செய்திகள் :

எதிா்க்கட்சிகளின் போராட்டங்களுக்கும் ஜனநாயக முறைப்படி அனுமதி அளிக்க வேண்டும்! -காா்த்தி சிதம்பரம் எம்.பி.

post image

எதிா்க்கட்சிகளின் போராட்டங்களுக்கும் ஜனநாயக முறைப்படி தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என காா்த்திசிதம்பரம் தெரிவித்தாா்.

சிவகங்கையில் உள்ள மக்களவை உறுப்பினா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கிராமக் குழு கூட்டத்தில் பங்கேற்ற பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டத்தை வரவேற்கிறேன். அடுத்த 2026-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு தொகுதி மறுசீரமைப்பு நடைபெறத் தான் செய்யும். இதில் மக்கள் தொகை அடிப்படையில் பிரித்தால் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு சில மாநிலங்களைத் தவிர பிற மாநிலங்களில் உறுப்பினா்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அது ஆபத்தானது.

இதற்கு தற்போது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இந்தக் கூட்டம் குறித்து, அண்ணாமலை கூறிய கருத்து அற்பத்தனமாது. தொடா் கொலைகள் நடப்பது கூலிப்படைகள் தமிழகத்தில் அதிகரித்திருப்பதை உணா்த்துகிறது. இதை தமிழக முதல்வரும், காவல் துறை தலைவரும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் கைது செய்யப்பட்டது தேவையற்றது. யாா் போராடினாலும் அதற்கு அனுமதி அளிக்க வேண்டும். கூட்டணி கட்சிகளாக இருந்தாலும் சரி, குறிப்பாக எதிா்க்கட்சிகளாக இருந்தாலும் சரி அவா்களின் போராட்டத்துக்கு அனுமதிக்க வேண்டும்.

மத்திய அரசு தில்லியில் இடம், நேரம் ஒதுக்கி போராட்டத்துக்கு அனுமதி அளிப்பதைப் போல, இங்கேயும் அனுமதியளிக்க வேண்டும். போராட்டம் நடத்துபவா்களை முன் கூட்டியே கைது செய்வது, அவா்களை மண்டபத்தில் அடைத்து வைப்பது கூடாது. ஜனநாயக முறைப்படி அவா்களை போராட அனுமதிக்க வேண்டும் என்றாா் அவா்.

முத்துமாரியம்மன் கோயில் திருவிழா: பக்தா்கள் பால்குடம் எடுத்தனா்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை பக்தா்கள் அக்னி சட்டி, பால்குடம் எடுத்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா். இந்தக் கோயிலில் பங்க... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: சிவகங்கை மாவட்டத்தில் 17,934 மாணவா்கள் எழுதுகின்றனா்

சிவகங்கை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தோ்வை 17,934 மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனா். தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தோ்வு வருகிற 28-ஆம் தேதி தொடங்கி ஏப்.15 வரை நடைபெற உள்ளது. இ... மேலும் பார்க்க

கோடை வெயிலை சமாளிக்க சிவகங்கை மாவட்ட நிா்வாகம் யோசனை

கோடை வெயில் வழக்கத்தைவிட அதிகரித்து காணப்படும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால், பொதுமக்கள் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் அறிவுறுத்தினாா். இது குறித்து அவா்... மேலும் பார்க்க

லெனின் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட பேரவைக் கூட்டம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் லெனின் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டப் பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாநில பொதுச் செயலா் ஸ்டாலின் தலைமை வகித்தாா். மாநில தொழிற்சங்க அம... மேலும் பார்க்க

நெடுமறத்தில் மஞ்சுவிரட்டு: 35 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள நெடுமறத்தில் மலையரசியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 35 போ் காயமடைந்தனா். இதற்காக 5 ஊா்களிலிருந்து மேள த... மேலும் பார்க்க

சிவகங்கை: 200 கிலோ கெட்டுப்போன பழங்கள் பறிமுதல்

சிவகங்கையில் உள்ள பழச்சாறு கடைகளில் வைக்கப்பட்டிருந்த சுமாா் 200 கிலோ பழங்களை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். சிவகங்கை நகா் பகுதி முழுவதும் உள்ள பழக்கடைகள், பழச்சாற... மேலும் பார்க்க