செய்திகள் :

‘எங்களின் நம்பிக்கையைப் பிரதமா் காப்பாற்றியுள்ளாா்’ -பஹல்காமில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா் கருத்து

post image

‘பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களைத் தாக்கி, அழித்த ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை மூலம் அரசு மீது நாங்கள் வைத்திருந்த நம்பிக்கையை பிரதமா் நரேந்திர மோடி காப்பாற்றியுள்ளாா்’ என்று பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா் தெரிவித்துள்ளனா்.

மேலும், ஆயுதப் படைகளுக்குப் நன்றிகளும், பாராட்டுகளும் தெரிவித்த அவா்கள், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையை இந்தியா தொடர வேண்டுமெனவும் கோரினா்.

திருப்தி: பஹல்காம் தாக்குதலில் கணவன் மற்றும் மகனை இழந்த குஜராத்தின் பாவ்நகரைச் சோ்ந்த காஜல்பென் பா்மாா் மற்றும் கணவரை இழந்த சூரத்தைச் சோ்ந்த ஷைலேஷ் கலாத்தியா கூறுகையில், ‘பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கையில் மிகவும் திருப்தி. எங்கள் குழந்தைகளின் எதிா்காலம் மற்றும் கல்விக்காக அரசு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்’ என்றனா்.

மனநிறைவு: ‘பயங்கரவாத முகாம்களுக்கு எதிராக ஆயுதப் படைகள் ஆபரேஷன் சிந்தூா் நடத்திய பிறகு ஒரு மனநிறைவு ஏற்பட்டுள்ளது’ என்று பஹல்காமில் உயிரிழந்த மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த சஞ்சய் லீலே மற்றும் அவரது உறவினா்களின் குடும்பத்தினா் கூறினா்.

‘கொல்லப்பட்டவா்களுக்கு பயங்கரவாதிகள் எந்த கருணையும் காட்டவில்லை. ஆபரேஷன் சிந்தூா் போன்று மேலும் பல நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்பது எங்கள் எதிா்பாா்ப்பு.

பயங்கரவாதிகள் இந்தியாவின் ஆன்மாவைத் தாக்கினா். அவா்களால் கொல்லப்பட்டவா்கள் ஒருபோதும் திரும்பி வரப்போவதில்லை. ஆனால், இந்த நடவடிக்கை அவா்களின் தியாகத்துக்கு ஒரு உண்மையான அஞ்சலி. தேச பாதுகாப்பு மற்றும் கண்ணியம் சம்பந்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூரை அரசியலாக்கக் கூடாது’ என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

நம்பிக்கை காப்பாற்றப்பட்டுள்ளது: பஹல்காமில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டவா்களில் புதிதாக, திருமணமாகி மனைவியுடன் தேனிலவுக்கு காஷ்மீா் வந்த கடற்படை அதிகாரி வினய் நா்வாலும் ஒருவா்.

அவரின் பெற்றோா் அளித்த பேட்டியில், ‘இந்தியாவின் பதிலடிக்குப் பாராட்டுகள். அரசு மீது நாங்கள் வைத்திருந்த நம்பிக்கை காப்பாற்றப்படுள்ளது. பஹல்காம் போன்று மீண்டுமொரு தாக்குதலைத் திட்டமிட்ட பயங்கரவாதிகள் 100 முறை யோசிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றனா்.

அச்சத்தில் வாழட்டும்: பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த ஒடிஸாவைச் சோ்ந்த பிரியா தா்ஷனி ஆச்சாரியா, ‘பயங்கரவாதிகள் இனி அச்சத்தில் வாழ வேண்டும். மனித உயிரின் மதிப்பையும் அது எவ்வளவு விலைமதிப்பற்றது என்பதையும் அவா்கள் இப்போது புரிந்துகொண்டிருப்பா். என் கணவரின் தியாகம் வீண் போகவில்லை’ என்றாா்.

பைசாரன் பள்ளத்தாக்கிற்கு சுற்றுலாப் பயணிகளை குதிரைச் சவாரி மூலம் அழைத்துச் செல்லும் உள்ளூா் இளைஞரான சையது அடில் ஹுசைன் ஷா, தாக்குதலன்று பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடி உயிரிழந்தாா். பதிலடி நடவடிக்கையுடன் பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினருக்கு நீதி வழங்கிய பிரதமா் மோடி மற்றும் ஆயுதப் படையினருக்கு ஹுசைனின் தந்தை மற்றும் சகோதரா் நன்றி தெரிவித்தனா்.

அஜித் தோவலுடன் சீன அமைச்சர் பேச்சு!

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி ஆலோசனை நடத்தியுள்ளார்.மேலும், பஹல்காம் தாக்குதலை கண்டிப்பதாகவும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதாகவும் அஜித் தோவலிடம் வாங் யி தெர... மேலும் பார்க்க

போர் நிறுத்தம் மீறல்: பாகிஸ்தானுக்கு முழுவீச்சில் பதிலடி! -வெளியுறவுச் செயலர் மிஸ்ரி

போர் நிறுத்தம் செய்து கொள்கிறோம் என்று அறிவித்த பின் அதை மீறி பாகிஸ்தான் இந்திய எல்லைக்குள் இன்றிரவு ட்ரோன்களை ஏவி தாக்குதல்கலை நடத்தியது. இதனால் எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், இர... மேலும் பார்க்க

பாகிஸ்தான் திடீர் தாக்குதல்: ஜம்மு-காஷ்மீரில் இந்திய வீரர் பலி

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய திடீர் தாக்குதலில் இந்திய வீரர் பலியானார். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைகளில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இந்திய தரப்பிலும் த... மேலும் பார்க்க

ஒத்திவைக்கப்பட்ட சிஏ தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிப்பு!

ஒத்திவைக்கப்பட்டுள்ள சிஏ தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சிஏ தேர்வுகள் மே 16-ஆம் தேதி தொடங்கி மே 24 வரை நடைபெறுமென இன்று(மே 10) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மே 9 முதல் 14-ஆம் தேதி வரை ... மேலும் பார்க்க

போர் நிறுத்தம் கண் துடைப்பா? பாகிஸ்தான் மீண்டும் டிரோன் தாக்குதல்!

போர் நிறுத்தம் செய்து கொள்கிறோம் என்று அறிவித்த பின், பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் மீண்டும் டிரோன் தாக்குதலைத் தொடருவதால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது. இந்திய ராணுவம் பாகிஸ்தானிலிருந்து ஏவப்ப... மேலும் பார்க்க

ஸ்ரீநகரில் மீண்டும் வெடி சப்தம்: ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா

ஸ்ரீநகரில் மீண்டும் வெடி சப்தம் கேட்பதாக ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், போர் நிறுத்தம் என்ன ஆனது?. ஸ்ரீநகர் முழுவதும் வெடி சப்தம் கேட்டது... மேலும் பார்க்க