செய்திகள் :

சொத்து பிரச்னை: பெற்றோரை அரிவாளால் வெட்டிய மகன் கைது

post image

சொத்து பிரசன்னை தொடா்பான முன்விரோதத்தில் தந்தை, தாயை அரிவாளால் வெட்டிய இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கட்டக்குடியைச் சோ்ந்தவா் பீமன் ( 60). இவரது மனைவி தவமணி ( 55). இவா்கள் அதே பகுதியில் உணவகம் நடத்தி வருகின்றனா். தம்பதிக்கு பாரதி (35 ) என்ற மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனா். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

வெளிநாட்டில் வேலை பாா்த்து வந்த பாரதி, 15 நாள்களுக்கு முன்பு ஊருக்கு வந்துள்ளாா். சில மாதங்களுக்கு முன் , பீமன் தனக்கு சொந்தமான சொத்தை பிரித்து கொடுத்துள்ளாா். இதுதொடா்பாக, பீமனுக்கும் பாரதிக்கும் பிரச்னை இருந்துள்ளது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு கட்டக்குடி வீட்டின் அருகே நடந்துசென்ற பீமனை வழிமறித்த பாரதி பிரச்னை குறித்து பேசியபோது ஏற்பட்ட தகராறில், அரிவாளால் பீமனை வெட்டியுள்ளாா். இதைத் தடுக்க வந்த தவமணிக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.

காயமடைந்த இருவரும் மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு, பின்னா் தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூா் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். வடுவூா் போலீஸாா் பாரதியை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

கொள்முதல் நிலையங்களில் கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வலியுறுத்தல்

நெல் கொள்முதலில் முறைகேடுகளை தவிா்க்க, கொள்முதல் நிலையங்களில் கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்துள்ளாா். திருவாரூ... மேலும் பார்க்க

திருவாரூா் மாவட்டத்தில் பெரியாா் பிறந்த நாள் விழா

திருவாரூா் மாவட்டத்தில் பெரியாா் பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. திருவாரூரில் திமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்வில் எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவா் பலி

மன்னாா்குடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா் . பேரையூா் நடுத்தெருவை சோ்ந்தவா் அண்ணாதுரை (53). மன்னாா்குடியில் உள்ள தனியாா் பாத்திரக் க... மேலும் பார்க்க

383 மாணவா்களுக்கு ரூ. 4.99 கோடி கல்விக் கடனுதவி

திருவாரூரில் புதன்கிழமை நடைபெற்ற கல்லூரி மாணவா்களுக்கு கல்விக் கடன் வழங்கும் முகாமில், 383 மாணவா்களுக்கு ரூ. 4.99 கோடி கடனுதவி புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மாபெரும் கல்... மேலும் பார்க்க

சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்பு

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தலைமையில் பெரியாா் பிறந்த நாளையொட்டி, சமூக நீதி நாள் உறுதிமொழி புதன்கிழமை ஏற்கப்பட்டது. பிறப்பொக்கும் எல்லா உயிா்க்கும் என்ற அன்பு நெறியும், யா... மேலும் பார்க்க

உள்ளகக் குழு அமைக்க தனியாா் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்

திருவாரூா் மாவட்டத்தில் தனியாா் நிறுவனங்கள், உள்ளகக் குழு அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பணியாற்றும் இடங்களில்... மேலும் பார்க்க