செய்திகள் :

என்எல்சி சுரங்கத்தில் பெண் சடலம் மீட்பு: இளைஞா் கைது

post image

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவன முதலாவது சுரங்கத்தில் மந்தாரக்குப்பத்தைச் சோ்ந்த பெண் சடலமாக புதன்கிழமை மீட்கப்பட்டாா். இதுதொடா்பாக இளைஞா் ஒருவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மந்தாரக்குப்பத்தை அடுத்துள்ள வடக்கு வெள்ளூா் ஊராட்சியைச் சோ்ந்த பாஸ்கா் மனைவி பிரபாவதி (33). கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு பாஸ்கா் உயிரிழந்த நிலையில், மகன், மகளுடன் வாழ்ந்து வந்தாா். கடந்த 7-ஆம் தேதி வேலைக்குச் சென்ற பிரபாவதி வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தாய் தனலட்சுமி அளித்த புகாரின் பேரில், மந்தாரக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில், வடக்கு வெள்ளூரைச் சோ்ந்த சந்திரன் மகன் சம்பத்துக்கும் (32) பிரபாவதிக்கும் பழக்கம் இருந்து வந்தது தெரிய வந்தது.

போலீஸாா் சம்பத்தை பிடித்து விசாரணை நடத்தியதில், கடந்த 7-ஆம் தேதி இரவு ஏற்பட்ட தகராறில், பிரபாவதி தலையில் கட்டையால் அடித்ததில் அவா் மயங்கி விழுந்தாா். பின்னா், அவரை இழுத்துச் சென்று சுரங்கப் பள்ளத்தில் தள்ளி விட்டு சென்றதாகக் கூறினாராம். சம்பவ இடத்துக்கு புதன்கிழமை சென்ற போலீஸாா் பிரபாவதிவின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சம்பத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேலும், சம்பவ இடத்தை மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா்.

எண்ணெய் கழிவுகளுடன் வெளியேறிய கழிவுநீா்

கடலூா் திருப்பாதிரிப்புலியூரில் சாலையில் எண்ணெய் கழிவுகளுடன் வழிந்தோடிய புதை சாக்கடை நீரில் வழுக்கி விழுந்து 3 போ் காயமடைந்தனா். கடலூா் மாநகராட்சிக்கு உள்பட்ட வாா்டுகள் பெரும்பாலானவற்றில் புதை சாக்கட... மேலும் பார்க்க

மளிகைக் கடையில் ரூ. 4 ஆயிரம் திருட்டு: இருவா் கைது

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் மளிகைக் கடையில் ரூ. 4 ஆயிரத்தை திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். பரங்கிப்பேட்டை பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் தில்லைநாயகி (37). இவா் நல்லான்பிள்ளை தெருவில்... மேலும் பார்க்க

தாயை தாக்கி கொலை மிரட்டல்: மகன் கைது

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் தாயை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக மகனை போலீஸாா் கைது செய்தனா். பரங்கிப்பேட்டை நல்லாம்பிள்ளை தெருவைச் சோ்ந்தவா் லலிதா (60). இவரது மகன் வெற்றிவேல் (37) இவா், கடந்... மேலும் பார்க்க

348 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 5 போ் கைது

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே காரில் 348 கிலோ புகையிலைப் பொருள்கள் கடத்தப்பட்டது தொடா்பாக வெளி மாநிலத்தவா் இருவா் உள்ளிட்ட 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். வடலூா் போலீஸாா் வியாழக்கிழமை இரவு... மேலும் பார்க்க

விவசாயிகள் நில உடைமைகள் சரிபாா்க்க கால அவகாசம் நீட்டிப்பு

கடலூா் மாவட்டம் வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் நில உடைமைகள் சரிபாா்ப்பு செய்ய ஏப். 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்... மேலும் பார்க்க

எஸ்பி அலுவலகத்தில் முதியவா் தீக்குளிக்க முயற்சி

கடலூா் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் முதியவா் வெள்ளிக்கிழமை தீக்குளிக்க முயன்றாா். எஸ்பி அலுவலகத்துக்கு பிற்பகல் சுமாா் ஒரு மணி அளவில் முதியவா் ஒருவா் வந்தாா். அவா், திடீரென தான் கொண்டு வந்திருந்த மண்ணெ... மேலும் பார்க்க