செய்திகள் :

"எங்களால்தான் உடை அணிகிறீர்கள்" - பாஜக எல்எல்ஏ சர்ச்சை பேச்சு; மகாராஷ்டிராவில் வலுக்கும் எதிர்ப்பு

post image

மகாராஷ்டிராவில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது. இந்த அரசு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு பெண்களுக்கு மாதம் 1500 ரூபாய் வழங்கும் திட்டத்தை அறிவித்தது.

இத்திட்டம் அறிவிக்கப்பட்டதால் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி அமோக வெற்றி பெற்றது. பெண்களுக்கு மாதம் ரூ.1500 கொடுப்பதைச் சில பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள் அடிக்கடி சொல்லிக்காட்டிக் கொண்டிருக்கின்றனர்.

இப்போது இது போன்ற ஒரு சர்ச்சையில் மகாராஷ்டிரா ஜால்னா தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ. பாபன்ராவ் லோனிகர் சிக்கி இருக்கிறார். பாபன்ராவ் தனது தொகுதிக்கு உட்பட்ட பார்துர் என்ற இடத்தில் கூடியிருந்த இளைஞர்கள் மத்தியில் பேசுவது போன்ற ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது.

பா.ஜ.க எம்.எல்.ஏ. பாபன்ராவ் லோனிகர்
பா.ஜ.க எம்.எல்.ஏ. பாபன்ராவ் லோனிகர்

அதில், "உங்களது தந்தை விவசாயம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி ரூ.6,000 கொடுக்கிறார். உங்களது தாய், சகோதரிகள், உங்களது மனைவிகளுக்கு லட்கி பஹின் யோஜனா திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,500 கொடுக்கிறோம்.

எங்களால் தான் நீங்கள் ஆடை மற்றும் காலணி அணிகிறீர்கள். நீங்கள் வைத்திருக்கும் தொலைபேசி கூட எங்களால் தான் உங்களிடம் இருக்கிறது. எங்களிடம் இருந்து அனைத்தையும் வாங்கிக் கொண்டு எங்களை விமர்சிக்கிறீர்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இளைஞர்கள் அரசைச் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருவதைச் சுட்டிக்காட்டி இவ்வாறு பேசியிருந்தார். பாபன் ராவ் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும் சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ.) பாபன் ராவ் கருத்துக்கு அதிருப்தியைத் தெரிவித்துள்ளார்.

சிவசேனா (உத்தவ்) சட்டமேலவை உறுப்பினர் அம்பாதாஸ் தன்வே இது குறித்து கூறுகையில், "பாபன் ராவ் கருத்து ஆங்கிலேய மனநிலையைக் காட்டுகிறது. மக்களால் தான் பாபன் ராவ் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். எம்.எல்.ஏ. அணியும் உடைகள், காலணி, விமான டிக்கெட், காருக்கான பெட்ரோல் போன்றவை மக்களால் தான் கிடைக்கின்றன. மக்கள் எம்.எல்.ஏ.வின் வார்த்தைகளை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். தேர்தல் வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

சிந்து நதி நீர்: "பாகிஸ்தானின் கடிதங்கள் இந்தியாவின் மனதை மாற்றாது" - அமைச்சர் திட்டவட்டம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தைத் திரும்பப் பெற தொடர்ந்து கடிதங்கள் எழுதப்பட்டாலும், இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என மத்திய நீர்வளத் துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் தெரிவித்துள்ளார். "சி... மேலும் பார்க்க

பாஜக - அதிமுக கூட்டணியில் தவெக? "வாய்ப்புகள் இருக்கு; காரணம்..." - ராஜேந்திர பாலாஜி சொல்வது என்ன?

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனியார் ஊடகம் ஒன்றிற்குப் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் NDA கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு, "தேர்தலில் நாங்கள் NDA கூட்டணியின் கீழ் போட்டி... மேலும் பார்க்க

PMK: பாமக-வை ராமதாஸ் தொடங்கியது ஏன்? - மக்கள் மருத்துவர் டு மூச்சிருக்கும் வரை நானே தலைவர் |In-depth

1987 இல் தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர் ஆட்சி செய்துக் கொண்டிருந்த காலக்கட்டம் அது. மருத்துவர் ஒருவரின் தலைமையில் தொடர் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. நெடுஞ்சாலைகளில் மரங்களை வெட்டி போட்டு பாதைகளை தடுத... மேலும் பார்க்க

`இந்தித் திணிப்புக்கு எதிராக...'- மும்பையில் நடக்கும் பேரணியில் ஒன்று சேரும் தாக்கரே சகோதரர்கள்!

மகாராஷ்டிரா பள்ளிகளில் நடப்பு ஆண்டு முதல் 1-5வது வகுப்பு வரை மூன்றாவது மொழியாக இந்தி அறிமுகம் செய்யப்படும் என்று மாநில அரசு அறிவித்தது. இதற்கு கல்வியாளர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெர... மேலும் பார்க்க

``அரசியலமைப்புலிருந்து 'சோசலிஸ்ட், மதச்சார்பற்ற' என்ற சொற்கள் நீக்க வேண்டும்" - RSS பொதுச் செயலாளர்

ஜூன் 25, 1975 அன்று அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசால் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. இந்த ஆண்டுடன் அவசர நிலை அமல்படுத்தப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. பா.ஜ.க தலைமையிலான ம... மேலும் பார்க்க

"சுங்க கட்டணம் வசூலிக்க மத்திய அரசுக்கு அதிகாரமில்லை" - உயர் நீதிமன்றத்தில் முன்னாள் எம்எல்ஏ வழக்கு

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.தென்காசி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும... மேலும் பார்க்க