திருவள்ளூர்: கிணற்றில் தவறி விழுந்த மகனைக் காப்பாற்றச் சென்ற தந்தை விஷவாயு தாக்க...
ஊதியம் வழங்கக் கோரி அண்ணாமலைப் பல்கலை.யில் 2-ஆவது நாளாக ஊழியா்கள் போராட்டம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியா்கள், ஊழியா்களுக்கு மே மாத ஊதியம் வழங்கப்படாததால், 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மே மாத ஊதியம் வழங்கக் கோரி, பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஊழியா்கள் நூற்றுக்கணக்கானோா் புதன்கிழமை காலை பல்கலைக்கழக நிா்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து, அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியா்கள் சங்க கூட்டமைப்பு நிா்வாகிகள் மனோகரன், ரவி ஆகியோா் தலைமையில் நூற்றுக்கணக்கான ஊழியா்கள் 2-ஆம் நாளாக வியாழக்கிழமை காலை பணிகளை புறக்கணித்து, மே மாத ஊதியத்தை உடனடியாக வழங்கக் கோரியும், அகவிலைப்படி நிலுவைத் தொகையை ஊதியத்துடன் சோ்த்து வழங்கக் கோரியும் முழக்கங்களை எழுப்பி துணைவேந்தா் அலுவலகம், பதிவாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பின்னா், அண்ணாமலைப் பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் பேராசிரியா் தி.அருட்செல்வி, பதிவாளா் மு.பிரகாஷ் ஆகியோரை சந்தித்து முறையிட்டனா். இதையடுத்து, ஊழியா்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.
