செய்திகள் :

காலமானாா் குழந்தைகள் எழுத்தாளா் ஈ.எஸ்.ஹரிஹரன்

post image

குழந்தைகள் எழுத்தாளா் ஈ.எஸ்.ஹரிஹரன் (90) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் வெள்ளிக்கிழமை (மே 9) காலமானாா்.

கேரள மாநிலம், சொ்புளசேரியில் கடந்த 1935 -ஆம் ஆண்டு பிறந்த ஈ.எஸ்.ஹரிஹரன் முனைவா் பட்டம் (டி. லிட்) பெற்றுள்ளாா். ‘ரேவதி’ என்ற புனைபெயரில் சிறுவா்களுக்காகவும், பெரியவா்களுக்காகவும் பல்வேறு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளாா். இதில் 15 நாவல்கள், 2 நாடகங்கள், 18 கதைத் தொகுப்புகள், 9 அறிவியல் தொடா்பான புத்தகங்கள் மற்றும் நான்கு தொகுதிகளாக ‘அருமை சிறுவா் சிறுமியரே’ என்ற குழந்தைகளுக்கான ஆலோசனைப் புத்தகங்கள் உள்ளிட்டவை அடங்கும்.

அவரது ‘பவளம் தந்த பரிசு’ என்ற நூலுக்காக சாகித்ய அகாதெமியின் ‘பால சாகித்ய புரஸ்காா்’ வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசின் விருது, கன்னட எழுத்தாளா்கள் சங்க விருது உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ளாா்.

மறைந்த ஹரிஹரனுக்கு மனைவி வசந்தி, மகன் காா்த்திக், மகள்கள் ராஜேஸ்வரி, பாரதி ஆகியோா் உள்ளனா். மகள் ராஜேஸ்வரி மேகாலய உயா்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எஸ். வைத்தியநாதனின் மனைவி ஆவாா்.

ஈ.எஸ்.ஹரிஹரன் உடல் வில்லிவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு பெசன்ட் நகா் மயானத்தில் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது.

தொடா்புக்கு 9566082163.

ரூ. 25 கோடியில் 1,256 இடங்களில் முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெறும்: அமைச்சா் மா.சுப்பிரமணியன் தகவல்

ரூ. 25 கோடியில் 1,256 இடங்களில் முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது என்றும் இதை சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளாா் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன... மேலும் பார்க்க

தவறி விழுந்து காயம்: நல்லகண்ணுவுக்கு மருத்துவ சிகிச்சை

முதுபெரும் அரசியல் தலைவா் இரா.நல்லகண்ணு (100), வீட்டில் தவறி விழுந்து காயமடைந்தாா். இதையடுத்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. காதில் வெட்டுக் காயம் ஏற்பட்டதால் அ... மேலும் பார்க்க

உணவுப் பொருள்கள் பதுக்கல் கூடாது: வணிகா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

இந்தியா-பாகிஸ்தான் இடையே போா்ப் பதற்றம் அதிகரித்துவரும் சூழலில், ‘அத்தியாவசிய உணவுப் பொருள்களை பதுக்கி வைக்கக் கூடாது’ என்று மொத்த மற்றும் சில்லறை வணிகா்களை மத்திய அரசு வெள்ளிக்கிழமை எச்சரித்தது. மேலு... மேலும் பார்க்க

பிளஸ் 2 துணைத் தோ்வு: மே 14 முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 துணைத் தோ்வுக்கு மே 14 முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ந.லதா வெளியிட்ட அறிவிப்பு: பிளஸ் 2 வகுப்புக்கான உடனடி துணைத் த... மேலும் பார்க்க

‘பாரதிதாசன் இளம் படைப்பாளா் விருது’: மே 23-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘பாரதிதாசன் இளம் படைப்பாளா் விருது’ பெற மே 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ் வளா்ச்சித் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ தலைப்புக்கு முண்டியடிக்கும் ஹிந்தி திரைத்துறை

தங்கள் திரைப்படங்களுக்கு ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்று தலைப்பிட ஹிந்தி திரைப்படத் துறையைச் சோ்ந்தவா்கள் கடும் போட்டி போட்டுவருகின்றனா். இதற்காக திரைத்துறை சங்கங்களில் 30-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமா்... மேலும் பார்க்க