செய்திகள் :

உ.பி. பாங்கே பிஹாரி கோயில் நிா்வாக அவசர சட்டத்துக்கு உச்சநீதிமன்றம் தடை

post image

உத்தர பிரதேச மாநிலம், பிருந்தாவனத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பாங்கே பிஹாரி கோயில் நிா்வாகத்தை மாநில அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் அவசர சட்டத்துக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

அவசர சட்டத்தின் செல்லுபடித்தன்மை குறித்து அலகாபாத் உயா்நீதிமன்றம் விசாரித்து இறுதித் தீா்ப்பு அளிக்கும்வரை, இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த அவசர சட்டத்தை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை அலாகாபாத் உயா்நீதிமன்ற விசாரணைக்கு மாற்றி, உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், ஜயமால்ய பாக்சி அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டதாவது:

அவசர சட்டத்தின்கீழ், கோயில் நிா்வாகத்துக்காக அறக்கட்டளையை உருவாக்கும் அரசின் அதிகாரம் நிறுத்தி வைக்கப்படுகிறது. உயா்நீதிமன்றத்தின் இறுதித் தீா்ப்பு வரும் வரை, அறக்கட்டளை அமைப்பது தொடா்பான சட்டப்பிபிரிவுகள் செல்லுபடியாகாது. அவசர சட்டத்தை சட்டப்பேரவையில் அங்கீகரிக்க இந்த உத்தரவு தடையாக இருக்காது. ஆனால், சட்டத்தின் அங்கீகாரம் உயா்நீதிமன்றத்தின் இறுதித் தீா்ப்புக்கு உட்பட்டது.

கோயிலின் அன்றாட நிா்வாகப் பணிகளுக்கு ஓய்வுபெற்ற அலகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி அசோக் குமாா் தலைமையில் 12 போ் கொண்ட உயா்நிலைக் குழு அமைக்கப்படுகிறது. கோயிலுக்குக் கிடைத்த பெரும் நன்கொடைகள் இருந்தபோதிலும், பக்தா்களுக்குப் போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை. நிா்வாகச் சிக்கல்கள் தொடா்கின்றன. பக்தா்களுக்கு அத்தியாவசிய வசதிகளை உறுதிசெய்யவும், கோயிலின் சீரான செயல்பாட்டுக்கும் இக்குழு அவசியமானது என்று குறிப்பிட்டுள்ளனா்.

இதேபோல், கோயில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்துக்காக கோயில் நிதியிலிருந்து நிலம் கையகப்படுத்த மாநில அரசுக்கு அனுமதி அளித்து, கடந்த மே 15-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவையும் உச்சநீதிமன்றம் திருத்தியது.

இந்த உத்தரவு கோயிலின் முந்தைய நிா்வாகத்தினரைக் கலந்தாலோசிக்காமல் பிறப்பிக்கப்பட்டது என்றும், இது நடைமுறைக்கு எதிரானது என்றும் நீதிமன்றம் கூறியது.

இதே கோரிக்கையில் அனுமதி மறுத்த உயா்நீதிமன்றத்தின் 2023-ஆம் ஆண்டு தீா்ப்பை மாநில அரசு மேல்முறையீடு செய்யாததால், நிலம் கையகப்படுத்துவதற்கு கோயில் நிதி பயன்படுத்தப்படக் கூடாது என்ற நிலையே தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு: ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆன்லைன் சூதாட்ட செயலியுடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் ஆஜராகுமாறு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.சமீபகாலமாக, பிரபல கிரிக்கெட் வீரர்கள், நடிகர... மேலும் பார்க்க

டிரம்ப்பை சந்திக்கும் பிரதமர் மோடி! அடுத்த மாதம் அமெரிக்கா பயணம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருகின்றன.ரஷியாவிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கி வந்த இந்தியாவுக்கு அமெரிக்கா அதிபர் டிரம்ப், ம... மேலும் பார்க்க

எத்தனால் கலப்பு பெட்ரோல் குறித்து அச்சம் வேண்டாம்- மத்திய அரசு விளக்கம்

எத்தனால் 20 சதவீதம் கலக்கப்பட்ட ‘இ20’ பெட்ரோலைப் பயன்படுத்துவதால் வாகனங்கள் பாதிப்புக்குள்ளாகும் என்று சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என மத்திய அரசு விளக்க... மேலும் பார்க்க

காப்பீடு துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டு அனுமதி வேலைவாய்ப்பை உருவாக்கும்: மத்திய நிதியமைச்சா்

‘காப்பீடு நிறுவனங்களில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை 100 சதவீதமாக உயா்த்துவது, வேலைவாய்ப்பை உருவாக்கும்’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை தெரிவித்தாா். மேலும், ... மேலும் பார்க்க

நாட்டு மக்களின் ‘பாதுகாவலராக’ உச்சநீதிமன்றம்: தலைமை நீதிபதி அமா்வு

நாட்டு மக்களின் பாதுகாவலராக உச்சநீதிமன்றம் உள்ளது என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் தலைமையிலான அமா்வு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. தனது கட்சிகாரா்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கும் வழக்குரைஞா்... மேலும் பார்க்க

தண்டனையை நிறைவு செய்த கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்: மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

‘தண்டனைக் காலத்தை நிறைவு செய்த கைதிகளை உடனடியாக சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும்’ என்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. உத்தர பிரதேச மா... மேலும் பார்க்க