

செஞ்சி கோட்டையை பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அங்கீகரித்தது மகிழ்ச்சியளித்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "கிழக்கின் ட்ராய்" என்றழைக்கப்படும் செஞ்சி கோட்டையை, உலக பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அறிவித்தது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.

மாபெரும் சோழர் கோயில்கள், மாமல்லபுரத்தில் உள்ள நினைவுச்சின்னங்கள், நீலகிரி மலை ரயில்வே மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகள் உள்ளிட்ட யுனெஸ்கோவின் பெருமைமிக்க தளங்களின் பட்டியலில் இந்த கம்பீரமான மலைக்கோட்டை இப்போது இணைந்துள்ளது.

தமிழ்நாட்டிற்கும் அதன் நீடித்த கலாசார பாரம்பரியத்திற்கும் ஒரு பெருமையான தருணம் இது என்று பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்பட்ட செஞ்சி கோட்டையை உலகப் பராம்பரியச் சின்னமாக அறிவித்தது யுனஸ்கோ. இந்தியாவில் மராத்தியர்களால் கட்டப்பட்ட 12 கோட்டைகளுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் அளித்துள்ளது.

பிரிட்டிஷ்காரர்களால் அசைக்க முடியாத ஒன்றாக அமைந்ததால், செஞ்சி கோட்டையை கிழக்கின் ட்ராய் என்றழைத்தனர்.

CM Stalin delighted that GingeeFort has been inscribed as a UNESCO World Heritage Site

போராட்டத்துக்கு போராட்டம்! தவெகவினர் கைது!

சென்னையில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் சென்னையை சேர்ந்த தவெகவினர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்று காவல்துறையினரின் நிபந்தனை அளித்ததற்கு எதிராக வெளிமாவட்ட தவெக நிர்வாகிகள் போராட்டம் நடத்தி வருகின்ற... மேலும் பார்க்க

மேட்டூர் அணை: உபரிநீர் போக்கி மதகுகள் மீண்டும் மூடல்!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால், அணையின் உபரிநீர் போக்கி மதகுகள் இரண்டு வாரங்களுக்குப் பிறகு இன்று(ஜூலை 13) மூடப்பட்டது.கர்நாடக மாநிலத்தில் பெய்து வந்த கனமழை காரணமாக, அங்குள்ள கபினி மற்றும் கி... மேலும் பார்க்க

டேங்கர் ரயில் தீ விபத்தால் உயிர்ச்சேதம் இல்லை! உதவி எண்கள் அறிவிப்பு!

திருவள்ளூர் அருகே நிகழ்ந்த டேங்கர் ரயில் தீ விபத்தால் யாருக்கும் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்று தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.மின் கேபிள் எரிந்ததால் ரயில் சேவையில் பாதிக்கப்பட்டுள்ளதாக... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 22,500 கன அடியாக குறைந்துள்ளது.கடந்த மூன்று நாள்களாக மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 30,250 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.இன்று(ஜூலை 13) காலை அணைக்கு வரும் நீரின் அள... மேலும் பார்க்க

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது! இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்!

எல்லைதாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து அட்டூழியம் செய்வது தொடர்ந்து நீடித்துக் கொண்டேதான் இருக்கிறது. இலங்கை கடற்ப... மேலும் பார்க்க

டேங்கர் ரயில் தீ விபத்து: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

திருவள்ளூர் அருகே கச்சா எண்ணெய் கொண்டு சென்ற டேங்கர் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தால் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.சென்னை எண்ணூரிலிருந்து மும்பைக்கு எண்ணெ... மேலும் பார்க்க