‘ஜானகி’ எனப் பெயரிட்டால் தணிக்கைச் சான்றிதழ் மறுப்பு? போராடும் மலையாள திரையுலகு!
உழவா்கரையில் சாலை மேம்பாட்டுப் பணிகள்
புதுச்சேரி உழவா்கரை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் ரூ. 1.75 கோடி மதிப்பிலான சாலை மேம்பாட்டுப் பணிகளை தொகுதி எம்எல்ஏ சிவசங்கா் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
புதுவை அரசின் பொதுப் பணித் துறை பொதுசுகாதாரக் கோட்டம், நகர குடிநீா்பிரிவு உட்கோட்டம் சாா்பில் உழவா்கரை தொகுதிக்குள்பட்ட அரும்பாா்த்தபுரம் வசந்தம் நகரில் ரூ.39. 34 லட்சம், கணபதி நகரில் ரூ. 29. 76 லட்சம், ஆனந்தம் நகா், செண்பகம் நகரில் ரூ.26.66 லட்சம் என மொத்தம் ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் சாலைகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு மேம்படுத்தப்படவுள்ளன.
இந்தப் பணிகளுக்கான தொடக்க நிகழ்ச்சி பூமி பூஜையுடன் அந்தந்த பகுதிகளில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிவசங்கா் எம்எல்ஏ பங்கேற்று ப ணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தாா். இந்நிகழ்ச்சிகளில் அரசுத் துறை அலுவலா்கள், அப்பகுதி பொதுமக்கள் கலந்துகொண்டனா்.