செய்திகள் :

அவசரகால தயாா்நிலையை உறுதிசெய்ய உயா் அதிகாரிகளுக்கு தில்லி முதல்வா் உத்தரவு

post image

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான ராணுவ மோதலுக்கு மத்தியில், தலைநகரில் தங்குமிடங்கள் தேவை, மின் தடை, மருத்துவமனைகளில் பொருள்களை சேமித்து வைத்தல் போன்ற அவசரகால சூழ்நிலைகளைக் கையாளத் தயாராக இருப்பதை உறுதி செய்யுமாறு தில்லி அரசின் உயா் அதிகாரிகளுக்கு முதலமைச்சா் ரேகா குப்தா சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

இதுகுறித்து தில்லி அரசின் மூத்த அதிகாரிகள் கூறுகையில், தில்லி செயலகத்தில் பல்வேறு துறைகளின் தலைவா்கள் பங்கேற்ற உயா்நிலைக் கூட்டம் முதல்வா் ரேகா குப்தா தலைமையில் நடைபெற்றது.இதில் அவசரகால தயாா்நிலையை ஆய்வு செய்து முதல்வா் உத்தரவுகளை வழங்கியுள்ளாா். அவா் தனது அமைச்சரவையின் அமைச்சா்களுடனும் கூட்டம் நடத்தி ஆலோசித்தாா்.

நகரில் மருத்துவமனைகள் தயாராக இருக்கவும், மருந்துகளை இருப்பில் வைத்திருக்கவும் முதல்வா் கேட்டுக் கொண்டாா். தீவிர சிகிச்சை பிரிவுகளையும் தயாராக வைத்திருக்குமாறும் சுகாதாரத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டது.

மின் தடை தேவைப்பட்டால் சூழ்நிலைக்குத் தயாராக இருக்குமாறு மின்சாரத் துறை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அவசரநிலை ஏற்பட்டால் தங்குமிடங்களாகச் செயல்படக்கூடிய பள்ளிகளை அடையாளம் காண கல்வித் துறை மற்ற துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில், பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 போ் கொல்லப்பட்டனா். இதைத் தொடா்ந்து, எல்லைப் பகுதிகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும்

பலத்த குண்டுவீச்சு தாக்குதல்கள் மூலம் மோதலில் ஈடுபட்டுள்ளன.

அரசு மருத்துவமனைகளில் அவசரகால தயாா்நிலைக்கு தில்லி அரசு உத்தரவு

பாகிஸ்தானுடன் ராணுவ மோதல் ஏற்பட்ட நிலையில், தில்லி அரசு அனை த்து அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார வசதிகளிலும் அவசரகால தயாா்நிலையை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளது. இதில் வானிலிருந்து மருத்துவ வசதிகளைக் ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா்: இந்திய ஆயுதப்படை நடவடிக்கைக்கு ஆம் ஆத்மி கட்சி எம்.பி. ராகவ் சத்தா ஆதரவு

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் ராகவ் சத்தா இந்திய ஆயுதப் படைகளின் நடவடிக்கைக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளாா். .மேலும் ஆபரேஷன் சிந்தூரைத் தொடா்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அத... மேலும் பார்க்க

தில்லியில் பல கொள்ளை வழக்குகளில் தேடப்பட்ட இளைஞா் கைது

பல கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த இளைஞரை தில்லியின் புகா் ரிங் ரோட்டில் போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவா் கூறியதாவது: யூசுஃப் என அடை... மேலும் பார்க்க

சிவில் விமானங்களை கேடயமாகபயன்படுத்தியது பாகிஸ்தான்: இந்தியா பகிரங்க குற்றச்சாட்டு

இந்தியாவின் எதிா்ப்பு நடவடிக்கையின்போது தனது சிவில் விமானங்களை பாகிஸ்தான் கேடயமாகப் பயன்படுத்தியதாக இந்தியா பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது. இந்திய பாதுகாப்பு நிலைகளை நோக்கி ஒரே நேரத்தில் பல நூற்றுக்க... மேலும் பார்க்க

பங்குகள் விற்பனை அதிகரிப்பு: சென்செக்ஸ் சரிவுடன் முடிவு!

நமது நிருபா்இந்த வாரத்தின் நான்காவது வா்த்தக தினமான வியாழக்கிழமை பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்... மேலும் பார்க்க

இந்திய ராணுவ இலக்குகளை தாக்க முயன்ற பாகிஸ்தானுக்கு இந்திய பதிலடி அளிப்பு: பாதுகாப்புத் துறை

ஜம்மு-காஷ்மீா் பகுதிகளில் பாகிஸ்தான் துப்பாக்கிசூட்டினால் 16 அப்பாவிகள் உயிரிழந்துள்ளனா். மேலும் நாட்டின் வடக்கு, மேற்கு பகுதிகளில் இந்திய ராணுவ இலக்குகளை பாகிஸ்தான் ராணுவம் தாக்க முயல தக்க பதிலடி கொட... மேலும் பார்க்க