வீடுகளை இழந்த தில்லி மதராஸி கேம்ப் குடியிருப்புவாசிகள் தமிழகம் திரும்பினால் உதவி...
மகாராஷ்டிரா: "நாங்கள்தான் காட்டின் மன்னர்கள்" - பழங்குடிகளின் வாழ்க்கையைப் பாப் பாடலாக்கும் பெண்
மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே, கட்சிரோலி, கோண்டியா போன்ற மாவட்டங்களில் பழங்குடியின மக்கள் அதிகமாக வசிக்கின்றனர்.
பழங்குடியின மக்களுக்காக மாநில அரசு பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தினாலும், அவர்களின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை.
அவர்களுக்கு இன்னும் கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படைத் தேவைகள் கிடைக்காமல்தான் இருக்கின்றன. இதனால் பழங்குடியின மக்களிலிருந்து உயர் பதவிக்கு வருபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது.

மும்பை அருகில் உள்ள கல்யான் என்ற இடத்தில் வசிக்கும் பழங்குடியினத்தைச் சேர்ந்த மகி என்ற 24 வயது பெண் இசைக் கலைஞர், தனது மக்களின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்திப் பாடி இருக்கும் ஒரு பாப் பாடல் சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகப் பரவி இருக்கிறது.
பழங்குடியின சமூக ஆர்வலரான இசைக்கலைஞர் மகி தனது பாடலில் தனது மக்கள் எந்த அளவுக்கு இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாவலர்களாக இருக்கின்றனர் என்பது குறித்து 'Jungle Cha Raja' என்ற பெயரில் ஒரு பாப் பாடலை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
அப்பாடல் இப்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி இருக்கிறது.
அவர் தனது பாப் பாடலில், ''நீங்கள் உங்களது கொடியை வளர்ச்சிக்காக உயர்த்துகிறீர்கள். நான் எனது கொடியை இயற்கைக்காகத் தூக்குகிறேன். வனப்பகுதியை நாங்கள்தான் ஆள்கிறோம்.
நாங்கள் வனப்பகுதியின் உண்மையான பாதுகாவலர்கள். புலிகளின் அச்சுறுத்தல் இருந்தபோதிலும் நாங்கள்தான் வனத்தின் உண்மையான மன்னர்கள்.
நீர், நிலம், காடுதான் பழங்குடியினரின் அடையாளம். பழங்குடியின மக்கள் புயலைப்போல் எழும்போது, காட்டில் உள்ள காற்று கூட வழிவிடும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
அதோடு தனது பாடலில் தன் சமுதாய மக்கள் காட்டிற்குச் சென்று விறகு, தேன் எடுப்பது, அவர்கள் காட்டில் எந்த அளவுக்குக் கஷ்டப்படுகிறார்கள் என்பது குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.

பாப் பாடலில் கவனம் செலுத்துவது குறித்து மகி கூறுகையில், ''ஆரம்பத்தில் நான் கவிதைதான் எழுதிக்கொண்டிருந்தேன். ஆனால் விவசாயிகள் போராட்டத்திற்காக பாப் பாடலில் கவனம் செலுத்தினேன்.
பாப் பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் பிரபலம் என்பதால் அவை பெரிய அளவில் சென்றடையும் என்பதால் அதில் கவனம் செலுத்தினேன்.
இந்தியாவில் 50 சதவீத மக்கள் 25 வயதுக்கு உட்பட்டவர்கள். எனவே கணிசமான மக்களைச் சென்றடைய பாப் பாடல் ஒரு கருவியாக இருக்கும் என்று கருதுகிறேன்'' என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY