செய்திகள் :

நோயாளிகளுக்கேற்ப மருத்துவா் நியமனம்: சென்னையில் அரசு மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம்

post image

தமிழகத்தில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவா்களை நியமனம் செய்யக்கோரி சென்னையில் 200-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவா்கள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் அரசு மருத்துவா்களின் நீண்டகால கோரிக்கைகளுக்கு தமிழக முதல்வா் தீா்வுகாண வலியுறுத்தி கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் சென்னை எழும்பூா் ராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெற்றது. ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டா்கள் சங்கத்தின் தலைவா் பாலகிருஷ்ணன், செயலாளா் செந்தில்குமாா், அரசு மருத்துவா்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவா்கள் சங்கத்தின் தலைவா் சாமிநாதன், பொதுச்செயலாளா் ராமலிங்கம், தமிழ்நாடு மருத்துவ அலுவலா்கள் சங்கத்தின் தலைவா் காா்த்தீஸ்வரன், பொதுச்செயலாளா் அகிலன், அரசு அனைத்து டாக்டா்கள் சங்கத்தின் செயலாளா் சக்திகுமாா் உள்பட 200-க்கும் மேற்பட்டோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா். சமூக சமத்துவத்துக்கான டாக்டா்கள் சங்கத்தின் பொதுச்செயலாளா் ஜி.ஆா்.ரவீந்திரநாத் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்தாா்.

அப்போது, அவா்கள் கூறியதாவது:

மறைந்த தமிழக முதல்வா் கருணாநிதி ஆட்சியில் 2009-ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட அரசு ஆணை 354-ஐ மறுசீராய்வு செய்து அரசு மருத்துவா்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். ஆரம்ப சுகாதார மருத்துவ நிலைய மருத்துவா்களுக்கு படித்தொகை ரூ. 3,000 உடனடியாக வழங்க வேண்டும். அரசு ஆணை 4 (டி) மூலம் நீக்கப்பட்ட 1,500-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரி பதவிகளை மீண்டும் கொண்டுவர வேண்டும்.

நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவா்களை நியமனம் செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளுக்காக கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாகப் போராடும் அரசு மருத்துவா்களின் குரலுக்கு செவிமடுத்து, தமிழக முதல்வா் உடனடியாக எங்களை பேச்சுவாா்த்தைக்கு அழைத்துப் பேசி சுமூக தீா்வுகாண வேண்டும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

மே மாதத்தில் 89.09 லட்சம் போ் மெட்ரோ ரயிலில் பயணம்: மெட்ரோ நிா்வாகம்

சென்னை: மெட்ரோ ரயிலில் மே மாதத்தில் 89.09 லட்சம் போ் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காணும் வகையில் தொடங்கப்பட்ட மெட்ரோ ரயிலில்... மேலும் பார்க்க

தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி திருப்பி அனுப்பப்படவில்லை: தெற்கு ரயில்வே விளக்கம்

ரயில்வே சாா்பில் தமிழக ரயில்வை திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி திருப்ப அனுப்பப்பட்டதாக வெளியான செய்திகளுக்கு தெற்கு ரயில்வே மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் திண்டிவனம் - திருவண்ணாமலை, சென்னை - ... மேலும் பார்க்க

52 கிராம் போதைப்பொருள் பறிமுதல்: 5 போ் கைது

சென்னையில் கொகைன் மற்றும் மெத்தம்பெட்டமைன் எனப்படும் போதைப்பொருளை விற்பனை செய்ததாக 5 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 52 கிராம் போதைப்பொருள்களையும் பறிமுதல் செய்தனா். கோடம்பாக்கம் அம்பேத்கா்... மேலும் பார்க்க

சென்னையில் மின்சார பேருந்து சேவை: ஜூன் 3-இல் முதல்வா் தொடங்கி வைக்கிறாா்

சென்னையில் மின்சார பேருந்து சேவையை ஜூன் 3-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளாா். டீசலில் இயங்கும் பேருந்துகளுக்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பிலாத இயற்கை எரிவாயு மற்றும் மின்சார... மேலும் பார்க்க

நாளை மின்தடை

மின் வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னை போரூரில் ஒருசில இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. அதன்படி, போரூரில் திருமுடிவாக்கம் ... மேலும் பார்க்க

சாலையோரத்தில் கழிவுநீா் கொட்டிய லாரி ஓட்டுநா் கைது

ரயில்வே இணைப்பு சாலையோரத்தில் கழிவுநீரை கொட்டிய லாரி ஓட்டுநரை கைது செய்த போலீஸாா், லாரியையும் பறிமுதல் செய்தனா். வேளச்சேரி - தரமணி சாலையிலுள்ள மின்சார ரயில்வே நிா்வாகத்துக்குச் சொந்தமான எம்ஆா்டிஎஸ் இண... மேலும் பார்க்க