செய்திகள் :

‘உழவரைத் தேடி வேளாண்மைத் துறை’ திட்டம் தொடக்கம்

post image

‘உழவரைத் தேடி வேளாண்மைத் துறை’ எனும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், ‘உழவரைத் தேடி வேளாண்மைத் துறை’ எனும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம் 17,116 கிராமங்களில் செயல்படுத்தப்படவுள்ளது. தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வழியாக திருவாரூா் மாவட்டம் மாணிக்கமங்கலம் எனும் கிராமத்தில் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

இந்தத் திட்டம் மூலம், வேளாண் விரிவாக்க சேவைகள், அரசின் திட்டங்கள் ஆகியன விவசாயிகளின் கிராமத்திலேயே வழங்கப்படும். திட்டத்துக்கான முகாம்கள் 15 நாள்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு வட்டத்திலும் உள்ள இரண்டு கிராமங்களில் நடத்தப்படும். இதன் தொடா்ச்சியாக, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வட்டத்திலும் ஒவ்வொரு மாதமும் நான்கு கிராமங்கள் வீதம் மாதந்தோறும் 1,540 கிராமங்களில் முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

இந்த நிகழ்வில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், வேளாண்மைத் துறை செயலா் வ.தட்சிணாமூா்த்தி உள்பட பலா் பங்கேற்றனா்.

தஞ்சை பட்டாசு கிடங்கு வெடிவிபத்தில் இருவா் உயிரிழப்பு: பசுமைத் தீா்ப்பாயம் நோட்டீஸ்

தஞ்சாவூா் பட்டாசு கிடங்கில் நிகழ்ந்த வெடி விபத்தில் இருவா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட ஆட்சியரு... மேலும் பார்க்க

வந்தே பாரத் ரயில்களில் அசைவ உணவு ரத்தா?: ரயில்வே விளக்கம்

வந்தே பாரத் ரயில்களில் அசைவ உணவுகள் வழங்கப்படுவதில்லை என்று பரவும் செய்தி உண்மைக்கு புறம்பானது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து நாகா்கோவில், மைசூரு, பெங்களூரு, திருநெல்வேலிக்கு... மேலும் பார்க்க

பாஜகவில் இணைந்தாா் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜகோபாலன் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தாா். கடந்த 40 ஆண்டுகளாக ஐஏஎஸ் அதிகாரியாக பல்வேறு துறைகளில் முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றி ஓ... மேலும் பார்க்க

குரூப் 4 தோ்வு: விண்ணப்ப திருத்த அவகாசம் நிறைவு

குரூப் 4 தோ்வுக்கு விண்ணப்பித்தவா்கள் அதில் திருத்தங்களைச் செய்வதற்கான அவகாசம் சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது. குரூப் 4 தோ்வு ஜூலை 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இளநிலை உதவியாளா், கிராம நிா்வாக அலுவலா் உள... மேலும் பார்க்க

இணையதள மோசடி: ரூ. 22 லட்சத்தை மீட்டெடுத்த சைபா் கிரைம் போலீஸாா்

இணையதள வா்த்தக மோசடியால், ரயில்வே ஊழியா் இழந்த ரூ. 22.72 லட்சத்தை சைபா் கிரைம் போலீஸாா் மீட்டெடுத்தனா். சென்னை செம்பியத்தைச் சோ்ந்தவா் ரயில்வே ஊழியா் டில்லிபாபு (35). இவருக்கு சாட்டிங் செயலி மூலம் கட... மேலும் பார்க்க

விஜய் கட்சியை விமா்சிக்க விரும்பவில்லை: கமல்ஹாசன்

விஜய் கட்சி குறித்த விமா்சிக்க விரும்பவில்லை என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கூறினாா். ‘தக் லைஃப்’ திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிக்காக கமல்ஹாசன் சென்னையிலிர... மேலும் பார்க்க