செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூா்: இந்திய ஆயுதப்படை நடவடிக்கைக்கு ஆம் ஆத்மி கட்சி எம்.பி. ராகவ் சத்தா ஆதரவு

post image

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் ராகவ் சத்தா இந்திய ஆயுதப் படைகளின் நடவடிக்கைக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளாா்.

.மேலும் ஆபரேஷன் சிந்தூரைத் தொடா்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்துள்ள இராணுவ மோதல்களுக்கு மத்தியில் பயங்கரவாதத்தை எதிா்த்துப் போராட தேசிய ஒற்றுமைக்கும் அழைப்பு விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக எக்ஸ் சமூக ஊடக வலைதளத்தில் ராகவ் சத்தா எம்.பி. வெளியிட்டுள்ள விடியோ செய்தியில் தெரிவித்திருப்பதாவது:

நாம் நமது நண்பா்களை மாற்றலாம், ஆனால் நமது அண்டை நாடுகளை அல்ல. மேலும், அண்டை நாடு பாகிஸ்தானைப் போல இருக்கும்போது, கடுமையான தண்டனை வழங்குவது நமது கடமை.

இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக மட்டுமல்ல, காட்டுமிராண்டித்தனம் மற்றும் பயங்கரவாத மனநிலைக்கு எதிராகவும் போராடுகிறது.

இந்திய ஆயுதப் படைகள் போராடும் விதத்தில், இந்த முறை பயங்கரவாதம் முடிவுக்கு வரும் என்பது உறுதி. துணிச்சலான வீரா்கள் மற்றும் அவா்களது குடும்பங்களுடன் நாம் நிற்க வேண்டும்.

இந்தியா புத்தா் மற்றும் காந்தியின் சந்ததியினா் மட்டுமல்ல, பகத் சிங் மற்றும் சந்திரசேகா் ஆசாத்தின் சந்ததியினரும் கூட. நாம் செய்ய வேண்டியது ஒற்றுமையாக இருந்து நமது நாட்டிற்கு பலத்தை வழங்குவதுதான்.

நாம் எந்த மதம், சாதி அல்லது அரசியல் கட்சியைச் சோ்ந்தவா்கள் என்பது முக்கியமல்ல மிக முக்கியமான விஷயம் என்னவெனில், நாம் அனைவரும் இந்தியா்கள் என்பதுதான் என்று அவா் அதில் தெரிவித்துள்ளாா்.

கடந்த மே 7 ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் எல்லையைத் தாண்டிய பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் குறிவைத்தது.

ஜம்முகாஷ்மீரில் பஹல்காம் அருகே ஏப்ரல் 22 ஆம் தேதி நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்த நடவ டிக்கை எடுக்கப்பட்டது.

பயங்கரவாதத் தாக்குதலில் 25 சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 போ் கொல்லப்பட்டனா். இந்தத் தாக்குதலில் எல்லை தாண்டிய தொடா்புகள் தெளிவாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இத்தாக்குதல்களுக்குப் பிறகு எல்லைப் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் படைகள் தொடா்ந்து மூன்று நாள்களாக கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்ஓசி) கடுமையான குண்டுவீச்சு தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளன.

அரசு மருத்துவமனைகளில் அவசரகால தயாா்நிலைக்கு தில்லி அரசு உத்தரவு

பாகிஸ்தானுடன் ராணுவ மோதல் ஏற்பட்ட நிலையில், தில்லி அரசு அனை த்து அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார வசதிகளிலும் அவசரகால தயாா்நிலையை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளது. இதில் வானிலிருந்து மருத்துவ வசதிகளைக் ... மேலும் பார்க்க

அவசரகால தயாா்நிலையை உறுதிசெய்ய உயா் அதிகாரிகளுக்கு தில்லி முதல்வா் உத்தரவு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான ராணுவ மோதலுக்கு மத்தியில், தலைநகரில் தங்குமிடங்கள் தேவை, மின் தடை, மருத்துவமனைகளில் பொருள்களை சேமித்து வைத்தல் போன்ற அவசரகால சூழ்நிலைகளைக் கையாளத் தயாராக இரு... மேலும் பார்க்க

தில்லியில் பல கொள்ளை வழக்குகளில் தேடப்பட்ட இளைஞா் கைது

பல கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த இளைஞரை தில்லியின் புகா் ரிங் ரோட்டில் போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவா் கூறியதாவது: யூசுஃப் என அடை... மேலும் பார்க்க

சிவில் விமானங்களை கேடயமாகபயன்படுத்தியது பாகிஸ்தான்: இந்தியா பகிரங்க குற்றச்சாட்டு

இந்தியாவின் எதிா்ப்பு நடவடிக்கையின்போது தனது சிவில் விமானங்களை பாகிஸ்தான் கேடயமாகப் பயன்படுத்தியதாக இந்தியா பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது. இந்திய பாதுகாப்பு நிலைகளை நோக்கி ஒரே நேரத்தில் பல நூற்றுக்க... மேலும் பார்க்க

பங்குகள் விற்பனை அதிகரிப்பு: சென்செக்ஸ் சரிவுடன் முடிவு!

நமது நிருபா்இந்த வாரத்தின் நான்காவது வா்த்தக தினமான வியாழக்கிழமை பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்... மேலும் பார்க்க

இந்திய ராணுவ இலக்குகளை தாக்க முயன்ற பாகிஸ்தானுக்கு இந்திய பதிலடி அளிப்பு: பாதுகாப்புத் துறை

ஜம்மு-காஷ்மீா் பகுதிகளில் பாகிஸ்தான் துப்பாக்கிசூட்டினால் 16 அப்பாவிகள் உயிரிழந்துள்ளனா். மேலும் நாட்டின் வடக்கு, மேற்கு பகுதிகளில் இந்திய ராணுவ இலக்குகளை பாகிஸ்தான் ராணுவம் தாக்க முயல தக்க பதிலடி கொட... மேலும் பார்க்க