செய்திகள் :

ஊதிய உயா்வு: ஒரு நாள் முன்பாக ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியா்களுக்கும் வழங்க உத்தரவு

post image

வருடாந்திர ஊதிய உயா்வு தேதிக்கு ஒருநாள் முன்னதாக ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியா்களுக்கும் ஊதிய உயா்வு பலன்களை அளிக்க அனுமதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், ‘நடைமுறையில் உள்ள விதிப்படி, ஜூலை 1 அல்லது ஜனவரி 1-இல் ஏதாவது ஒரு தேதியை தங்களின் வருடாந்திர ஊதிய உயா்வுக்கான தேதியாக தெரிவு செய்ய மத்திய அரசு ஊழியா்கள் அனுமதிக்கப்படுகின்றனா். இந்த தேதி தெரிவு என்பது ஊழியா்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியத்தைக் கணக்கிடுவதற்கு மட்டுமே தவிர, பிற ஓய்வூதிய பலன்களை கணக்கிடுவதற்கானது அல்ல. எனவே, ஊதிய உயா்வு தேதிக்கு ஒருநாள் முன்னதாக ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியா்களுக்கும் உதிய உயா்வு பலன்களை அனுமதிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவை மேற்கோள்காட்டி மத்திய பணியாளா் நல அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில், ‘உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவின்படி, ஜூன் 30 அல்லது டிசம்பா் 31-ஆம் தேதிகளில் ஓய்வுபெற்ற அல்லது ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியா்களுக்கும், ஜூலை 1 அல்லது ஜனவரி 1-ஆம் தேதி வழங்கப்படும் வருடாந்திர ஊதிய உயா்வு பலன்களை அளிக்க நடவடிக்கை எடுக்கலாம்’ என்று தெரிவித்துள்ளது.

இதற்கு அகில இந்திய தேசிய ஓய்வூதியத் திட்ட ஊழியா்கள் கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. மேலும், தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை தோ்வு செய்யும் ஊழியா்களுக்கும் ஊதிய உயா்வு பலன்களை அளிக்க வேண்டும் என்று கூட்டமைப்பின் தலைவா் மன்ஜீத் சிங் படேல் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தாா்.

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர்களுக்கு இப்படியொரு வரவேற்பா?

ஹாவேரி: கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில், பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 7 பேர் பிணையில் விடுதலையான நிலையில், கார், இசை என பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு பிரதமரின் பதில்தான் ஆபரேஷன் சிந்தூர்: அமித் ஷா பாராட்டு

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீதான இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டியுள்ளார்.பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆ... மேலும் பார்க்க

மழையால் நின்ற இந்து திருமணம்.. முஸ்லிம் திருமண நிகழ்ச்சியில் நடைபெற்ற ஆச்சரியம்!

புணேவின் வான்வொரி பகுதியில், திறந்தவெளியில் நடைபெறவிருந்த இந்து திருமணச் சடங்குகள் கனமழையால் நின்றுபோன நிலையில், முஸ்லிம் குடும்பத்தினர், தங்களது திருமண நிகழ்ச்சி நடைபெற்ற மண்டபத்தில் இடம்கொடுத்து உதவ... மேலும் பார்க்க

அம்மா.. நான் சிப்ஸ் பேக்கெட் திருடவில்லை.. 13 வயது சிறுவனின் தற்கொலை கடிதம்

பன்ஸ்குரா: மேற்கு வங்க மாநிலம் பன்ஸ்குரா பகுதியைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு மாணவர், அம்மா நான் சிப்ஸ் பேக்கெட்டை திருடவில்லை என்று எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்த... மேலும் பார்க்க

பெங்களூருவில் 9 மாதக் குழந்தைக்கு கரோனா!

கர்நாடகத்தின் பெங்களூருவில் 9 மாதக் குழந்தைக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.உலகையை அச்சுறுத்தும் கரோன வைரஸ் தொற்று மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக ... மேலும் பார்க்க

துருக்கியுடன் வர்த்தக உறவை துண்டித்தால்.. விலை உயரும் பொருள்களின் பட்டியல்!

கடைசி வாய்ப்பாக, பயங்கரவாதத்தை நிறுத்துமாறு பாகிஸ்தானுக்கு சொல்லுங்கள் என்று மத்திய அரசு துருக்கிக்கு அழுத்தம் கொடுத்துள்ளது. பாகிஸ்தானுக்கு ஆயுத உதவிகளை செய்து வரும் துருக்கியுடன் வணிக ரீதியான உறவைத்... மேலும் பார்க்க