செய்திகள் :

என் குழந்தைகள் யோகா, சிலம்பம் கற்கிறார்கள்; தாய்மொழியில் பேசுகிறேன்: நமீதா

post image

ஆங்கிலம் தெரிந்தால் நல்லதுதான், ஆனால் அதற்கு முன் தாய்மொழிதான் முக்கியம் என வேலூரில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை நமீதா கூறியுள்ளார்.

சர்வதேச யோகா தினத்தையொட்டி வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் சிறப்பு அழைப்பாளராக நடிகை நமீதா ஆகியோர் பங்கேற்றனர். இதில் பள்ளி மாணவ, மாணவியர் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு யோகா செய்தனர். சிறப்பாக யோகா செய்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், "இன்று உலகம் முழுவதும் 170 நாடுகளில் யோகாவைக கொண்டாட பாரத பிரதமரே காரணம். அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். யோகா செய்தால் மகிழ்ச்சி உண்டாகும், வாழ்வு மேம்படும்.

டிசம்பர் 21 தியான தினமாக கொண்டாட வேண்டும் என மோடி கூறியுள்ளார். நம் அனைவரின் நோக்கமும் நல்ல உடல்நலத்தோடு இருக்க வேண்டும் என்பதுதான்" எனக் கூறினார்.

பின்னர் பாஜக பிரமுகரும் நடிகையுமான நமீதா பேசுகையில்,

"யோகா 5 ஆயிரம் வருடம் பழமையானது. 2007ல் பாலிவுட் நாயகி கரீனா கபூர் யோகா மூலம் உடலைக் கட்டுப்பாட்டோடு வைத்தபின் தான் யோகா பற்றி அனைவருக்கும் தெரிய வந்தது.

ஆங்கிலம் தெரிந்தால் நல்லதுதான். ஆனால் அதற்கு முன் கண்டிப்பாக தாய்மொழிதான் முக்கியம். என் குழந்தைகளுக்கு தமிழ், தெலுங்கு, குஜராத்தி தெரியும். ஏனென்றால் இது அவர்கள் தாய்மொழி. என் குழந்தைக்கு ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் தெரியாது, ஆனால் கண்டிப்பாக ஜெய் அனுமன் தெரியும். என் குழந்தைகளுக்கு அனுமன் ரொம்ப இஷ்டம். இதை நான் பெருமையாக தெரிவித்துக்கொள்கிறேன். என் குழந்தைகளோடு நான் வீட்டில் ஆங்கிலத்தில் பேசுவது இல்லை. என் தாய் மொழியில்தான் பேசுகிறேன்" என்றார்.

பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய நமீதா,

"யோகா மிகவும் பழமையானது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாகத்தான் பிரபலமாகி வருகிறது. அது ஏன் என்று தெரியவில்லை. மேலும் என் குழந்தைகளுக்கு நான் யோகா, சிலம்பம் உள்ளிட்டவற்றை கற்றுக் கொடுக்கிறேன். நான் யோகா செய்தது கிடையாது. ஏனென்றால் என் பெற்றோருக்கு அதுபற்றி தெரியாது. தெரிந்திருந்தால் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பேன். ஆனால் நான் ஜிம் செல்கிறேன். எனது கணவர் நன்றாக யோகா செய்வார்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க | நான் என்ன செய்தாலும் எனக்கு நோபல் பரிசு கிடைக்காது! - டிரம்ப் ஆதங்கம்

வால்பாறை அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி காலமானார்

வால்பாறை தொகுதி அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி(60) உடல் நலக்குறைவால் காலமானார். கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமுல் கந்தசாமி சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை காலமானார். அவருக்கு கலைச... மேலும் பார்க்க

இஸ்ரேல் - ஈரான் போர்: தமிழர்களை மீட்க நடவடிக்கை! உதவி எண்கள் அறிவிப்பு!

இஸ்ரேல் - ஈரான் நாட்டிலுள்ள தமிழர்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:தமிழ்நாடு மு... மேலும் பார்க்க

வள்ளுவம் போற்றுதும்! - முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

சென்னை வள்ளுவர் கோட்டம் புதுப்பொலிவு கண்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். சென்னையில் அமைந்துள்ள வள்ளுவா் கோட்டம் கடந்த 10 ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் இருந்த நிலையில் ரூ.80 கோடியில் புனர... மேலும் பார்க்க

திமுகவில் புகைச்சல்; தமிழ்நாட்டை அமித் ஷா பார்த்துக்கொள்வார்! - நயினார் நாகேந்திரன்

திமுகவில் புகைச்சல் இல்லாமல் எப்படி இருக்கும்? என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் அழகர் நகர் பகுதியில் உள்ள பூங்காவில் பாஜக... மேலும் பார்க்க

மகளிர் உரிமைத் தொகை: குடும்பத் தலைவி அல்லாத பெண்களுக்கும் கிடைக்கும்!

சென்னை: தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் ஜூலை 15ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், குடும்பத் தலைவி அல்லாத பெண்களுக்கும... மேலும் பார்க்க

அமித் ஷாவுக்கு ஆங்கிலம் பயமல்ல; ஆனால்..! - அன்பில் மகேஸ் கருத்து

அமித் ஷாவுக்கு ஆங்கிலம் பற்றிய பயமல்ல, அதனால் வளர்ச்சி, சமத்துவம் ஏற்படுகிறதே என பயம் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார். சமீபத்தில் தில்லியில் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய மத்திய உள்துறை அ... மேலும் பார்க்க