செய்திகள் :

உ.பி: திருமணத்திற்கு சென்ற கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பேர் பலி, 6 பேர் காயம்

post image

ஹர்தோய்: உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் திருமணத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தவர்கள் கார் பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்த விபத்தில் ஒரு குழந்தை உள்பட ஐந்து பேர் பலியாகினர். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டம், பாட்டியானிம் கிராமத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பாலி கிராமத்தினர் பங்கேற்றுவிட்டு எர்டிகா காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையின் கட்டைவிரலை வெட்டிய செவிலியர்!

அப்போது, மஜ்ஜிலா காவல் நிலையம் அருகே வந்துகொண்டிருந்தபோது கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், காரில் இருந்த ஒரு குழந்தை உள்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர், ஆறு பேர் படுகாயமடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான ஐந்து பேரின் உடல்களையும் மீட்டு உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதேபோன்று, வெள்ளிக்கிழமை ஜான்பூர் மாவட்டம் லகோவா கிராமத்தில் ஒரு தனியார் பயணிகள் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் நான்கு பேர் பலியாகினர், 15 பேர் படுகாயமடைந்தனர். இதில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

‘யாா் அந்த சாா்’ கேள்வி எழுப்பினால் இனி நீதிமன்ற அவமதிப்பு!

சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனைத் தவிா்த்து வேறு எவருக்கும் தொடா்பு இல்லை என்றும், ‘யாா் அந்த சாா்’ எனகேள்வி எழுப்பினால், அது நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும் என்றும்... மேலும் பார்க்க

குறைவான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களைச் சேர்க்க மறுக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை!

குறைவான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களைச் சேர்க்க மறுக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். கோவை, டவுன்ஹால் பகுதியில் உள்ள அரசு பெண்கள்... மேலும் பார்க்க

ஞானசேகரனுக்கு தூக்கு தண்டனை வழங்கியிருக்க வேண்டும்: தமிழிசை

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு தூக்கு தண்டனை வழங்கியிருக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.சென்னை அண்ணா பல்கலைக்கழக... மேலும் பார்க்க

ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை: செய்திகள் நேரலை

எந்தெந்த குற்றத்துக்கு எவ்வளவு தண்டனை?அண்ணா பல்கலை மாணவியை கடுமையாக தாக்கியதற்காக 7 ஆண்டுகள், ஆதாரங்களை அழித்தற்கு 3 ஆண்டுகள், தனிநபர் அந்தரங்க உரிமைகளை மீறியக் குற்றத்துக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை ... மேலும் பார்க்க

5 நாள் அரசுமுறைப் பயணமாக பியூஷ் கோயல் பிரான்ஸ், இத்தாலி பயணம்

புது தில்லி: மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் பியூஷ் கோயல் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் புறப்பட்டுச் சென்றார். இதனைத் தொடர்ந்து 2 நாள் அரசுமுறைப் பயணமாக இத்தாலி ச... மேலும் பார்க்க

தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறப்பு!

சென்னை: கோடை விடுமுறை நிறைவடைந்த நிலையில் தமிழகத்தில், மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளும் திங்கள்கிழமை (ஜூன் 2) திறக்கப்படவுள்ளன.தமிழக பள்ளிக்கல்வியில் பத்தாம் வகுப்ப... மேலும் பார்க்க