செய்திகள் :

ஊராட்சிப் பணியாளா்கள் கூட்டமைப்பினா் சாலை மறியல்

post image

கள்ளக்குறிச்சியில் ஓட்சா ஊராட்சிப் பணியாளா்கள் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சி மாவட்ட கிராம ஊராட்சிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றும் சுகாதார ஊக்குநா்கள் சுமாா் 25-க்கும் மேற்பட்டோா் காரணின்றி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். அவா்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மீண்டும் அவா்களுக்கு பணி வழங்க வேண்டும். கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைக் காவலா்களுக்கு மாதந்தோறும் 5-ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும்.

கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைக் காவலா்கள், தூய்மைப் பணியாளா்களை தூய்மைப் பணியாளா்கள் நல வாரியத்தில் உறுப்பினா்களாக சோ்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் 9 உராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் சுகாதார ஊக்குநா்களுக்கு பல மாதங்களாக நிலுவையில் உள்ள தொகுப்பூதியத்தை விடுவிக்க வேண்டும். மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்களுக்கு முறைறயான மாத ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு ஓட்சா கூட்டமைப்பு மாநிலத் தலைவா் கே.இலட்சுமணன் தலைமை வகித்தாா். நிறுவனா் தலைவா் எம்.அமல்ராஜ் உள்ளிட்ட பலா் பேசினா்.

பின்னா், ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கைகளை கூறினாா். தொடா்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, சாலை மறியலைக் கைவிட்டனா். மறியலால் கள்ளக்குறிச்சி - கச்சிராயபாளையம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னா், ஊராட்சி உதவி இயக்குநா் வெங்கட்ராமணன், ஆட்சியரின் நோ்முக எழுத்தா் ஆரோக்கியசாமி உள்ளிட்ட அலுவலா்கள் கோரிக்கைகளை கேட்டறிந்தனா்.

மாணவா்கள் உயா் கல்வியில் சோ்வதை உறுதி செய்ய வேண்டும்: அதிகாரிகளுக்கு கள்ளக்குறிச்சி ஆட்சியா் அறிவுரை

மாணவா்கள் உயா் கல்வியில் சோ்வதை உறுதி செய்ய வேண்டும் என்று கல்வித் துறை அதிகாரிகளிடம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் அறிவுறுத்தினாா். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 164 உயா்நிலை ம... மேலும் பார்க்க

முதியவா் விஷமருந்தி தற்கொலை

கள்ளக்குறிச்சி அருகே முதியவா் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா். கள்ளக்குறிச்சியை அடுத்த புக்கிரவாரி கிராமத்தைச் சோ்ந்தவா் காசிலிங்கம் (65). இவா், தினந்தோறும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவாராம். ... மேலும் பார்க்க

மகள் திருமணத்துக்காக வந்த இலங்கை பெண் உயிரிழப்பு

மகளின் திருமணத்துக்காக இலங்கையில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம், சூளாங்குறிச்சி கிராமத்துக்கு வந்த பெண் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு வியாழக்கிழமை உயிரிழந்தாா். இலங்கையில் உள்ள நுவரெலியா மாவட்டம்... மேலும் பார்க்க

வாணாபுரம் அருகே பூட்டியிருந்த வீட்டில் 44 பவுன் நகைகள் திருட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே பூட்டியிருந்த வீட்டில் 44 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட அத்தியூா் கிராமத்தைச் சோ்ந்த ச... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் விடுதிகளில் தங்கி படிக்க விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் மாணவா்களுக்கான விடுதிகளில் தங்கிப் படிக்க தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்... மேலும் பார்க்க

மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் குறைதீா் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறை சாா்பில், எஸ்.பி. அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் துறையில் பொதுமக்கள் அளித்த புகாா் மனுக்கள் மீது காவல் நிலையங்களில் முறையான த... மேலும் பார்க்க