செய்திகள் :

`என் உயிருக்கு அவர்களால் ஆபத்து இருந்தது’ - மனைவியை காதலனுக்கு திருமணம் செய்து வைத்த கணவன்

post image

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு முஸ்கான் என்ற பெண் தனது கணவனை காதலன் துணையோடு கொலை செய்து ஊதா கலர் டிரம்மில் போட்டு சிமெண்ட் போட்டு வைத்தார். இச்சம்பவத்தை போன்ற மேலும் சில சம்பவங்களும் நடந்தன.

இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த குர்னம் சிங் என்பவர் உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்புர் அருகில் உள்ள நிகாஷன் என்ற கிராமத்தை சேர்ந்த ராஜ்விந்தர் கவுர் என்ற பெண்ணை திருமணம் செய்திருந்தார். இத்தம்பதிக்கு 18 வயதில் ஒரு மகள் உட்பட 3 குழந்தைகள் இருக்கின்றன.

குர்னம் சிங் விவசாயம் செய்து வருகிறார். காலையில் தோட்டத்திற்கு சென்றால் மாலையில் தான் வருவார். அந்த நேரத்தில் பக்கத்து வீட்டில் வசிக்கும் சத்னம் சிங் என்பவரை ராஜ்விந்தர் கவுர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு காதலாக மாறியது. மூன்று ஆண்டுகளாக அவர்களுக்குள் திருமணம் தாண்டிய உறவு இருந்தது. இது குறித்து குர்னம் சிங்கிற்கு தெரிய வந்தது. உடனே தனது மனைவியிடம் இது குறித்து குர்னம் சிங் பேசிப்பார்த்தார். ஆனால் எதுவும் முடிவுக்கு வந்ததாக இல்லை.

இப்பிரச்னை போலீஸ் நிலையத்திற்கும் சென்றது. அங்கேயும் தீர்வு காணமுடியவில்லை. இதையடுத்து வேறு வழியில்லாமல் தனது மனைவியை கிராமத்தினரை அழைத்து அவர்களது முன்னிலையில் தனது மனைவியை அவரது காதலனுக்கே திருமணம் செய்துவைத்துவிட்டார்.

திருமணம் - சித்தரிப்புப் படம்

அதோடு மூன்று பிள்ளைகளையும் வளர்க்கும் பொறுப்பையும் சத்னம் சிங்கிடம் ஒப்படைத்துவிட்டார். இது குறித்து குர்னம் சிங் கூறுகையில்,''எனது மனைவி மற்றும் அவரது காதலனால் எனது உயிர் மற்றும் சொத்துக்கு அச்சுறுத்தல் இருந்தது. பல இடங்களில் மனைவியின் காதலன் கணவனை கொலை செய்த சம்பவங்களை கேள்விப்பட்டு இருக்கிறேன். எனவே பயத்தில் எனது மனைவியை அவரது காதலனுக்கே திருமணம் செய்துவைத்துவிட்டேன். இப்போது அவர்கள் இருவரும் மகிழ்ச்சியோடு இருக்க முடியும். நானும் உயிரோடு இருக்க முடியும்'' என்று தெரிவித்தார். இதற்கு முன் உத்தரப்பிரதேசத்தில் இது போன்ற ஒரு சம்பவம் நடந்தது. ஆனால் இரண்டு நாளில் மனைவி தனது காதலனை விட்டு விட்டு மீண்டும் கணவன் வீட்டிற்கே வந்துவிட்டார்.

தேர்தல் பத்திரம்: நன்கொடை அளித்த நிறுவனத்திற்கு டெண்டர்? உச்ச நீதிமன்ற தலையீட்டால் பணிந்த மகா. அரசு

மும்பை அருகில் உள்ள தானே என்ற இடத்திலிருந்து மும்பையின் மேற்கு பகுதியில் இருக்கும் பயந்தர் என்ற இடத்தை இணைக்கும் விதமாக, மலை மற்றும் வனவிலங்குகள் வாழக்கூடிய வனப்பகுதி வழியாகப் பூமிக்கு அடியில் சுரங்க ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: "நாங்கள்தான் காட்டின் மன்னர்கள்" - பழங்குடிகளின் வாழ்க்கையைப் பாப் பாடலாக்கும் பெண்

மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே, கட்சிரோலி, கோண்டியா போன்ற மாவட்டங்களில் பழங்குடியின மக்கள் அதிகமாக வசிக்கின்றனர்.பழங்குடியின மக்களுக்காக மாநில அரசு பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தினாலும், அவர்களின்... மேலும் பார்க்க

படுக்கை இல்லாததால் கொரோனா நோயாளியை கொலைசெய்ய சொன்ன அரசு டாக்டர்; கசிந்த ஆடியோவால் சிக்கினார்!

2020-21ம் ஆண்டு இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்தது. மகாராஷ்டிராவில் கொரோனாவின் தாக்கத்தால் ஏராளமான நோயாளிகள் உயிரிழந்தனர். அதிகமான மருத்துவமனைகளில் நோயாளிகளை சேர்த்துக்கொள்ள போதிய இடவசதி ... மேலும் பார்க்க

மும்பை அடுக்குமாடி கட்டடத்தில் 4 மாடிகள்; பிரமாண்டம், சொகுசு! - ரூ.639 கோடிக்கு வாங்கிய லீனா திவாரி

மும்பையில் சொத்துகளின் விலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதுவும் தென்மும்பை, மேற்கு புறநகரில் உள்ள பாந்த்ரா, அந்தேரி போன்ற பகுதியில் கடற்கரையையொட்டி கட்டப்படும் கட்டடத்தில் உள்ள பிளாட்களின் விலை நினை... மேலும் பார்க்க

’வளர்ந்ததும் ராணுவத்தில் சேருவேன்'- ஆபரேஷன் சிந்தூரின்போது ராணுவ வீரர்களுக்கு உதவிய 10 வயது சிறுவன்!

காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு எதிர்வினையாற்றும் விதமாக, மே 7 ஆம் தேதி `ஆபரேஷன் சிந்தூர்’ எனும் துல்லிய தாக்குதலை இந... மேலும் பார்க்க

Vedan: அடையாளத் தேடலிலிருந்து அடையாளமாக மாறிய மலையாள ராப் பாடகர்; யார் இந்த வேடன்?

வேடன்... இப்போதைக்கு மலையாள ஊடகங்களின் பேசுபொருள்.சாதாரணமாக ராப் பாடல்களை எழுதி, பாடி யூடியூபில் பதிவிட்டுக்கொண்டிருந்த அந்த இளைஞருக்கு இன்று கேரளத்தில் பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகியிருக்கிறது.யார் இ... மேலும் பார்க்க