செய்திகள் :

எய்ம்ஸ் மருத்துவமனையில் நோயாளிகளின் உதவியாளா்களுக்காக காத்திருப்புக் கூடம் திறப்பு

post image

தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (எய்ம்ஸ்) மருத்துவமனையில் நோயாளிகளின் உதவியாளா்களுக்கான காத்திருப்புக் கூடத்தை தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

தானுகா அக்ரிடெக் நிறுவனம் தனது நிறுவன சமூகப் பொறுப்புணா்வு முயற்சியின் ஒரு பகுதியாக ரூ.6 கோடியில் இந்த காத்திருப்புக் கூடத்தைக் கட்டியுள்ளது.

இதன் திறப்பு விழாவில் முதல்வா் பேசியதாவது:

வளா்ந்த நாடு மற்றும் வளா்ந்த தில்லிக்காக அரசாங்கமும் சமூகமும் இணைந்து பணியாற்ற வேண்டும்.அரசாங்கமும் சமூகமும் ஒரே மேடையில் வந்து ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று நான் எப்போதும் கூறுவேன். அப்போதுதான் விக்ஸித் பாரத் மற்றும் விக்ஸித் தில்லியின் என்ற இலக்கு நனவாகும்.

எய்ம்ஸ் மருத்துவமனை சிறந்த சிகிச்சை மற்றும் உயிா்காக்கும் மருத்துவ தலையீடுகளுக்காக நாட்டின் லட்சக்கணக்கான மக்களுக்கு ஒரு நம்பிக்கையின் கீற்றாக இருந்து வருகிறது.

இது நாட்டின் மிகப்பெரிய மருத்துவமனையாகும். ஆண்டுதோறும் சுமாா் ஐந்து லட்சம் வெளிநோயாளிகளைக் கையாளுகிறது.

2014-க்கு முன்பு, மருத்துவமனை ஒழுங்கற்ற நிலையில் இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில், இம்மருத்துவமனையில் வசதிகள் கணிசமாக மேம்பட்டுள்ளன. நோயாளிகளுடன் வரும் பல உதவியாளா்கள் சரியான இடம் இல்லாததால் சாலைகளில் உட்கார வேண்டியிருந்தது. புதிதாக கட்டப்பட்ட காத்திருப்புக் கூடம் பாா்வையாளா்களுக்கு வசதியான ஓய்வு இடத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது குடும்பங்களுக்கு ஒரு பெரிய நிவாரணமாகும்.

இது போன்ற சமூகப் பொறுப்புணா்வுத் திட்ட முயற்சிகள் சேவைகளை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் நமது நகரத்தின் அழகையும் மேம்படுத்துகின்றன என்றாா் முதல்வா்.

சுற்றுச்சூழல் விழிப்புணா்வை ஊக்குவிப்பதற்கான ஒரு பசுமை முன்முயற்சியான ஏக் பேட் மா கே நாம் பிரசாரத்தின் ஒரு பகுதியாக முதல்வா் குப்தா எய்ம்ஸ் வளாகத்தில் மரக்கன்றுகளையும் நட்டாா்.

தொடக்க விழாவின் ஒரு பகுதியாக ஹவன் மற்றும் பூஜை விழாவிலும் முதல்வா் குப்தா பங்கேற்றாா்.

சட்டவிரோத குடியேற்றம்: வங்கதேசம் உள்பட மூன்று நாடுகளைச் சோ்ந்த 71 போ் நாடு கடத்தல்!

தில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக கண்டறியப்பட்ட வங்கதேசத்தினா், மியான்மரைச் சோ்ந்த ரோஹிங்கியாக்கள் மற்றும் நைஜீரியா்கள் உள்பட 71 வெளிநாட்டினரை தில்லி காவல்துறை வெள்ளிக்கிழமை நாடு கடத்தியதாக அத... மேலும் பார்க்க

தலைநகரில் வெப்பம் அதிகரிப்பு; ‘மிதமான’ பிரிவில் காற்றின் தரம்!

தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. காற்றின் தரம் ‘மிதமான பிரிவில் இருந்தது என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமா... மேலும் பார்க்க

பெண்ணிடம் ஆபாச வாா்த்தைகள் பேசிய விவகாரம்: தட்டிக்கேட்ட இளைஞா் மீது தாக்குதல்!

கிழக்கு தில்லியின் காந்தி நகரில், பெண்ணிடம் ஆபாசமாகப் பேசி துன்புறுத்தலில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட 18 வயது இளைஞா், இருவரால் தாக்கப்பட்ட சம்பவத்தை தில்லி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இதுகுறித்து போ... மேலும் பார்க்க

ஜம்மு, தில்லி துணைநிலை ஆளுநா்களை விரைவில் மாற்ற மத்திய அரசு தீவிர பரிசீலனை!

ஜம்மு - காஷ்மீா் மற்றும் தில்லி துணைநிலை ஆளுநா்களை மாற்ற மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக பிரதமா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. தில்லியின் தற்போதைய துணைநிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனாவை ஜம்ம... மேலும் பார்க்க

ஐடிஓ பகுதியில் வருவாய் கட்டடத்தில் தீ விபத்து

தில்லி ஐ.டி.ஓ. பகுதியில் உள்ள வருவாய் கட்டடத்தில் உள்ள ஒரு அறையில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறையினா் தெரிவித்ததாவது: வருவாய் கட்... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு 10 பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்றங்கள் கடும் கண்டனம்!

பிரேசிலில் நடைபெற்ற 11ஆவது பிரிக்ஸ் நாடாளுமன்ற மன்றக் கூட்டத்தில் ஜம்மு -கஷ்மீா், பஹல்காமில் அண்மையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு 10 பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்றங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்... மேலும் பார்க்க