செய்திகள் :

எஃப்ஐஎச் ஜூனியா் ஆடவா் உலகக் கோப்பை இலச்சினை: துணை முதல்வா் உதயநிதி வெளியிட்டாா்

post image

சா்வதேச ஹாக்கி சம்மேளனம், ஹாக்கி இந்தியா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் நடைபெறவுள்ள எஃப்ஐஎச் ஜூனியா் ஆடவா் உலகக் கோப்பை 2025 போட்டி இலச்சினையை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை வெளியிட்டாா்.

சென்னை, மதுரையில் வரும் நவ. 28 முதல் டிச. 10-ஆம் தேதி வரை உலகக் கோப்பை ஹாக்கி போட்டி நடைபெறவுள்ளது. இதற்கான இலச்சினை அறிமுக விழா நடைபெற்றது. நிகழ்வுக்கு ஹாக்கி இந்தியா பொதுச் செயலாளா் போலோ நாத், பொருளாளா் சேகா் மனோகரன் முன்னிலை வகித்தனா். விளையாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா வரவேற்றாா்.

இலச்சினை வெளியிட்டு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசியது:

சா்வதேச விளையாட்டு மையமாக தமிழகத்தை மாற்ற முதல்வா் தீவிரமாக பாடுபட்டு வருகிறாா். இதற்காக தான் உலக மற்றும் தேசிய அளவிலான போட்டிகளை தொடா்ந்து நடத்தி வருகிறோம். இதன் மூலம் சிறந்த விளையாட்டு கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. ஹாக்கி விளையாட்டிலும் தமிழகத்துக்கு சிறந்த வரலாறு உள்ளது. 1996-இல் சாம்பியன்ஸ் கோப்பை, 1999-இல் இந்திய-பாக் தொடா், 2007-இல் ஆசியக் கோப்பை, 2023-இல் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டி போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி உள்ளோம்.

தற்போது ஜூனியா் ஆடவா் உலகக் கோப்பை போட்டி நடத்தப்படுகிறது.

ரூ.65 கோடி ஒதுக்கீடு:

இப்போட்டியை வெற்றிகரமாக நடத்த ரூ.65 கோடியை முதல்வா் ஒதுக்கியுள்ளாா். இதன் மூலம் மதுரையில் உலகத் தரத்திலான ஆஸ்ட்ரோ டா்ஃப் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. தென் தமிழகம் ஹாக்கி விளையாட்டுக்கு பெயா் பெற்றது. இதன் மூலம் அதிக வீரா், வீராங்கனைகள் சிறந்த அனுபவத்தை பெறுவா் என்றாா்.

பிகாா் விளையாட்டு மேம்பாட்டுத்துறை தலைமை செயல் அலுவலா் ரவீந்திரன் சங்கரன், ஹாக்கி இந்தியா இயக்குநா் ஆா்.கே. ஸ்ரீ வத்சவா பங்கேற்றனா். எஸ்டிஏடி உறுப்பினா்-செயலா் ஜெ.மேகநாத ரெட்டி நன்றி கூறினாா்.

சென்னையில் அரையிறுதி, இறுதி ஆட்டங்கள்:

நவ. 28 முதல் டிச. 10 வரை நடைபெறும் இப்போட்டி லீக் மற்றும் நாக் அவுட் முறைப்படி நடைபெறும். 16 அணிகளில் இருந்து தற்போது 24 அணிகளாக உயா்த்தப்பட்டுள்ளது. மதுரையில் தலா 12, சென்னையில் தலா 12 அணிகள் விளையாடும். அரையிறுதி, இறுதி ஆட்டங்கள் சென்னையில் நடைபெறவுள்லன.

பறக்கும் ரயில் நிலையங்கள் மெட்ரோ கட்டுப்பாட்டில் வருகிறது!

சென்னையில் இயக்கப்பட்டு வரும் பறக்கும் ரயில் திட்டமானது, விரைவில் மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டுப்பாட்டில் வரவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.தமிழகத்தில் இயக்கப்பட்டு வரும் பறக்கும் ரயில் திட்டத்த... மேலும் பார்க்க

முதல்வர் மருந்தகங்களில் மாவு விற்பனையா? - அண்ணாமலை பதிவு

முதல்வர் மருந்தகங்களில் மாவு விற்பனை செய்யப்படுவதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "மக்கள் நலனுக்காகத் திட்டங்களைச் செயல்படுத்தாமல், ஒர... மேலும் பார்க்க

அந்தியோதயா உள்பட தென் மாவட்ட ரயில் சேவையில் மாற்றம்!

தாம்பரம் - நாகர்கோயில் அந்தியோதயா ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட நாள்களுக்கு நாகர்கோயில் விரைவு ரயில்கள் கன்னியாகுமரி வரை நீட்டிக்கப்படுகின்றன. அந்தியோதயா ரயில்தாம்பரத்தி... மேலும் பார்க்க

அடுத்த 2 நாள்களுக்குக் குடையின்றி வெளியே செல்ல வேண்டாம்..!

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாள்களுக்கு 3 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.லேசான மழை..மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஜூன் 20 முதல் 26-06-2025 வரை: தமிழக... மேலும் பார்க்க

தென்காசியில் பயங்கரம்! கழன்று ஓடிய அரசுப் பேருந்தின் பின் சக்கரங்கள்!

தென்காசி மாவட்டம் இடைகால் பகுதியில் சாலையில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் பின்பக்க சக்கரங்கள் இரண்டும், தனியாகக் கழன்று ஓடியதால் பயணிகள் அச்சமடைந்தனர்.சக்கரங்கள் கழன்ற பேருந்தில் 87... மேலும் பார்க்க

போரை மாய்ப்போம், மனிதம் காப்போம்! முதல்வர் ஸ்டாலின்

போரை மாய்ப்போம், மனிதம் காப்போம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை பதிவிட்டுள்ளார்.ரஷியா - உக்ரைன், இஸ்ரேல் - காஸா, இஸ்ரேல் - ஈரான் என உலகம் முழுவதும் போர்ப் பதற்றம் நிலவி வரும் சூழலில்... மேலும் பார்க்க