செய்திகள் :

ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஓட்டுநர், கிளார்க் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

post image

ஈரோடு மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை, அந்தியூர், பவானிசாகர், கோபிச்செட் டிபாளையம், கொடுமுடி, நம்பியூர், சத்தியமங்கலம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் ஓட்டுநர், கிளார்க் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: ஈப்பு ஓட்டுநர்(Jeep Driver) - 2

தகுதி: 8-ஆம்வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.19,500-71,900

பணி: இரவு காவலர் (Night Watchman) - 4

தகுதி: எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,700 - 58,100

பணி: அலுவலக உதவியாளர்(Office Assistant) - 6

தகுதி: 8-ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,700 - 58,100

பணி: பதிவறை எழுத்தர் (Record Clerk) - 2

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,900-58,500

வயது வரம்பு: பொதுப் பிரிவினர்கள் 21 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். பிசி, பிசிஎம், எம்பிசி பிரிவினர் 34 வயதிற்குள்ளும், எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினர் 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் காலியிடங்கள் ஏற்பட்டுள்ள தாலுகாவில் அல்லது ஊராட்சி ஒன்றிய பகுதியில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வில் விண் ணப்பதாரரின் தகுதி, இதர சான்றிதழ்கள் சரிபார்க்கப் படும். நேர்முகத் தேர்வு குறித்த விபரம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவினர்களுக்கு ரூ.50. இதர அனைத்து பிரிவினர் ரூ.100. கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnrd.tn.gov.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கொடுக் கப்பட்டுள்ளது. அதை டவுன் லோடு செய்து, பூர்த்தி செய்து, 30.09.2025 தேதிக்கு முன் ஆன்லைனில் அனுப்பவும். கூடுதல் விபரம் இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள் ளது.

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தமிழ்நாடு மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

GOVERNMENT OF TAMILNADU RURAL DEVELOPMENT & PANCHAYAT RAJ DEPARTMENT Application for the Vacant Post at Panchayat Union Level

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேஷன் ஆகிய பிரிவுகளில் பட்டயம்(டிப்ளமே... மேலும் பார்க்க

பெண்கள் சேவை மையத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

தமிழ்நாடு அரசின் சமூகநலத் துறையின்கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் கீழ்வரும் பணிகளுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Social Workerகாலியிடங... மேலும் பார்க்க

எஸ்பிஐ வங்கியில் 122 மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில்(எஸ்பிஐ) நிரப்பப்பட உள்ள 122 மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் அக்டோபர் 2 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவ... மேலும் பார்க்க

என்எல்சி நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்?

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் செயல்பட்டு வரும் நவரத்னா தகுதி பெற்ற, இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன்(என்எல்சி) நிறுவனத்தில் அனல் மின் நிலையங்களின் செயல்பாடு மற்றும் ப... மேலும் பார்க்க

விண்ணப்பித்துவிட்டீர்களா..? சர்வதேச நிதிச் சேவை மைய ஆணையத்தில் உதவி மேலாளர் பணி!

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் சர்வதேச நிதிச் சேவை ஆணையத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து செப்.25-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி... மேலும் பார்க்க

தமிழ்நாடு மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

தமிழ்நாடு மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறையில் காலியாகவுள்ள நிபுணர்கள்(ஸ்பெஷலிஸ்ட்), உதவியாளர் மற்றும் தரவு உள்ளீடு ஆபரேட்டர் பதவிகளுக்கு தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்ய தகுதியான நபர்களிடமிருந்து செப்... மேலும் பார்க்க