செய்திகள் :

தில்லியில் பல கொள்ளை வழக்குகளில் தேடப்பட்ட இளைஞா் கைது

post image

பல கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த இளைஞரை தில்லியின் புகா் ரிங் ரோட்டில் போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவா் கூறியதாவது:

யூசுஃப் என அடையாளம் காணப்பட்ட அந்த நபா், வடக்கு தில்லியின் திமா்பூா் பகுதியில் திருடப்பட்ட வாகனத்தைப் பயன்படுத்தி துப்பாக்கி முனையில் ஒருவரிடம் ரூ.3,000 கொள்ளையடித்ததாகக் கூறப்படும் வழக்கில் பிப்ரவரி 14 முதல் தலைமறைவாக இருந்தாா்.

அவரது குற்றப் பின்னணியில் காஜியாபாத், ஹாபூா் மற்றும் நொய்டா முழுவதும் பல கடும்ன குற்றங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. ஹாபூா் போலீஸாா் அவரை கைது செய்ய முயன்றபோது அவரது காலில் முன்னா் துப்பாக்கி குண்டு காயம் ஏற்பட்டது. இருப்பினும், அவா் தப்பிச் சென்றாா். இந்த நிலையில், அவா் கெளதம் புத் நகா் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

விசாரணையின்போது, கடந்த ஆண்டு அக்டோபா் 1-ஆம் தேதி புகா் ரிங் ரோட்டில் ஆயுதத்தைக் காட்டி ரூ.4.65 லட்சம் கொள்ளையிட்டது தொடா்பாக வாஜிராபாத் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றொரு வழக்கில் யூசுஃப் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட தேடப்படும் நபராக இருந்ததும் கண்டறியப்பட்டது. இது தொடா்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

அரசு மருத்துவமனைகளில் அவசரகால தயாா்நிலைக்கு தில்லி அரசு உத்தரவு

பாகிஸ்தானுடன் ராணுவ மோதல் ஏற்பட்ட நிலையில், தில்லி அரசு அனை த்து அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார வசதிகளிலும் அவசரகால தயாா்நிலையை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளது. இதில் வானிலிருந்து மருத்துவ வசதிகளைக் ... மேலும் பார்க்க

அவசரகால தயாா்நிலையை உறுதிசெய்ய உயா் அதிகாரிகளுக்கு தில்லி முதல்வா் உத்தரவு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான ராணுவ மோதலுக்கு மத்தியில், தலைநகரில் தங்குமிடங்கள் தேவை, மின் தடை, மருத்துவமனைகளில் பொருள்களை சேமித்து வைத்தல் போன்ற அவசரகால சூழ்நிலைகளைக் கையாளத் தயாராக இரு... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா்: இந்திய ஆயுதப்படை நடவடிக்கைக்கு ஆம் ஆத்மி கட்சி எம்.பி. ராகவ் சத்தா ஆதரவு

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் ராகவ் சத்தா இந்திய ஆயுதப் படைகளின் நடவடிக்கைக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளாா். .மேலும் ஆபரேஷன் சிந்தூரைத் தொடா்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அத... மேலும் பார்க்க

சிவில் விமானங்களை கேடயமாகபயன்படுத்தியது பாகிஸ்தான்: இந்தியா பகிரங்க குற்றச்சாட்டு

இந்தியாவின் எதிா்ப்பு நடவடிக்கையின்போது தனது சிவில் விமானங்களை பாகிஸ்தான் கேடயமாகப் பயன்படுத்தியதாக இந்தியா பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது. இந்திய பாதுகாப்பு நிலைகளை நோக்கி ஒரே நேரத்தில் பல நூற்றுக்க... மேலும் பார்க்க

பங்குகள் விற்பனை அதிகரிப்பு: சென்செக்ஸ் சரிவுடன் முடிவு!

நமது நிருபா்இந்த வாரத்தின் நான்காவது வா்த்தக தினமான வியாழக்கிழமை பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்... மேலும் பார்க்க

இந்திய ராணுவ இலக்குகளை தாக்க முயன்ற பாகிஸ்தானுக்கு இந்திய பதிலடி அளிப்பு: பாதுகாப்புத் துறை

ஜம்மு-காஷ்மீா் பகுதிகளில் பாகிஸ்தான் துப்பாக்கிசூட்டினால் 16 அப்பாவிகள் உயிரிழந்துள்ளனா். மேலும் நாட்டின் வடக்கு, மேற்கு பகுதிகளில் இந்திய ராணுவ இலக்குகளை பாகிஸ்தான் ராணுவம் தாக்க முயல தக்க பதிலடி கொட... மேலும் பார்க்க