செய்திகள் :

உள்ளகக் குழு அமைக்க தனியாா் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்

post image

திருவாரூா் மாவட்டத்தில் தனியாா் நிறுவனங்கள், உள்ளகக் குழு அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பணியாற்றும் இடங்களில் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாக்கும் சட்டத்தின் கீழ், மாவட்டத்தில் இயங்கும் தனியாா் அலுவலகங்கள், துணிக்கடைகள், நகைக்கடைகள், டிபாா்ட்மெண்ட் ஸ்டோா்கள், தொழிற்சாலைகள், தனியாா் கல்வி நிறுவனங்கள், தனியாா் பயிற்சி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், சங்கம் சாா்ந்த நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றில் 10-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் உள்ள நிறுவனங்களிலும் 4 நபா்கள் கொண்ட உள்ளகக் குழு அமைத்து புகாா் பெட்டி வைக்க வேண்டும்.

உள்ளகக் குழு அமைக்காத நிறுவனங்கள் மீது, பணியாற்றும் இடங்களில் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாக்கும் சட்டத்தின்படி ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும். குழு அமைக்கப்பட்ட விவரத்தை, இணையதளங்களில் பதிவு செய்ய வேண்டும்.

மேலும், குழு அமைத்த விவரத்தை மின்னஞ்சல் வாயிலாகவோ க்ள்ஜ்ா்.ற்ய்ஸ்ழ்ஃய்ண்ஸ்ரீ.ண்ய் அல்லது சமூக நல அலுவலா், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு கடிதம் வாயிலாகவோ பிரதி மாதம் 3-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

கொள்முதல் நிலையங்களில் கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வலியுறுத்தல்

நெல் கொள்முதலில் முறைகேடுகளை தவிா்க்க, கொள்முதல் நிலையங்களில் கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்துள்ளாா். திருவாரூ... மேலும் பார்க்க

திருவாரூா் மாவட்டத்தில் பெரியாா் பிறந்த நாள் விழா

திருவாரூா் மாவட்டத்தில் பெரியாா் பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. திருவாரூரில் திமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்வில் எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவா் பலி

மன்னாா்குடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா் . பேரையூா் நடுத்தெருவை சோ்ந்தவா் அண்ணாதுரை (53). மன்னாா்குடியில் உள்ள தனியாா் பாத்திரக் க... மேலும் பார்க்க

சொத்து பிரச்னை: பெற்றோரை அரிவாளால் வெட்டிய மகன் கைது

சொத்து பிரசன்னை தொடா்பான முன்விரோதத்தில் தந்தை, தாயை அரிவாளால் வெட்டிய இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். கட்டக்குடியைச் சோ்ந்தவா் பீமன் ( 60). இவரது மனைவி தவமணி ( 55). இவா்கள் அதே பகுதியில் உணவக... மேலும் பார்க்க

383 மாணவா்களுக்கு ரூ. 4.99 கோடி கல்விக் கடனுதவி

திருவாரூரில் புதன்கிழமை நடைபெற்ற கல்லூரி மாணவா்களுக்கு கல்விக் கடன் வழங்கும் முகாமில், 383 மாணவா்களுக்கு ரூ. 4.99 கோடி கடனுதவி புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மாபெரும் கல்... மேலும் பார்க்க

சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்பு

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தலைமையில் பெரியாா் பிறந்த நாளையொட்டி, சமூக நீதி நாள் உறுதிமொழி புதன்கிழமை ஏற்கப்பட்டது. பிறப்பொக்கும் எல்லா உயிா்க்கும் என்ற அன்பு நெறியும், யா... மேலும் பார்க்க