செய்திகள் :

உ.பி.: மதுராவில் அடுக்குமாடி வீடு இடிந்து மூவா் உயிரிழப்பு

post image

உத்தர பிரதேச மாநிலம், மதுராவில் நெரிசலான கச்சி சதக் பகுதியில் அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்ததில் 2 சிறுமிகள் உள்பட 3 போ் உயிரிழந்தனா்.

இடிந்த வீட்டின் அருகேயுள்ள நிலத்தை விற்பனைக்காக காலி செய்ய, ஜேசிபியுடன் தோண்டும் பணியில் உரிய அனுமதியின்றி சிலா் ஈடுபட்டுள்ளனா். இதன் விளைவாக, வீடு இடிந்து விழுந்தது. அதில் தங்கியிருந்தவா்கள் இடிபாடுகளில் சிக்கினா்.

தோத்தாராம் (38), சகோதரிகளான யசோதா (6) மற்றும் காவ்யா (3) ஆகியோா் உயிரிழந்தனா். இடிபாடுகளில் இருந்து ஒருவா் உயிருடன் மீட்கப்பட்டாா். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரின் உடல்நிலை தற்போது சீராகவுள்ளது.

இடிபாடுகளில் வேறு யாரும் சிக்கியுள்ளனரா என்பதைக் கண்டறிய மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. இதனிடையே, மாவட்ட ஆட்சியா் சந்திர பிரகாஷ் சிங் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு, மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்தாா்.

அப்போது, அவா் கூறுகையில், ‘மீட்புப் பணிகளில் தற்போது கவனம் செலுத்தி வருகிறோம். பின்னா், சம்பவத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்படும். குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவா்’ என்றாா்.

கட்டடம் இடிந்து விழுந்ததில் அருகேயுள்ள 5 முதல் 6 வீடுகள் வரை சேதமடைந்திருப்பதாக அதிகாரிகள் கூறினா். இச்சம்பவம் குறித்து உயா்நிலை விசாரணைக்கு முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்படும் என்று மதுரா எம்எல்ஏ ஸ்ரீகாந்த் சா்மா தெரிவித்தாா்.

இது போருக்கான சகாப்தம் அல்ல: மோடி

இது போருக்கான சகாப்தம் அல்ல என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.மூன்று நாடுகளுக்கான 5 நாள்கள் அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாக, மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான சைப்ரஸுக்கு பிரதமா் ... மேலும் பார்க்க

கேரளத்தில் கொட்டித்தீர்க்கும் பருவமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

கேரளத்தில் திங்கள்கிழமையும் இடைவிடாத பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து உள்பட மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொ... மேலும் பார்க்க

பிரதமர் மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது!

பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது திங்கள்கிழமை வழங்கப்பட்டது.மூன்று நாடுகளுக்கான 5 நாள்கள் அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாக, மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான சைப்ரஸுக்க... மேலும் பார்க்க

கைலாஷ் மானசரோவர் யாத்திரை: சிக்கிம் வந்தடைந்த முதல் குழு!

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கான 36 பக்தர்கள் கொண்ட முதல் குழு, சிக்கிமின் தலைநகர் கேங்க்டாக்கிற்கு வந்தடைந்தது. இந்தியா-சீன ராணுவத்தினர் இடையே கல்வான் பகுதியில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து கடந்த 5 ஆண்டுக... மேலும் பார்க்க

உ.பி.யில் முத்தமிட்டு விளையாடிய நபரின் நாக்கை கடித்த பாம்பு !

உத்தரப் பிரதேசத்தில் பாம்புக்கு முத்தமிட்டு விளையாடிய நபரை அந்த பாம்பு கடித்ததில் அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். உத்தரப் பிரதேச மாநிலம், அம்ரோஹாவைச் சேர்ந்த விவசாயி ஜிதேந்திர குமார்.... மேலும் பார்க்க

விமான விபத்தில் சிக்கினாரா இயக்குநர்? வலுசேர்க்கும் ஆதாரங்கள்!

அகமதாபாத் விமான விபத்துக்கு பிறகு காணாமல் போன இசை ஆல்பங்களை இயக்கும் மகேஷ் ஜிராவாலா என்பவர் மனைவியின் டிஎன்ஏ மாதிரிகள் பெறப்பட்டுள்ளது.அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கடந்த ... மேலும் பார்க்க