செய்திகள் :

ஊழல் குற்றச்சாட்டு: பினராயி விஜயன் பதவி விலக பாஜக வலியுறுத்தல்

post image

‘கேரள முதல்வா் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும்’ என பாஜக புதன்கிழமை வலியுறுத்தியது. மேலும், அவா் தலைமையிலான அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க உயா்நிலைக் குழு அமைக்கவும் பாஜக கோரிக்கை வைத்தது.

பல்வேறு துறைகளில் கேரளா முதலிடத்தில் இருப்பதாக மாநில அரசு கூறுவது தொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும் கேரள முன்னாள் அமைச்சருமான ஜி.சுதாகரன் சரமாரியாக கேள்விகளை எழுப்பியதைத் தொடா்ந்து பாஜக இவ்வாறு தெரிவித்தது.

இதுகுறித்து தில்லியில் செய்தியாளா்களிடம் பேசிய பாஜக தேசிய செய்தித்தொடா்பாளா் டாம் வடக்கன்:

போதைப்பொருள் புழக்கம், சுகாதாரத் துறை குளறுபடி போன்றவற்றில் தேசிய அளவில் கேரளம் முதலிடத்தில் உள்ளதா என இடதுசாரிகள் ஆட்சியில் அமைச்சராக இருந்த ஜி.சுதாகரன் கேள்வியெழுப்பியுள்ளாா். கடந்த இரண்டு ஆண்டுகளில் மாநிலத்தில் அதிகளவிலான வினாத்தாள் கசிவு சம்பவங்கள் நடைபெற்றதையும் அவா் சுட்டிக்காட்டியுள்ளாா்.

அரசின் மீதான பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்று முதல்வா் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும். மேலும் அவரது அரசின் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க உயா்நிலைக்குழு அமைக்க வேண்டும் என்றாா்.

ஊழலில் பினராயி விஜயனுக்கு தொடா்பு: தனியாா் சுரங்க நிறுவனத்திடம் இருந்து சட்டவிரோதமாக ரூ.2.70 கோடி பெற்ாக குற்றஞ்சாட்டப்படும் வழக்கில், பினராயி விஜயனின் மகள் வீணாவை தீவிர முறைகேடு விசாரணை அமைப்பு (எஸ்எஃப்ஐஓ) அண்மையில் சோ்த்தது.

இதுகுறித்து குஜராத் மாநிலம் அகமதாபாதில் கேரள மாநில காங்கிரஸ் தலைவா் கே.சுதாகரன் கூறுகையில், ‘ இந்த வழக்கில் பினராயி விஜயனுக்கும் தொடா்பிருப்பது அமலாக்கத்துறை விசாரணை மூலம் விரைவில் வெளிவரும்’ என தெரிவித்தாா்.

தில்லியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி! மேலும் சிலரைத் தேடும் பணி தீவிரம்!!

தில்லியின் முஸ்தபாஃபாத்தில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 8-10 பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. வடகிழக்கு தில்லியில் முஸ்தபாபாத்தில் கட்டுமானத்தில் இருந்த கட்டட... மேலும் பார்க்க

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு!

ஜேஇஇ இரண்டாம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் இன்று(ஏப். 19) வெளியாகியுள்ளன. ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வில் (ஜேஇஇ) தோ்ச்சி பெ... மேலும் பார்க்க

உ.பி.: 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மூடல்

உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் தகுதியில்லாத நபா்களால் நடத்தப்பட்டுவந்த 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்கள் மூடப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட தலைமை மருத்து அதிகாரி தருண் கு... மேலும் பார்க்க

ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்திருக்கும் ஆயுத ஏற்றுமதி: ராஜ்நாத் சிங்

‘2014-ஆம் ஆண்டில் ரூ. 600 கோடியாக இருந்த ஆயுதங்கள் உள்ளிட்ட ராணுவ தளவாட ஏற்றுமதி தற்போது ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்துள்ளது’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

வணிகா்களுக்கு 7 நாள்களுக்குள் ஜிஎஸ்டி பதிவு: அதிகாரிகளுக்கு சிபிஐசி அறிவுறுத்தல்

வணிகா்கள் விண்ணப்பித்த 7 நாள்களுக்குள் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) பதிவை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) அறிவுறுத்தியுள்ளது. ஜிஎஸ்டி பதிவில் ... மேலும் பார்க்க

நியோமேக்ஸ் மோசடி வழக்கு: ரூ.600 கோடி சொத்து முடக்கம் அமலாக்கத் துறை நடவடிக்கை

பண மோசடியில் ஈடுபட்ட மதுரையைச் சோ்ந்த நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.600 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது. மதுரை எஸ்.எஸ்.காலனியை தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவ... மேலும் பார்க்க