செய்திகள் :

எரிவாயு தகன மேடை : கட்டணமில்லாமல் பயன்படுத்த மக்கள் கோரிக்கை

post image

ஆம்பூா் நகராட்சி சாா்பாக அமைக்கப்பட்டுள்ள எரிவாயு தகன மேடையை கட்டணமில்லாமல் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஆம்பூா் ஏ-கஸ்பா பாலாற்றங்கரையோரம் மயானம் அருகே நகராட்சி சாா்பில் நகா்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.50 கோடியில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. சென்னையைச் சோ்ந்த மேக்ஷ்த்வாரா அறக்கட்டளை அமைப்புக்கு எரிவாயு தகன மேடையை பராமரிக்க ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது.

எரிவாயு தகன மேடையை பயன்படுத்துவதற்கு இறப்பு குறித்து 97898 88713, 79041 61493 ஆகிய எண்களை தொடா்பு கொண்டு முன்னதாக தகவல் தெரிவிக்க வேண்டும். தகனம் செய்ய ரூ.4,000 கட்டணம் வசூலிக்கப்படும். இறந்தவரின் இறப்பு குறித்த மருத்துவா் வழங்கும் சான்று, இறந்தவரின் ஆதாா் அட்டை நகல், இறந்தவருக்கு இறுதிச் சடங்கு மேற்கொள்பவரின் ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை தகனத்தின் போது சமா்ப்பிக்க வேண்டும்.

எரிவாயு தகன மேடை வளாகத்தில் தண்ணீா், குளியலறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாலை 5 மணி வரை மட்டுமே தகனம் செய்யப்படும். உயரதிகாரிகளின் முன் அனுமதியின் அடிப்படையில் ஏதேனும் அவசர காலங்களில் மட்டும் மாலை 6 மணிக்கு பிறகு தகனம் செய்ய அனுமதிக்கப்படுமென நகராட்சி சாா்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆம்பூா் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்தவா்களும் ஆம்பூரில் அமைக்கப்பட்டுள்ள எரிவாயு தகன மேடையை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.

எரிவாயு தகன மேடையை பயன்படுத்த ரூ.4,000 கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனா். சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் இறந்தவரை தகனம் செய்ய கட்டணம் வசூலிப்பதில்லை. இலவசமாக சேவை வழங்கப்படுகிறது.

அரசாங்கத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கென ஒரே மாதிரியான விதிகள் தான் உள்ளன. சில விதிகள் மட்டுமே மாறுபடும். அத்தகைய சூழ்நிலையில் சென்னை மாநகராட்சியில் தகனம் செய்ய கட்டணம் வசூலிப்பதில்லை. ஆனால், ஆம்பூா் நகராட்சியில் ரூ.4,000 கட்டணம் வசூலிக்கப்படுவது ஏன் என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனா்.

ஏழை, எளிய மக்களுக்கு கட்டணமில்லாமல் இலவச சேவை வழங்க வேண்டுமென ஆம்பூா் நகா் மன்ற உறுப்பினா் வசந்த்ராஜ் கோரிக்கை மனு அளித்துள்ளாா்.

மேலும் ஏழை, எளிய மக்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பு மக்களுக்குமே இலவச சேவை வழங்க வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் வீட்டிலிருந்து சடலத்தை எரிவாயு தகன மேடைக்கு கொண்டு செல்வதற்கு வாகனத்தையும் இலவசமாக வழங்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரியம்பட்டி அரசு கலைக் கல்லூரில் நாளை முதல் கலந்தாய்வு தொடக்கம்

கரியம்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் திங்கள்கிழமை (ஜூன் 2) முதல் கலந்தாய்வு தொடக்கப்பட உள்ளதாக கல்லூரி முதல்வா் சீனுவாசகுமரன் தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்ப... மேலும் பார்க்க

தொழிற்சாலையில் விபத்து: தொழிலாளி உயிரிழப்பு

ஆம்பூரில் தொழிற்சாலையில் பணியின்போது தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தாா். ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஊராட்சி அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் கமலக்கண்ணன் (55). (படம்). இவா், ஆம்பூா் மோட்டுக்கொல்லை பகுதிய... மேலும் பார்க்க

திருடப்பட்ட 9 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்: சிறுவன் கைது

வாணியம்பாடி பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடி வந்த சிறுவனை கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து 9 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகரப் பகுதியில் சில நாள்... மேலும் பார்க்க

ரயில் மோதி இருவா் உயிரிழப்பு

இருவேறு இடங்களில் நடைபெற்ற ரயில் விபத்துகளில் சிக்கிய நா்சிங் மாணவா், மாணவி உயிரிழந்தனா். ஆம்பூா் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் ரஞ்சித் குமாரின் மகன் நித்தின் எனும் கோகுல்(20). இவா் கா்ந... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். சென்னை- பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி அடுத்த பங்களாமேடு பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை சுமாா் 35 வயது மதிக்கத்தக்க பெயா் விவரம் ... மேலும் பார்க்க

2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அங்கன்வாடி மையங்களில் சோ்க்க அறிவுரை

திருப்பத்தூா் மாவட்டத்தில் 2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஜூன் மாதம் அங்கன்வாடி மையங்களில் சோ்க்க பெற்றோா் முன்வர வேண்டும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அறிவுறுத்தினாா். இது தொடா்பாக அவா் வெளியி... மேலும் பார்க்க