செய்திகள் :

எண்ணெய் சருமமா? இதையெல்லாம் செய்யாதீர்கள்!

post image

சருமப் பிரச்னைகள் ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் இருக்கக்கூடியதுதான். சிலருக்கு முகம் எப்போதும் எண்ணெய் வழிந்தாற்போலவே இருக்கும். அவர்களுக்கு ஆயில் சருமம் அல்லது எண்ணெய்ப் பசை சருமம் என்று கூறுகிறோம்.

எண்ணெய் சருமம் கொண்டவர்கள் மிகவும் கவனமாக தங்கள் சருமத்தைப் பாதுகாக்க வேண்டும். அவர்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது?

சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதற்கு அதிகமாக ஸ்க்ரப் செய்யவோ அல்லது பீலிங்(eeling) பேக் போடவோ கூடாது. இதனால் அதிக எண்ணெய்யை சரும செல்கள் வெளியேற்றும். அதனால் வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே ஸ்க்ரப் அல்லது பீலிங் பேக் போட வேண்டும்.

சருமத்தில் எண்ணெய் பசை இல்லாமல் இருக்க நாள் ஒன்றுக்கு இருமுறை கழுவ வேண்டும். ஆல்கஹால் அல்லாத சருமத்தை சுத்தம் செய்யக்கூடிய பேஸ்வாஷை பயன்படுத்தலாம். இதனால் சருமம் பொலிவுடன் இருக்கும்.

மிகவும் கடினமான அழகு சாதனப் பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது. இது எண்ணெய் சருமத்தை மேலும் பாதிக்கும். அதிக ரசாயனங்கள், செயற்கை வாசனைத் திரவியங்கள் நிறைந்த அழகு சம்பந்தப்பட்ட தயாரிப்புகளைப் பயன்படுத்தக் கூடாது.

அதிக ரசாயனங்கள் கலக்காத டோனர்ஸ்களை பயன்படுத்தலாம். இது சருமத்தில் உள்ள எண்ணெய்யைக் குறைக்கும்.

கடினமாக உள்ள மாய்சரைஸர்களைத் தவிர்த்து இலகுவாக உள்ள க்ரீம்களை பயன்படுத்த வேண்டும். ஒட்டுமொத்தமாக சருமத்திற்கு அதிக அழுத்தத்தைக் கொடுக்கக் கூடாது.

கோடையில் வெயிலில் இருந்து தப்பிக்க சன்ஸ்க்ரீன் க்ரீம்களைப் பயன்படுத்தலாம். எண்ணெய் கலக்காத சன்ஸ்க்ரீன்களைபயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

முகத்தை அடிக்கடி தொடுவதைத் தவிர்க்க வேண்டும். இது கையில் இருந்து பாக்டீரியா, அழுக்கு ஆகியவற்றை சருமத்திற்கு கடத்தும். இதனால் எண்ணெய் சருமம் மேலும் பாதிக்கப்படும். முகத்தை தொட வேண்டிய அவசியம் வரும்போது கைகளை கழுவிவிட்டு தொடலாம்.

தோல் நிபுணரின் அறிவுரைப்படி அழகு சாதன தயாரிப்புகளைப் பயன்படுத்துவது நல்லது.

[பொறுப்புத் துறப்பு: இந்தச் செய்திகள் / தகவல்கள் மருத்துவ நூல்கள், இணைய தளங்கள், அனுபவப் பகிர்வுகள் அடிப்படையில் தொகுத்துத் தரப்படுகிற பொதுவான ஆலோசனைகள் மட்டுமே. எந்தவொன்றையும் செயல்படுத்தும் முன் உரிய மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதே நல்லது. எந்த விதத்திலும் ‘தினமணி’ பொறுப்பாகாது.]

இதையும் படிக்க |குழந்தைகள் ஏன் சாப்பிட மறுக்கிறார்கள்? உடல் பருமன் ஏன்? காரணமும் தீர்வும்!

கதாநாயகியாகும் மோகன்லால் மகள்! இயக்குநர் யார் தெரியுமா?

நடிகர் மோகன்லாலின் மகள் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகிறார். இந்தியளவில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் மோகன்லால். மலையாள சினிமாவின் வணிகத்தை உலகளவில் கொண்டு சென்றவர்களில் முதன்மையானவராகக்... மேலும் பார்க்க

விமான நிலையத்தில் பிக் பாஸ் காதலர்களை சந்தித்த ஃபரீனா!

பிக் பாஸ் காதலர்களான செளந்தர்யா நஞ்சுண்டான், விஷ்ணு விஜய் ஆகியோரை நடிகை ஃபரீனா சந்தித்துப் பேசியுள்ளார். விமான நிலையத்தில் அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். பிக் பாஸ் ச... மேலும் பார்க்க

தம்பி அறிமுகமாகும் படத்தில் நடித்த விஷ்ணு விஷால்!

நடிகர் விஷ்ணு விஷால் தன் தம்பி நாயகனாகும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய தம்பி ருத்ராவை நாயகனாக அறிமுகப்படுத்துகிறார். ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்... மேலும் பார்க்க

சீரியலுக்காக கட்டடத் தொழிலாளியாக மாறிய நடிகை!

தனம் தொடருக்காக சின்ன திரை நடிகை சத்யா தேவராஜன், கட்டடத் தொழிலாளியாகவே மாறியுளார். படப்பிடிப்பு தளத்தில் இதற்காகத் தயாராகும் விடியோவை சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் பலர் பகிர்ந்... மேலும் பார்க்க

இதயம் தொடரில் இருந்து விலகிய பாரதி கண்ணம்மா நடிகை!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் இதயம் தொடரில் இருந்து நடிகை ஃபரீனா ஆசாத் விலகுவதாக அறிவித்துள்ளார். இவருக்கு பதிலாக நடிகை சுபலட்சுமி ரங்கன் நடிக்கவுள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள்... மேலும் பார்க்க

கூலி இசைவெளியீட்டு விழா எப்போது?

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. கூலி திரைப்படம் இந்தியளவில் பெரிய வணிக வெற்றியைப் பெறலாம் என கணிக்கப்பட்டுள்ளதால் ரஜினிகாந்த்... மேலும் பார்க்க