செய்திகள் :

``என் மகனை அடித்தால், நானும் உன் குழந்தைகளை அடிப்பேன்..'' - குழந்தைகளை அடித்து உதைத்த லிவ் இன் ஜோடி

post image

கணவன் மனைவி இடையே சண்டை வந்தால் முதலில் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான்.

மும்பை மலாடு பகுதியில் வசித்து வரும் ஷீலா, தனது கணவர் இறந்த பிறகு சஞ்சய் என்பவருடன் 2020-ம் ஆண்டில் இருந்து லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்தார். ஷீலா தனது முதல் திருமணத்தில் பிறந்த மகனை தாயார் வீட்டில் விட்டிருந்தார்.

ஷீலா, சஞ்சயுடன் வாழ்ந்ததில் இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொண்டார். இந்நிலையில், ஷீலா தனது மூத்த மகனை தனது தாயார் வீட்டில் இருந்து அழைத்து வந்து தன்னுடன் தங்க வைத்துக்கொண்டார்.

இதனால் ஷீலா - சஞ்சய் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. ஷீலாவின் மூத்த மகனை சஞ்சய் அடிக்கடி அடித்து உதைத்து வந்தார்.

ஷீலாவின் தாயாரும், அவரது சகோதரியும் ஒரு முறை ஷீலாவின் வீட்டிற்கு சென்று இருந்தனர். அப்போது பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் ஷீலாவின் தாயாரிடம் மூன்று குழந்தைகளையும் இரண்டு பேரும் அடித்து உதைத்து சித்ரவதை செய்வதை கூறியதோடு, அந்த வீடியோ காட்சியையும் காண்பித்தனர்.

இதையடுத்து ஷீலாவின் தாயார், இவர்களை தனது வீட்டிற்கு அருகில் வசிக்க ஏற்பாடு செய்து கொடுத்தார். இதனால் ஷீலாவின் தாயார் அடிக்கடி அங்கு சென்று பார்த்து வந்தார்.

ஷீலாவின் லிவ் இன் பார்ட்னர் சஞ்சய் அடிக்கடி போதைப்பொருள் பயன்படுத்துவதை தெரிந்து கொண்டார். அதோடு போதைப்பொருளை பயன்படுத்திவிட்டு ஷீலாவின் மூத்த மகனை அடித்து உதைப்பதை வழக்கமாக கொண்டிருந்தது தெரிய வந்தது. சஞ்சய் அவ்வாறு அடித்து உதைக்கும்போது ஷீலாவும் தனது பங்கிற்கு சஞ்சய் மூலம் பிறந்த இரண்டு குழந்தைகளையும் அடித்து உதைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இருவரும் மாறி மாறி குழந்தைகளை அடித்து உதைத்து வந்தனர்.

குழந்தைகளை துன்புறுத்தல்

இதையடுத்து ஷீலாவின் தாயார் இது குறித்து மால்வானி போலீஸில் புகார் செய்தார். அவர் தனது புகாரில் மூன்று குழந்தைகளும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அதோடு ஷீலாவின் வீட்டிற்கு சென்றபோது குழந்தைகள் துன்புறுத்தப்படுவதை தெரிந்துகொண்டதாகவும், தனது மகளும், அவரது பார்ட்னரும் திருமணம் செய்து கொண்டார்களா என்று தெரியவில்லை என்றும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். ஷீலா மற்றும் அவரின் லிவ் இன் பார்ட்னர் மீது கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரும் விசாரணைக்கு ஆஜராக போலீஸார் உத்தரவிட்டுள்ளனர். அதோடு மூன்று குழந்தைகளையும் போலீஸார் மீட்டு தொண்டு நிறுவனத்தின் பாதுகாப்பில் தங்க வைத்துள்ளனர்.

சென்னை: 'தடாவில் தொடங்கிய 'வடை' தகராறு' - மயிலாப்பூரில் நடந்த கொலை முயற்சி; என்ன நடந்தது?

சென்னை, மயிலாப்பூர் பகுதியில் வசித்து வரும் நண்பர்களான 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் கடந்த 04.05.2025 அன்று இரவு வீட்டினருகே பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அப்பகுதியைச் சேர்ந்த ... மேலும் பார்க்க

சென்னை: லவ் டார்ச்சர்; இளம்பெண் வீட்டில் ரகளை - இளைஞரை கைது செய்த போலீஸ்!

சென்னை, வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அந்தப் பெண்ணின் மூத்த மகளை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த கோகுல்குமார் என்ற இளைஞர் காதலித்து வந்திருக்கிறார். அதற்... மேலும் பார்க்க

பீகாருக்கு மாற்றி அனுப்பப்பட்ட திருத்தணி தொழிலாளரின் சடலம்; மருத்துவர் இடமாற்றம்; பின்னணி என்ன?

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா அருகிலுள்ள பி. ஆர். பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). கூலித் தொழிலாளரான இவர், குடும்பத் தகராறில் மதுவில் விஷம் கலந்து குடித்தார்.அதனால் ராஜேந்திரனை அவர... மேலும் பார்க்க

அடுத்தடுத்து மோசடி புகார்; வழக்குபதிவு - சிக்கலில் அதிமுக நிர்வாகி, தொழிலதிபர் ஆற்றல் அசோக் குமார்?

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆற்றல் அசோக் குமார். இவரின் மாமியார் சரஸ்வதி மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏவாக இருக்கிறார். அசோக் குமாரும் ஆரம்பத்தில் பாஜகவில் இருந்த நிலையில், பிறகு அதிமுகவி... மேலும் பார்க்க

லக்கி பாஸ்கர் பாணியில் மோசடி; வாடிக்கையாளர்களின் பணத்தைத் திருடி பங்குச்சந்தை முதலீடு; பின்னணி என்ன?

ராஜஸ்தான், கோடாவில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் மக்கள் தொடர்பு மேலாளராக இருந்தவர் சாக்‌ஷி குப்தா. இந்த வங்கியில் பணம் டெபாசிட் செய்திருந்த வாடிக்கையாளர் ஒருவர் தனது பணத்தை எடுப்பதற்காக வங்கிக்கு வந்தார... மேலும் பார்க்க

"ஆள்மாறாட்டம் செய்து ரூ.7.50 லட்சம் மோசடி" - வெளிநாட்டில் கணவரை இழந்த பெண் ஆட்சியரிடம் புகார்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது: 53). இவர், ஈரோடு மாவட்டம், பெருந்துறையிலுள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனம் வாயிலாக, கனடா சென்றிருந்த நிலையில... மேலும் பார்க்க